“25 ஆம் திகதி கடமைக்கு திரும்ப ஆசிரியர்களும் அதிபர்களும் எடுத்த முடிவு மிகச் சரியானது”

ஆசிரியர் – அதிபர்கள் மற்றும் விவசாயிகளினதும் போராட்டமும் அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளும் நியாயமானது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

எனவே அவர்களால் முன்னெடுக்கப்படும் நியாயமான போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்குவோம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், ஆசிரியர்களுக்கு எதிராக செயற்படுவதை பெற்றோர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

ஆசிரியர்களுக்கு எதிராக கருத்துரைக்கும் ஆளும் தரப்பின் உறுப்பினர்களின் பிள்ளைகள் அரச பாடசாலைகளிலா தற்போது கல்வி கற்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும் என்றும் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

அத்தோடு எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கையை தொடங்க ஆசிரியர் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்கங்கள் எடுத்த முடிவை அனைத்து மக்களும் பாராட்ட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.