மலையகம் 200 நடைப்பவனி இன்றுடன் நிறைவு

‘வேர்களை மீட்டு உரிமை வென்றிட’ எனும் தொனிப்பொருளில் மலையகம் 200 எனும் நடைபவனியின் இறுதி நாளான இன்று நாலந்தாவிலிருந்து புறப்பட்டு மாத்தளையை நோக்கி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாத்தளையை சென்றடையவுள்ள குறித்த நடைபவணியின் இறுதி நிகழ்வுகள் மாத்தளை முத்துமாரியம்மன் ஆலய மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதன்போது குறித்த நடைபவணியின் கோரிக்கைகளை உள்ளடக்கிய அறிக்கையொன்றும் வெளியிடப்படவுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வு கடந்த ஜூலை 28ஆம் திகதி தலைமன்னாரில் உள்ள புனித லோரன்ஸ் தேவாலயத்தில் ஆரம்பமானது.

அன்றைய தினம் மலையகம் 200இன் நினைவாக எழுப்பப்பட்ட நினைவுத்தூபிக்கு மக்கள் மரியாதை செலுத்தினர்.

அதனை தொடர்ந்து அடுத்த நாள் 29ஆம் திகதி தலைமன்னார் தேவாலய வளாகத்திலிருந்து குறித்த நடைபயணம் ஆரம்பமானது.

இதேவேளை தழிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் நுவரெலியா தொடக்கம் தலவாக்கலை வரையிலும் ஹட்டனிலிருந்து தலவாக்கலை வரையிலும் நடைபவணியொன்று இடம்பெற்று வருகின்றது.

மலையகம் 200 எனும் தொனிப்பொருளின் கீழ் குறித்த நடைபவணி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.