மத்திய வங்கி ஆளுநர் யாழ். பல்கலைக்கு விஜயம்

மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தலைமையிலான குழுவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டனர்.

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறீசற்குணராஜாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து, சமகால விவகாரங்கள் தொடர்பில் இந்தக் குழுவினர் கலந்துரையாடினர்.

இதன்போது பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்களுக்கு அரசாங்கத்தின் தற்போதைய பொருளாதாரக் கொள்கைகள், நெருக்கடிகள் தொடர்பிலும் மத்திய வங்கி ஆளுநர் குழுவினர் விளக்கமளித்தனர்.

அத்தோடு, சந்திப்பில் கலந்துகொண்டவர்களின் கேள்விகளுக்கும் மத்திய வங்கி ஆளுநர் பதிலளித்தார்.

இந்த கலந்துரையாடலில் மத்திய வங்கி ஆளுநரோடு, மத்திய வங்கியின் பணிப்பாளர்கள், பிரதி பணிப்பாளர்கள் மற்றும் வட பிராந்திய முகாமையாளர் உட்பட 8 பேர் கலந்துகொண்டனர்.