வெலிக்கடை சிறையில் தொற்று நீக்கி திரவத்தை பருகிய ஈரானிய கைதிகள் இருவர் மரணம்

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரானியர்கள் இருவர் தொற்று நீக்கியை அருந்தியதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த திரவத்தை பருகிய ஈரானிய கைதிகள் 10 பேர் சிகிச்சைகளுக்காக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்தார்.

குறித்த 12 பேரும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.