மனித உரிமை மீறல்கள் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களில் இலங்கை பின்னோக்கி வேகமாக பயணிக்கின்றது

இலங்கை மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களில் பின்னோக்கி வேகமாக பயணிக்கின்றது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆசியப் பிராந்தியத்தின் பிரதிப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை இன்னமும் தவறான நிர்வாகம் மற்றும் பொறுப்புக்கூறல் குறைபாடு காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் துன்பத்துக்கு உள்ளாகி வருகின்றது.

சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் விடயத்தில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, கருத்து வெளியிடும் சுதந்திரத்தினை கட்டுப்படுத்துவதிலும், சர்வதேச மனித உரிமைகளை மட்டுப்படுத்துவதிலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகத்தின் கீழாக இலங்கையானது மனித உரிமைகள் விடயத்தில் வேகமாக பின்நோக்கிச் செல்கின்றது.

விக்கிரமசிங்கவின் அரசாங்கம் ‘காணாமல் போனவர்களின்’ குடும்பங்களுக்கு பதில்களை வழங்குவதாகவும், துஷ்பிரயோகங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதாகவும் உறுதியளித்தது.

அத்துடன், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்ந்து சர்வதேச கவனத்தின் அவசியத்தை வெளிப்படுத்துகின்றன. இலங்கையில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் சட்டமூலத்தை, உள்நாட்டுப் போர் அட்டூழியங்களுக்குத் தீர்வு காண்பதாகக் கூறப்படும் நிலையில், அதிகாரிகள் தொடர்ந்தும் மௌனமாகவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை கையாள்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம், இந்த ஆண்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு அரியல் அமைப்பின் ஊடாக அதிகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர் மக்களை அடக்குறைக்கு உட்படுத்தும் அடைக்குமுறைச் சட்டத்தினை அமுலாக்குவதற்கு தயாராகியுள்ளார்.

அத்துடன்,1990 களில் இருந்து தொடர்ந்து வந்த இலங்கை அரசாங்கங்கள் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து ஆராய குறைந்தது 10 ஆணைக்குழுக்களை நியமித்துள்ளன.

அந்த வகையில் தற்போதைய புதிய சட்டங்கள் வெறுமனே முந்தைய தோல்வியுற்ற முயற்சிகளை பிரதிபலிப்பதோடு பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளைப் புறக்கணித்துள்ளதோடு இலங்கையின் சர்வதேச சட்டக் கடமைகளை நிறைவேற்றுவதில் மிகவும் பின்தங்கிய செயற்படுகளையே வெளிப்படுத்துவதாக உள்ளது என்றார்.

தனிப்பட்ட முறையில் திலித் ஜயவீரவும் மவ்பிம ஜனதா கட்சியும் நாட்டு மக்களிடம் இருந்து எதையும் எதிர்பார்க்கும் குழு அல்ல. எனவே நீங்கள் எங்களை நம்பலாம். இந்த இலங்கை அரசியலில் 75 வருடங்களாக தொடர்ந்து சீரழிக்கப்பட்ட அரசியலுக்கு முடிவு கட்டுவோம்’’ என்றார்.