பிரதமரின் கூட்டத்தை புறக்கணித்த பங்காளிக்கட்சிகள்

அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகளின் பல தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

வாசுதேவ நானாயக்காரா, உதய கம்மன்பிலா, பேராசிரியர் திஸ்ஸா விட்டாரணா, டாக்டர் ஜி.வீரசிங்க, விமல்வீரவன்சா ஏ.எல்.எம் அதாவுல்லா, டிரான் அலெஸ், அசங்கா நவரத்னே, அதுரலியே ரத்தனா தேரா் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

மாகாண சபைத் தேர்தல் முறை தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக பிரதமரின் தலைமையில் கட்சித் தலைவர்களின் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டதாக அறியப்படுகிறது.

மீண்டும் கூட்டம் எதிர்வரும் 11ம் திகதி அலரிமாளிகையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.