மூன்று மாதங்களில் நாட்டின் கடன் 685. 6 கோடி டொலர்களால் உயர்வு

இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் உள்நாட்டு கடன் அதிகரிப்பால் நாட்டின் மொத்த கடன் 685. 3 கோடி டொலர்களால் அதிகரித்துள்ளது என்று திறைசேரியின் பகுப்பாய்வு அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. கடந்த மார்ச் மாத இறுதியில் நாட்டின் மொத்த பொதுக்கடன் 8 ஆயிரத்து 470. 3 கோடி டொலர்களில் இருந்து 9 ஆயிரத்து 156. 1 கோடி டொலர்களாக அதிகரித்துள்ளது.

கருவூல உண்டியல்கள், கருவூல பத்திரங்கள், பாதுகாப்பு அமைச்சின் கடன் கணக்கு, ஓய்வூதிய பணிக்கொடை போன்ற பல வடிவங்களில் அரசாங்கம் மேலும் கடன் வாங்கியதால் உள்நாட்டுக் கடன் கடந்த ஆண்டு டிசெம்பரில் 4 ஆயிரத்து 12 கோடி டொலர்களில் இருந்து மார்ச் மாதத்துக்குள் 4ஆயிரத்து 689 கோடி டொலர்களாக உயர்ந்தது.

இந்த ஆண்டு மார்ச் இறுதியில் அரசின் மொத்த வெளிநாட்டுக் கடன் 3 ஆயிரத்து 609 கோடி டொலர்களாக இருந்தது. முக்கிய கடனாளிகளான உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் ஆயிரம் கோடி டொலர்கள், பாரிஸ் கிளப் நாடுகளிடம் 454 கோடி டொலர்கள், பாரிஸ் கிளப் அல்லாத நாடுகளிடம் 678 கோடி டொலர்கள் மற்றும் வணிகக் கடன்கள் ஆயிரத்து 470 கோடி டொலர் கடன் ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகின்றது. அத்துடன், வெளிநாட்டு கடன்களில் 70 வீதம் நிலையான வட்டி வீதத்தையும் 29 வீதம் தளம்பல் கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது