10 கட்சிகள் தொடர்ந்தும் சுயாதீனமாக செயற்படும்

கடந்த அரசாங்கத்திற்கு ஆதரவளித்த 10 கட்சிகளும் விசேட கலந்துரையாடல் ஒன்றை இன்று (13) நடத்தியிருந்தன.

ஆட்சி அமைப்பது தொடர்பாகவும் புதிய பிரதமருக்கு ஆதரவளிப்பது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் எதிர்க்கட்சியில் தொடர்ந்தும் இருந்து சுயாதீனமாக செயற்படுவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அமையப்போகும் அரசாங்கத்தை சீர்குலைக்கும் எண்ணம் இல்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.