13 பாராளுமன்ற குழுக்கள் எதிர்வரும் 03 வாரங்களில் கூடவுள்ளதாக அறிவிப்பு

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்), அமைச்சு சார் ஆலோசனைக் குழுக்கள் உள்ளிட்ட 13 பாராளுமன்ற குழுக்கள் எதிர்வரும் 03 வாரங்களில் கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

அதற்கமைய, எதிர்வரும் 19 ஆம் திகதி தேசிய திரைப்பட கூட்டுத்தாபனம் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளதுடன், கோப் குழு அதன் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் கூடவுள்ளது. அன்றைய தினம் நெடுஞ்சாலை அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தலைமையில் கூடவுள்ளது.

எதிர்வரும் 20 ஆம் திகதி வெகுசன ஊடக அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமையில் கூடவுள்ளதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

அதற்கு மேலதிகமாக, ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி சுற்றுலாத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையிலும், நீதி அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் அமைச்சர் அலி சப்ரி தலைமையிலும் சுகாதார அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி தலைமையிலும் கூடவுள்ளது.

அதேவேளை, ஆகஸ்ட் 04 ஆம் திகதி வெளிநாட்டு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தலையில் பாராளுமன்றத்தில் கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 05 ஆம் திகதி சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழு கூடவுள்ளதுடன், நீதி அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழுவும் கூடவுள்ளது. மேலும், அன்றைய தினம் கடற்றொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழு அத தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கூடவுள்ளது.

அதேவேளை, எதிர்வரும் 17 ஆம் திகதி நீதி அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழு கூடவுள்ளதுடன் அன்றைய தினம் அமைச்சர் சீ.பீ. ரத்நாயக்க தலைமையில் வனசீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழுவும் கூடவுள்ளது.

ஆகஸ்ட் 18 ஆம் திகதி மீண்டும் நீதி அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழு கூடவுள்ளதாகவும், 19 ஆம் திகதி உயர் பதவிகள் பற்றிய குழு கூடவுள்ளதாகவும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.