ஸ்ரீலங்கன் விமான சேவை விமானம் தாமதமானதால் 48 இளைஞர்களின் கொரிய தொழில் வாய்ப்பு இழப்பு

கொரிய மொழி பரீட்சையில் தேர்ச்சிப் பெற்று கொரியாவிற்கு தொழில்வாய்ப்பிற்காக செல்லவிருந்த நிலையில் விமானம் தாமதமானதால் 48 இளைஞர்கள் தொழில்வாய்ப்பினை இழந்துள்ளனர்.

குறித்த 48 இளைஞர்களும் நேற்றிரவு கொரியாவிற்கு தொழிலுக்கு செல்வதற்காக விமானநிலையததிற்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் இரவு 08 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கவிருந்த ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் தாமதமடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று அதிகாலை 06 மணிக்கே விமானம் பயணிக்கவுள்ளதாகவும் 10 மணித்தியாலம் தாமதமடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

10 மணித்தியாலங்கள் தாமதமடைந்தமையினால் தெரிவு செய்யப்பட்ட பணியாளர்களை தொழில்வாய்ப்பிலிருந்து நிராகரிப்பதாக கொரிய நிறுவனங்களின் அதிகாரிகள் அறிவித்துள்ளதாக வெளிநாட்டு வேளைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.