மன்னாரில் பாடல் தளமாக விளங்கும் அருள்மிகு கௌரியம்மை உடனாய திருக்கேதீச்சரநாதர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேப் பெருவிழா

மன்னாரில் பாடல் தளமாக விளங்கும் அருள்மிகு கௌரியம்மை உடனாய திருக்கேதீச்சரநாதர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேப் பெருவிழா வியாழக்கிழமை (30.06.2022) கர்மாரம்பம். இதைத் தொடர்ந்து எண்ணெய்க் காப்பு மஹா கும்பாபிஷேகம் 06.07.2022 இடம்பெறும்.

மன்னார் பாடல் தளமான திருக்கேதீஸ்வரம் ஆலய புனரமைப்பைத் தொடர்ந்து இவ் ஆலயத்தில் கும்பாபிஷேகம் இடமபெறுவதற்கான சகல எற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதாவது இவ் ஆலய திருத்தல் வேலைகளுக்காக அங்கு இருந்த விக்கிரங்கள் யாவும் ஆலயப் பகுதியிலிருந்து வெளியில் கொண்டு வரப்படடிருந்தன

தற்பொழுது இவ் ஆலய புனரமைப்பு வேலைகள் பூர்த்தி அடைந்த நிலையிலேயே இவ் விக்கிரங்கள் யாவும் அதன் இடங்களில் மீண்டும் வைக்கும் நிகழ்வாகவே இவ் நிகழ்வு இடம்பெறுகின்றது.

இதை முன்னிட்டு திருக்கேதீஸ்வர ஆலயத்தில் 30.06.2022 அன்று வியாழக்கிழமை பகல் 10.45 மணிக்கு இதற்கான கர்மாரம்பம் கிரிகைகள் வழிபாடுகள் ஆரம்பமாகின்றது.

எதிர்வரும் 03.07.2022 அன்று இவ் ஆலயத்திலிருந்து வெளி கொண்டுவரப்பட்ட விக்கிரங்கள் அந்தந்த இடங்களில் வீற்றிருக்கும் ஏற்பாடுகள் இடம்பெறும்.

இதைத் தொடர்ந்து எண்ணெய் காப்பு சடங்குகள் 3,4.5 ந் திகதிகளில் (03,04,05.07.2022) இடம்பெறும்.

இதைத் தொடர்ந்தே 06.07.2022 அன்று புதன்கிழமை காலை 9 மணி முதல் 10.30 மணி வரையான உத்தர நட்சத்திரம் சிம்மலக்கின நன்முகூர்த்தத்தில் கும்பாபிஷேக நிகழ்வுகள் இடம்பெறும்

இவ் கும்பாபிஷேக நிகழ்வுக்கு இலங்கையிலுள்ள பிரசித்திப் பெற்ற குருக்கள் சிவச்சாரிகள் அத்துடன் இந்தியாவிலிருந்தும் முப்பதுக்கு மேற்பட்ட குருக்களும் மற்றும் நல்ல ஆதினத்தினரும் பலர் கலந்து கொள்ள இருப்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேவாரங்கள் திருப்பாடல்கள் பாடுவோரும் இந்தியாவிலிருந்து வருகை தர இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் ஆலயத்தில் சிவன் மற்றும் அம்பள் அவர்களை சுற்றி 24 சந்நிதிகள் காணப்படுகின்றன. இவர்களுக்கே இவ் கும்பாபிஷேகம் நடைபெறும்.

பின் 07.07.2022 மண்டல அபிஷேகம் இடம்பெறும். நாளாந்தம் இரண்டு பெரிய பூiஐகள் 48 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும்.

இவ் ஆலயம் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் புனரமைப்பு வேலைகள் ஆரம்பமாகிய நிலையிலேயே தற்பொழுது பூர்த்தி அடைந்த நிலைக்கு வந்துள்ளது

இவ் புனரமைப்பு வேலைகளுக்கு என இந்திய அரசாங்கம் 325 மில்லியன் ரூபாவும் இத்துடன் சுமார் 480 மில்லியன் ரூபா ஆலய நிதி பக்தர்கள் மற்றும் வெளிநாடு உள்நாடு நலன் விரும்பிகளின் நிதியிலும் இவ் வேலைகள் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது எனவும் தெரிவிக்க்பட்டுள்ளது.