யாழ்ப்பாணத்தில் பூரண ஹர்த்தால் முன்னெடுப்பு

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை கண்டிக்கும் வகையில் 7 தமிழ் அரசியல் கட்சிகளால் கதவடைப்புக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் வெள்ளிக்கிழமை (20) பூரண கதவடைப்பு பொது முடக்கத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில், யாழ்ப்பாணம் மாநகரசபைக்குட்பட்ட யாழ்ப்பாண மத்திய பேரூந்து நிலையம், யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதி,ஸ்ரான்லி வீதி, ஆஸ்பத்திரி வீதி, முனிஸ்வரா வீதி, கே.கே.எஸ் வீதி ஆகிய வியாபார, நகை கடைத்தொகுதிகள் அனைத்தும் ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்து மூடப்பட்டிருந்தன.

 

வெறிச்சோடிய நிலையில் யாழ்ப்பாணம் மத்திய நகரப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டதை அவதானிக்க முடிந்துள்ளது.