பொதுமக்களின் உரிமைகளை கட்டுப்படுத்தும் அதிகாரங்களை பொலிஸாருக்கு வழங்க வேண்டும் – இலங்கை மனித உரிமை ஆணைக்குழு

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் மூலம் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை கட்டுப்படுத்தும் அதிகாரங்களை பொலிஸாருக்கு வழங்கவேண்டாம் என இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்த தனது அவதானிப்புகள் குறித்து இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கு கடிதமொன்றை எழுதியுள்ளது.

பயங்கரவாதகுற்றம் என்பதற்கான வரைவிலணக்கத்தை கணிசமான அளவில் குறைக்கவேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அரசமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி பயங்கரவாத குற்ற சந்தேகநபருக்கு எதிராக பிறப்பிக்கப்படும் தடுப்பு உத்தரவு நீதித்துறையின் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படுவதை உறுதி செய்யவேண்டும் எனவும் மனித உரிமை ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

பயங்கரவாத குற்றச்செயல்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட எந்த சந்தேகநபருக்கும் எந்த நேரத்திலும் பிணைவழங்கும் அதிகாரம் நீதிபதிகளிற்கு வழங்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் எனவும் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சுதந்திரம் பறிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் சட்டத்தின் உதவியை நாடுவதற்கான உரிமை வழங்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் என தெரிவித்துள்ள இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு இந்த உரிமையை கண்மூடித்தனமான நியாயமற்ற நிபந்தனைகள் இன்றி வழங்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை கட்டுப்படுத்தும் அதிகாரங்களை பொலிஸாருக்கு வழங்கவேண்டாம் எனவும் இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு நீதியமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளது.