பதவி விலகுவதற்கு ஜனாதிபதி தயாராகவே உள்ளதாக அறிவிப்பு!

பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை விடுத்தால் ஜனாதிபதி பதவி விலகுவார் என்று சபாநாயகர் கூறியுள்ளார்.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

இதன்படி சபாநாயகர் இடமளித்தால் எதிர்க்கட்சியில் உள்ள அனைவரும் ஏகமனதாக அந்த கோரிக்கையை விடுக்கத் தயாராகவே இருக்கின்றோம் என்றும் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.