துறைமுக நகர சட்டமூலம் தொடர்பான விவாதம் ஒத்திவைப்பு

கொழும்பு துறைமுக நகர விசேட வர்த்தக ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பாராளுமன்றத்திற்கு கிடைக்காமையால், நாளை (05) நடைபெறவிருந்த விவாதம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த விடயத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உறுதிப்படுத்தினார்.