`ரெலோ` குகனின் நினைவேந்தல்

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட முன்னாள் பொறுப்பாளரும் மத்திய குழு உறுப்பினருமான கிறிஸ்டி குகராஜாவின் (குகன்) 23வது நினைவு தினம், வைரவப்புளிங்குளம் `யங் ஸ்ரார்` விளையாட்டு மைதானத்துக்கு முன்பாகவுள்ள அன்னாரின் நினைவுத் தூபியில் நேற்று (15) நடைபெற்றது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அன்னாரது தூபிக்கு மலர்மாலை அணிவித்து, ஒளிதீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் இதில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.