முல்லைத்தீவில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினால் 1.2 மில்லியன் உலர் உணவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்திலும் நாளாந்தம் கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்வாதாரத்தை கொண்டு நடத்துவதில் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அந்த வகையில் பல்வேறு உலர் உணவு பொதிகள் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் இன்னும் பல குடும்பங்கள் நாளாந்த உணவுக்காக அல்லல்படுகின்ற நிலைமை நீடித்து வருகின்றது.

அந்த வகையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று புலம்பெயர் தேசத்தில் வாழுகின்ற திருவாளர் யோகன் விஸ்வநாதன் அவர்களுடைய நிதிப் பங்களிப்பில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினால் முல்லைத்தீவு வவுனியா மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பணி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 1.2 மில்லியன் ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகள் ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்குகிற நடவடிக்கை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ரெலோ முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினரும் ஆன ஆண்டிஐயா புவனேஸ்வரன் மற்றும் ரெலோ புதுக்குடியிருப்பு பிரதேச சபை உப தவிசாளர் க.ஜெனமேஜெயந் ஆகியோர் கலந்து கொண்டு இந்த நிவாரண நடவடிக்கைகளை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.