வெசாக் பண்டிகையை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்டுள்ள “கோட்டா கோ கம”

வெசாக் பண்டிகையை முன்னிட்டு “கோட்டா கோ கம “புதுவடிவம் பெற்றுள்ளது.

அலங்கார வெசாக் கூடுகள், பௌத்த கொடிகள், மின்விளக்குகளால் “கோட்டா கோ கம ” அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தை பதவிவிலகுமாறு கோரி கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று 37 ஆவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.