அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச் செயலாளரைச் சந்தித்த மைத்திரிபால!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதி உதவிச் செயலாளர் அஃப்ரின் அக்தருக்குமிடையிலான சந்திப்பு நேற்று (14) அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் இடம்பெற்றது.

இலங்கையின் அரசியல் நிலவரங்கள் குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் உருவாக்கப்பட்ட கூட்டணி மற்றும் இருதரப்பு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கு வழங்கிய ஆதரவுக்கும் தனது பாராட்டுகளை முன்னாள் ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன தெரிவித்தார்.