புலிகளின் வலையமைப்பிற்கு தினமும் ஒரு ரூபாய் வீதம் செலுத்தும் இலங்கை மக்கள் – தனியார் பஸ் சங்க தலைவர்

நாட்டின் ஐம்பது வீதமான மக்கள் விடுதலைப்புலிகளின் புலம்பெயர் வலையமைப்பிற்கு நாளாந்தம் ஒரு ரூபாயாவது செலுத்துகின்றனர் என இலங்கை தனியார் போக்குவரத்து சங்க தலைவர் கெமுனு விஜயரட்ண தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் அமைப்பும் ஐஎஸ் அமைப்புமே தற்போது அதிகளவு நிதியை பெறும் பயங்கரவாத அமைப்புகள் என அவர் தெரிவித்துள்ளார்.

நான் மேற்கொண்ட ஆய்வின் போது இது தெரியவந்தது. அனேக நிதி நிறுவனங்கள் விடுதலைப்புலிகளின் நிதியிலேயே இயங்குகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

அவர்கள் தாங்கள் சேகரித்த பணத்தை உள்ளுர் அரசியல்வாதிகளிற்கு வழங்குகின்றனர். அரசாங்க ஊழியர்களும் தொழிற்சங்கங்களும் அவர்களை நம்பியே உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரின் விசாரணைகளை விடுதலைப்புலிகளும் ஐஎஸ் அமைப்பினரும் குழப்புவதால் பொலிஸார் இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ள முடியவில்லை.

இதன் காரணமாகவே பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கும் உத்தேச ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலத்திற்கும் எதிர்ப்பு உருவாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.