வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களிடம் மத்திய வங்கி கோரிக்கை!

கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் மூன்றாம் அலை காரணமாக உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளின் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்கு விடும் கம்பனிகளின் கடன்பெறுநர்கள் எதிர்கொண்டுள்ள இன்னல்களைப் பரிசீலனையில் கொண்டு, இலங்கை மத்திய வங்கியானது கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கும் தனிப்பட்டவர்களுக்குமான சலுகைகளைப் பற்றிய 2021ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க சுற்றறிக்கையை வெளியிடுவதன் மூலம் பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களுக்கு பின்வருமாறு சலுகைகளை வழங்குமாறு வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களைக் கோரியுள்ளது.

1. செயற்படுகின்ற கொடுகடன் வசதிகளுக்காக வழங்கப்பட்டுள்ள சலுகைகள்

(அ) 2021 மே 15 திகதி அன்று செயற்படுகின்ற வகையினுள் காணப்படுகின்ற கொடுகடன் வசதிகள் தொடர்பில், தகைமையுடைய கடன்பெறுநர்களின் நிதிசார்ந்த இன்னல்களைக் கருத்திற்கொண்டு (தொழில் இழப்பு, வருமானம்/ சம்பளங்கள் அல்லது விற்பனைகள் இழப்பு அல்லது குறைவு, வியாபாரத்தினை மூடுதல் போன்ற) 2021 ஆகஸ்ட் 31 வரையான காலப்பகுதின் போது விடயத்திற்கு விடயம் என்ற அடிப்படையில் மூலதனம், வட்டி அல்லது இரண்டினதும் அறவீட்டினைப் பிற்போடுதல்.

(ஆ) வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள், பிற்போடப்பட்ட தொகை மீது மாத்திரம் அத்துடன் பிற்போடப்பட்ட காலப்பகுதிக்காக 2021 மே 19ஆம் திகதி அன்று உள்ளவாறான 364 நாட்கள் திறைசேரி உண்டியல்கள் ஏல வீதத்துடன் ஆண்டிற்கு 5.5 சதவீதத்தினைக் கூட்டிய வீதத்தினை (அதாவது ஆண்டிற்கு 10.68 சதவீதம்) விஞ்சாத வட்டி வீதத்தினை அறவிடலாம்.

(இ) மாற்றுவழியாக, வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள், கடன் பெறுநரின் மீள்கொடுப்பனவு இயலளவினையும் அத்தகைய கடன் பெறுநர்களால் சமர்ப்பிக்கப்பட்ட ஏற்றுக்கொள்ளத்தக்க மீளெழுச்சித் திட்டத்தினையும் கருத்திற் கொண்டு ஏற்கனவே காணப்படுகின்ற கொடுகடன் வசதிகளை நீண்ட காலப்பகுதி ஒன்றுக்காக மறுசீரமைக்கலாம்.

2. செயற்படாக் கொடுகடன் வசதிகளுக்காக வழங்கப ;பட்டுள்ள சலுகைகள்

(அ) 2021 மே 15 திகதி அன்று செயற்படா வகையிலுள்ள கொடுகடன் வசதிகளை கடன்பெறுநரின் மீள்கொடுப்பனவு இயலளவினையும் ஏற்றுக்கொள்ளத்தக்க மீளெழுச்சித் திட்டத்தினையும் கருத்திற்கொண்டு நீண்ட காலப்பகுதி ஒன்றுக்காக மீள் அட்டவணைப்படுத்தல். (ஆ) வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள், 2020 ஏப்ரல் 01ஆம் திகதி அன்று அல்லது அதற்குப் பின்னர் செயற்பாடற்றவையாக வகைப்படுத்தப்பட்டுள்ள கொடுகடன் வசதிகளுக்கு எதிரான அனைத்து அறவீட்டு நடவடிக்கைகளையும் இடைநிறுத்தல் வேண்டும்.

3. ஏனைய சலுகைகள் (அ) வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள், வெளிப்படையாகப் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்காக 2021 ஜூன் 30 வரையான காலப்பகுதியின் போது கடன் அட்டைகள் அத்துடன் வேறு கொடுகடன் வசதிகள் மீதான தாமதக் கொடுப்பனவுக் கட்டணத்தினை நிறுத்தல் வேண்டும்.

(ஆ) தற்போது முன்னெடுக்கப்படுகின்ற பயணத் தடைகள் காரணமாகப் பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களிடம் இருந்து கடன் மீள்கொடுப்பனவுகளை ஒரு சில நாட்களினால் (உயர்ந்தபட்சம் 10 வேலை நாட்கள்) தாமதிக்குமாறு விடுக்கப்படும் கோரிக்கைகளை அத்தகைய தாமதத்திற்கு ஏதேனும் மேலதிக வட்டியை அல்லது வேறு கட்டணங்களை அறவிடாது பரிசீலனையிற் கொள்ளுதல்.

(இ) தற்போது காணப்படும் கொடுகடன் வதியினைப்/ வசதிகளைப் பிற்போடுவதற்கான அல்லது மறுசீரமைப்பதற் கான தெரிவிற்குப் பதிலாக 2021 ஆகஸ்ட் 31 அன்று அல்லது அதற்கு முன்னா் அவர்களது தற்போதைய கொடுகடன் வசதிகளைத் தீர்ப்பனவு செய்வதற்கு கடன் பெறுனர் ஒருவர் அவரது விருப்பத்தினை வெளிப்படுத்துகின்ற விடத்து வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள், தகைமையுடைய கடன் பெறுநர்களிடம் இருந்து ஏதேனும் முன்கூட்டிய தீர்ப்பனவுக் கட்டணத்தை அறிவிடலாகாது.

(ஈ) வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள் கொடுகடன் தகவல் பணியகத்தின் பாதகமானப் பதிவினை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு இத்திட்டத்தின் கீழ் தகைமையுடைய கடன் பெறுநர்களிடமிருந்து கிடைக்கும் கடன் விண்ணப்பங்களை நிராகரித்தலாகாது.

4. கோரிக்கையினைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி

சலுகைத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புகின்ற தகைமையுடைய கடன்பெறுநர்கள், 2021 ஜூலை 15 அன்று அல்லது அதற்கு முன்னர் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் தொடர்புடைய கிளைக்கு எழுத்தில் அல்லது இலத்திரனியல் வாயிலாக கோரிக்கை ஒன்றினை முன்வைப்பதற்கு வேண்டப்படுகின்றனர்.

இது தொடர்பில் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 2021ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க விரிவான சுற்றறிக்கை இலங்கை மத்திய வங்கியின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. https://www.cbsl.gov.lk/en/laws/directions-circulars-guidelines-for-non-banks. பொதுமக்கள், சுற்றறிக்கை தொடர்பான மேலதிகத் தகவல்களை 011-2477000, 011-2477966 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக இலங்கை மத்திய வங்கியில் தாபிக்கப்பட்டுள்ள அழைப்பு நிலையத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும். .