நாடாளுமன்ற அமர்வில் ஜனாதிபதி – ஆளும் கட்சியினருக்கு அழைப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை வியாழக்கிழமை இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது நாடாளுமன்றத்திற்கு சமூகமளிக்க வேண்டும் என அறிவறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

ஆளும் கட்சிக்குள் காணப்படும் கருத்து முரண்பாடுகள் தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர்களை ஜனாதிபதி சந்தித்துக் கலந்துரையாடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது