ரிஷாட்டை கட்சியில் இருந்து இதுவரை இடை நீக்கவில்லை – எதிர்க்கட்சி மீது ஆளும்தரப்பு குற்றச்சாட்டு

ரிஷாட் பதியுதீனை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்ய எதிர்க்கட்சி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஆளும்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் ரிஷாட்பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த நிலையில் உயிரிழந்த 16 வயது சிறுமி தொடர்பான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.