லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் அமெரிக்காவில் வெளிவந்த கட்டுரையை கண்டித்துள்ள இலங்கை

அமெரிக்காவின் வோஷிங்டன் போஸ்டில் வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான கட்டுரையை இலங்கை அரசாங்கம் கண்டித்துள்ளது.

இலங்கையின் வெளியுறவு செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

தமது தந்தையான சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொல்லப்பட்ட சம்பவத்தில் நீதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறி கோட்டாப ராஜபக்சவின் அரசாங்கத்தை லசந்த விக்ரமதுங்கவின் மகளான அஹிம்சா விக்ரமதுங்க தெரிவித்த கருத்தை மையமாக வைத்தே இந்தக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

அந்தக் கட்டுரையை தனிப்பட்ட முறையில் படிக்கவில்லை, எனினும் இந்த கட்டுரையானது, இலங்கைத் தலைவர்கள் மீது பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் தடைகளை விதிக்க சர்வதேச சமூகத்தை அணிதிரட்டுவதற்கான ஒரு முக்கிய காரணியாக அமைந்துள்ளது.

அத்துடன் இலங்கையை அழிக்க பலர் உள்ளனர் என்று கொலம்பகே தெரிவித்துள்ளார். இதேவேளை எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் புலம்பெயர் குழுக்கள் உட்பட்ட பலர் இலங்கைக்கு எதிராக செயற்படுவதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றம் சுமத்தியுள்ளார்.