வடக்கின் 04 மாவட்ட பொது வைத்தியசாலைகளின் அதிகாரங்கள் பறிபோயின!

வடக்கு மாகாண நிர்வாக ஆளுகைக்குள் செயற்பட்டுவந்த மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்ட பொது வைத்திசாலைகள் உட்பட இலங்கையின் 09 வைத்தியசாலைகளை மத்திய சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு செல்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சேவை வழங்கலில் தரம், சமத்துவம், வினைத்திறன் போன்றவற்றை அதிகரிக்கவும் இலகுவாக நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கத் தரப்புத் தெரிவித்துள்ளது.

குறித்த யோசனையை சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி சமர்ப்பித்தாகவும் அதற்கு அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியுள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய வடக்கின் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட பொது வைத்தியசாலைகள் மற்றும் மாத்தளை, நாவலப்பிட்டி, எம்பிலிப்பிட்டி, அவிசாவளை, கம்பஹா ஆகிய வைத்தியசாலைகளின் நிர்வாகத்தினை இனிவரும் காலங்களில் மத்திய சுகாதார அமைச்சே நிர்வகிக்கும் என்று தெரியவருகிறது.