திருகோணமலையில் பயிற்சி விமானம் விபத்து: இரு விமானப்படையினர் பலி

திருகோணமலை சீனன்குடா விமானப்படைதளத்தில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானமே விபத்தில் சிக்கியுள்ளது.

இந்த விபத்து இன்று (07) முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், பயிற்சியின் போது ஓடுபாதையில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தின் போது விமானத்தில் இருவர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் இருவரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.