நாட்டில் மேலும் 101 கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 2,011 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது.

அதன் அடிப்படையில் மேலும் 101 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

இலங்கையில் ஒரே நாளில் உறுதி செய்யப்பட்ட அதிகளவான மரணங்களின் எண்ணிக்கை இதுவாகும்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,011 ஆக அதிகரித்துள்ளது.