நல்லைக் கந்தனுக்கு 13 ஆம் திகதி கொடியேற்றம்!

வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், ”அலங்காரக் கந்தன்” என அடியவர்களால் போற்றி வழிபடப்படுகின்ற திருத்தலமுமான யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருந் திருவிழா எதிர்வரும்-13 ஆம் திகதி முற்பகல்-10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.

தொடர்ச்சியாக இருபத்தைந்து தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலயப் பெருந் திருவிழாவில் எதிர்வரும்-22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்-04.45 மணியளவில் பத்தாம் திருவிழாவான மஞ்சத் திருவிழாவும், 28 ஆம் திகதி சனிக்கிழமை இரவு-07 மணியளவில் அருணகிரிநாதர் உற்சவமும், 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்-04.45 மணியளவில் கார்த்திகை உற்சவமும், 31 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை-06.45 மணியளவில் சூர்யோற்சவமும், அடுத்தமாதம் 01 ஆம் திகதி புதன்கிழமை காலை-06.45 மணியளவில் சந்தானகோபாலர் உற்சவமும், அன்றைய தினம் மாலை-04.45 மணியளவில் கைலாசவாகன உற்சவமும், 02 ஆம் திகதி வியாழக்கிழமை காலை-06.45 மணியளவில் கஜவல்லி மஹாவல்லி உற்சவமும், 03 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை-06.45 மணியளவில் தெண்டாயுதபாணி உற்சவமும், மாலை-04.45 மணியளவில் ஒருமுகத் திருவிழாவும், 04 ஆம் திகதி சனிக்கிழமை மாலை-04.45 மணியளவில் சப்பரத் திருவிழாவும், 05 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை-06.15 மணியளவில் தேர்த் திருவிழாவும், 06 ஆம் திகதி திங்கட்கிழமை காலை-06.15 மணியளவில் தீர்த்தத் திருவிழாவும், அன்றைய தினம் மாலை-05 மணியளவில் கொடியிறக்க உற்சவமும், 07 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை-04.45 மணியளவில் பூங்காவன உற்சவமும், மறுநாள் மாலை-04.45 மணியவில் வைரவர் உற்சவமும் நடைபெறும்.

இதேவேளை, தற்போது மீண்டும் அதிகரித்து வரும் கொரோனாத் தொற்றுப் பரவல் நிலைமையால் இவ்வாலயத்தின் இவ்வருட மஹோற்சவப் பெருந்திருவிழாவிலும் கடுமையான சுகாதாரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.