விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு புத்துயிரூட்ட பாகிஸ்தான் முயற்சி – இந்திய ஊடகம்

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு புத்துயுர் அளிக்கும் நடவடிக்கைகளில் பாக்கிஸ்தானின் புலனாய்வு பிரிவான ஐஎஸ்ஐ ஈடுபட்டுள்ளது என இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மீண்டும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு புத்துயுர் அளிக்கும் நடவடிக்கைகளில் பாக்கிஸ்தானின் புலனாய்வு பிரிவு ஈடுபட்டுள்ளது என ரிப்பப்ளிக் வேர்ல்ட் தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகளிற்கு புத்துயுர் அளிக்க முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் இந்தியாவின் தேசிய விசாரணை முகவர் அமைப்பு 9 பேரை கைதுசெய்துள்ள நிலையிலேயே இந்த செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கையின் போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த குணசேகரன் புஸ்பராஜா என்ற இருவர் பாக்கிஸ்தானை சேர்ந்த ஆயுத போதைப்பொருள் விற்பனையாளர் ஹாஜி சலீம் என்பவருடன் இணைந்து செயற்பட்டனர் என இந்தியாவின் தேசிய விசாரணை முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.

இவர்கள் இந்தியாவிலும் இலங்கையிலும் செயற்பட்டுள்ளனர் விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீண்டும் ஏற்படுத்துவதற்காக போதைப்பொருள் ஆயுதங்களை கடத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என ரிப்பப்ளிக் வேர்ல்ட் தெரிவித்துள்ளது.

இந்திய அமைப்பு இவர்களை கைதுசெய்துள்ள அதேவேளை பிராந்தியத்தில் அமைதி பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்காக பாக்கிஸ்தான் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு புத்துயுர் அளிக்க முயல்கின்றது என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.