நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கப்படும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு அதரவாக வாக்களிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றைய தினம் நாடாளுமன்றில் அறிவித்துள்ளது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) தலைமை குழு உறுப்பினரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வினோ நோகராதலிங்கம் இதனைத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவினை பெற்றுக் கொண்டு இந்த பிரேரணை தயாரிக்கப்பட்டிருந்தால் இன்னும் பலபம்பொருந்தியதாக அமைந்திருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.