மன்னார் கோரைக் குளம் புனரமைப்பு அங்குரார்ப்பண நிகழ்வு

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச செளபாக்கிய கொள்கையின் கீழ் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் “நீர்ப்பாசனச் செழிப்பு” எனும் 5000 கிராமிய விவசாயக் குளங்கள் மற்றும் அணைக் கட்டுக்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் பிரகாரம் மன்னார் மாவட்டத்தில் சுமார் 138 குளங்களை மறு சீரமைப்புச் செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய மன்னார் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தாராபுரம் கோரைக் குளம் புனரமைப்புக்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று சனிக்கிழமை(06) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி- ஸ்டான்லி டிமேல் நெறிப்படுத்தலில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் பிரதம அதிதியாக கலந்துகொண்டு நிகழ்ச்சித் திட்டத்தினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.மேலும் இந்த நிகழ்வில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், மன்னார் பிரதேச செயலாளர் பிரதீப், நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர், மன்னார் மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர், நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள், மன்னார் மாவட்டச் சமூர்த்திப் பணிப்பாளர், கமக்கார அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.