ஜனாதிபதி ரணில் சிங்கபூர் பிரதமர், ஜப்பான் வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடல்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ ஹசின் லூன் இடையே டோக்கியோ நகரில் இரு தரப்பு பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றுள்ளது.

அத்துடன், ஜனாதிபதி மற்றும் ஜப்பான் வௌிவிவகார அமைச்சர் யோஷிமசா ஹயாஷி இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நேற்று(26) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றார்.

ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் விஜயங்களை நிறைவு செய்துகொண்டு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 30ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.