பசிலை வட்­ட­மிடும் முஸ்லிம் பிர­தி­நி­திகள் – பத­விகளை பெற்றுக் கொள்­வதில் பலத்த போட்டி

முஸ்லிம் அர­சி­யலின் வீரியம் முற்­றாக தேய்­வ­டைந்­துள்­ளது. முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ராக நடை­பெற்றுக் கொண்­டிருக்கும் அநி­யாயங்­களை தட்டிக் கேட்­ப­தற்கு எந்­த­வொரு மக்கள் பிர­தி­நி­தி­களுக்கும் தைரியம் இல்­லாத நிலையே காணப்­ப­டு­கின்­றது. பாரா­ளு­மன்­றத்தில் உள்ள முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில் ரிஷாத் பதி­யுதீன் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ளார். அவர் இன்னும் விசா­ரிக்­கப்­ப­ட­வில்லை. அவரை விசா­ர­ணைக்கு நீதி­மன்­றத்­திற்கு அழைத்­து­வ­ரும் ஒவ்­வொரு வேளை­யிலும் நீதி­ப­தி­களில் ஒருவர் வழக்­கி­லி­ருந்து தாமாக விலகிக் கொள்­கின்­றனர். இது­வ­ரைக்கும் நான்கு நீதி­ப­திகள் வில­கி­யுள்­ளார்கள்.

ரவூப் ஹக்கீம், முஜிபுர் ரஹ்மான் ஆகி­யோர்கள் முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் குறித்து பேசிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். ஆயினும், ஏனைய முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் முஸ்லிம் சமூ­கத்தைப் பற்­றிய சிந்­த­னையே இல்­லாமல் அவர்கள் அர­சாங்­கத்­தோடு இணைந்து செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அமைச்சர் பத­வி­களின் மீது ஆசை வைத்து காத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். மக்கள் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி­சப்ரி ரஹீம் புத்­த­ளத்தில் நடை­பெற்ற நிகழ்­வொன்றில் தாங்கள் 20ஆவது திருத்தச் சட்­டத்­திற்கு ஆத­ரவு வழங்­கு­வ­தற்கு முன்­ன­தாக இரா­ஜாங்க அமைச்சர் பத­வியை கோரி­ய­தா­கவும், அந்த அமைச்சர் பதவி கிடைக்­கு­மென்ற நம்­பிக்­கையில் உள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.

கட்­சியின் தீர்­மா­னத்தின் அடிப்­ப­டையில் அர­சாங்­கத்­துடன் இணைந்து கொள்­வ­தற்­கு­ரிய எண்­ணத்தை முஸ்லிம் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பைசால் காசிம் தனியார் தொலைக்­காட்சி ஒன்­றுக்கு தெரி­வித்­துள்ளார்.

அம்­பாறை மாவட்ட முஸ்­லிம்­களின் வாக்­கு­க­ளினால் தெரிவு செய்­யப்­பட்ட நான்கு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் உள்­ளார்கள். இவர்கள் அம்­பாறை மாவட்ட விவ­சா­யி­களின் பிரச்­சி­னைகள் குறித்து ஒரு வார்த்­தை­யேனும் பாரா­ளு­மன்­றத்­திலும், பாரா­ளு­மன்­றத்­திற்கு வெளி­யிலும் பேச­வில்லை. அர­சாங்­கத்­திடம் விவ­சா­யி­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­களை கேட்டு கோரிக்கை விடுத்தால் தாங்கள் எதிர்­பார்த்துக் கொண்­டி­ருக்கும் அமைச்சர் பதவி கிடைக்­காது போய்­விடும் என்ற பதவி ஆசையில் வாய் திறக்­காது இருக்­கின்­றார்கள்.

இதேவேளை, அமைச்சர் பத­வியை பெற்றுக் கொள்­வதில் இவர்­க­ளி­டையே பலத்த போட்டி காணப்­ப­டு­கின்­றது. அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­படும் எல்லா முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் அமைச்சர் பதவி கிடைக்­காது. ஒருவர் அல்­லது இரண்டு பேருக்கு அமைச்சர் பதவி கிடைக்­கலாம். இதனால் அமைச்சர் பத­வியை பெற்றுக் கொள்­ப­வர்­களில் தானும் ஒரு­வ­ராக இருக்க வேண்­டு­மென்று காய்­ந­கர்த்திக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். 20வது திருத்தச் சட்ட மூலம் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்ட நாள் முதல் முஸ்லிம் காங்­கிரஸ், மக்கள் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஒற்­று­மை­யா­கவே செயற்­பட்டுக் கொண்­டார்கள். இப்­போது ஒவ்­வொ­ரு­வரும் தனித்­த­னி­யாக ஓடிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

முஸ்லிம் கட்­சி­களின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் இத்­த­கைய ஓட்­டத்தை பசில்­ரா­ஜபக் ஷ அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து நாட்­டிற்கு திரும்­பி­யதன் பின்­னரே அவ­தா­னிக்க முடி­கின்­றது. பசில்­ரா­ஜபக் ஷவு­டன்தான் முஸ்லிம் கட்­சி­களின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­ப­டு­வ­தற்­கு­ரிய உடன்­பா­டு­களைக் கண்­டி­ருந்­தார்கள். பசில்­ரா­ஜபக் ஷ அமெ­ரிக்கா சென்­றதும் முஸ்லிம் கட்­சி­களின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மிகுந்த கவ­லையில் இருந்­தார்கள். அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு வழங்­கி­விட்டு தாம் நடு­வீ­தியில் நிற்­பது போன்­ற­தொரு உணர்வை இவர்கள் கொண்­டி­ருந்­தார்கள்.

அவர் மீண்டும் நாட்­டிற்கு திரும்­பு­வாரா என்­பது கூட கேள்விக் குறி­யா­கவே இருந்­தது. இப்­போது பசில்­ரா­ஜபக் ஷ பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். அமைச்சர் பத­வி­யையும் பெற்றுக் கொண்டுள்ளார். பசில்­ரா­ஜபக் ஷவின் வருகை முஸ்லிம் கட்­சி­களின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களைப் பொறுத்­த­வரை போன உயிர் திரும்பி வந்­த­தா­கவே இருக்­கின்­றது.

முஸ்லிம் கட்­சி­களின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எதிர்க்­கட்சி வரி­சையில் இருந்து கொண்டு அர­சாங்­கத்தின் தரப்­பி­ன­ராகச் செயற்­ப­டு­வ­தனை விடவும் ஆளும் கட்சி வரி­சையில் இருந்து அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு வழங்கும் முடி­வினை எடுத்­துள்­ளார்கள்.

முஸ்லிம் கட்­சி­களின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அமைச்சர் பத­வி­களைப் பெற்றுக் கொண்டால், அதன் மூல­மாக அவர்­க­ளது கட்­சியை வளர்க்க முடி­யாது. அவர்கள் அடுத்த பாரா­ளு­மன்ற தேர்­தலில் பொது­ஜன பெர­மு­ன­வுடன் போட்­டி­யிட வேண்டும். அதனால், பொது­ஜன பெர­முனக் கட்­சியின் உறுப்­பி­னர்­க­ளாக மாற வேண்டும். அப்­போ­துதான் அமைச்சர் பத­வியை பெற்றுக் கொள்­ளலாம். அமைச்சர் பத­வி­யையே தமது இலக்­காகக் கொண்­டுள்ள முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பொது­ஜன பெர­மு­ன­வுடன் இணைந்து கொண்­டாலும் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்­கில்லை. அம்­பாறை மாவட்­டத்தில் உள்ள முஸ்லிம் கட்சி ஒன்றின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தமது கோரிக்­கை­களை ஆட்­சி­யா­ளர்கள் நிறை­வேற்றும் பட்­சத்தில் அக்­கட்­சியில் அடுத்த தேர்­தலில் போட்­டி­யி­டுவேன் என்று ஓர் இடத்தில் தெரி­வித்­துள்ளார்.

இதே வேளை, பொது­ஜன பெர­மு­ன­வுடன் உள்ள முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை எடுத்துக் கொண்டால் அவர்­க­ளி­னாலும் சமூ­கத்தின் பிரச்­சி­னை­க­ளுக்கு ஆளுந்­த­ரப்­பினர் என்ற அடிப்­ப­டையில் தீர்­வு­களைப் பெற்றுக் கொடுக்க முடி­யாத நிலையே உள்­ளது. அவர்­களில் தேசி­யப்­பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான அலி­சப்ரி நீதி அமைச்­ச­ராக இருந்து கொண்­டி­ருக்­கின்றார். அவர் நீதி அமைச்சர் என்­றாலும், ஆட்­சி­யா­ளர்­களின் திட்­டங்­க­ளுக்கு அமை­வா­கவே செயற்­பட முடியும்.

முஸ்­லிம்­களின் தனியார் சட்­டத்தை இல்­லாமல் செய்யும் நட­வ­டிக்­கை­களை ஆட்­சி­யா­ளர்கள் மேற்­கொண்­டுள்­ளார்கள். ஒவ்­வொரு அர­சாங்­கமும் அதனை மாற்­றி­ய­மைக்க முயற்சி எடுத்த போதிலும் முஸ்­லிம்­க­ளினால் காட்­டப்­பட்ட எதிர்ப்­புக்கள், முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் முயற்­சி­க­ளினால் அந்த நட­வ­டிக்­கைகள் முறி­ய­டிக்­கப்­பட்­டன. இன்­றைய நிலையில் கடந்த காலத்தைப் போன்று தமது எதிர்ப்பைக் காட்­டு­வ­தற்­கு­ரிய வீரியம் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்களுக்கு இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை.

ஆனால், இப்­போது ஆட்­சி­யா­ளர்கள் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையைக் கொண்­டுள்­ளார்கள். ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கும் பௌத்த இன­வாதத் தேரர்­க­ளுக்கும் இடையே பலத்த முரண்­பா­டுகள் ஏற்­பட்­டுள்­ளன. அதனால், முஸ்­லிம்­களின் தனியார் சட்­டத்தில் உள்­ள­வற்றில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்கும், சில­வற்றை இல்­லாமல் செய்­வ­தற்கும் நட­வ­டிக்­கைகள் எடுப்­ப­தற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது. காதி­நீ­தி­மன்ற முறை­மையை இல்­லாமல் செய்­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்றுக் கொண்­டி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இந்­நி­லையில் இந்த ஆலோ­ச­னையை தான் முன்­வைக்­க­வில்லை. அது குறித்து என்னால் எதுவும் பேச முடி­யா­தென்று நீதி அமைச்சர் அலி­சப்ரி தெரி­வித்­துள்ளார்.

காதிநீதிமன்ற முறையிலும், முஸ்லிம் தனியார் சட்டத்தில் உள்ள குறைகளையும் நிவர்த்தி செய்வதில் முஸ்லிம்களிடையே மாற்றுக் கருத்துக்கள் கிடையாது. ஆனால், அவற்றை முழுமையாக இல்லாமல் செய்ய முடியாது. அவ்வாறு செய்வதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் முஸ்லிம் களின் மீது மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட இனவாத ஒடுக்குதலாகவே பார்க்கப்பட வேண்டியதாகும். ஆதலால், நீதி அமைச்சர் இதில் நழுவல் போக்கை கடைப்பிடித்து தமது சமூகப் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ளாது செயற்படுவதற்கு முன்வருதல் வேண்டும்.

இதே வேளை, ஆட்சியாளர்கள் பௌத்த இனவாதத் தேரர்களின் முரண்பாடுகளை இல்லாமல் செய்வதற்கும், தேர்தல் காலங்களில் தாங்கள் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தயங்கப் போவதில்லை என்று காட்டுவதற்கு முஸ்லிம்களின் தனியார் சட்டத்தை கையில் எடுத்துள்ளதாகவே தெரிகின்றது.

Source:– Vidivelli

பொதுஜன பெரமுனவுடன் நிலவும் முரண்பாடு – ஜனாதிபதியை சந்திக்கும் சுதந்திரக் கட்சி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி ஜனாதிபதி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரதிநிதிகளுக்கு இடையேயான சந்திப்பு எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் நிலவும் முரண்பாடுகள் தொடர்பாக இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படுடென எதிர்பார்க்கப்படுகிறது.

விமல் வீரவன்ச கடும் எதிர்ப்பு – எதிர்த்து வாக்களிக்கப் போவதாக எச்சரிக்கை, திட்டத்தை பிற்போட்டது அரசாங்கம்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழக சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்கப்போவதாக அமைச்சர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமல்வீரவன்சவின் கட்சி உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான ஜயந்த சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சமல்ராஜபக்சவிடம் விமல்வீரவன்ச இதனை தெரிவித்துள்ளார் – விமல்வீரவன்சவின் எதிர்ப்பு காரணமாக இந்த சட்டமூலத்தை ஆகஸ்ட்மாதம் வரை பிற்போட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தனியார் பல்கலைகழகங்களை அமைப்பதை தங்கள் கட்சி ஏற்றுக்கொள்ளாது குறிப்பிட்ட ஏற்பாடுகளை அகற்றாமல் சட்டமூலத்தை மீண்டும் கொண்டுவந்தால் அதனை எதிர்ப்போம் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

தற்போதுள்ள பயணக் கட்டுப்பாடுகளில் தளர்வு – புதிய அறிவிப்பு வெளியானது

தற்போதுள்ள பயணக் கட்டுப்பாடுகளை இன்று (சனிக்கிழமை) முதல் மேலும் தளர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் மேலும் 14 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது மற்றும் அனுமதிக்கப்பட்ட பொது நடவடிக்கைகள் குறித்த புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியாகியுள்ளது.

அதிகபட்சம் 150 பேருடன் திருமண நிகழ்வை நடத்தவும் 50 பேருடன் 24 மணித்தியாலங்களுக்குள் இறுதி கிரியைகளை நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வழிபட்டு தலங்களை திறப்பதற்கும் மாநாடுகள் / கருத்தரங்குகள் என்பனவற்றை 50 இருக்கைகளுடன் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆட்சியைக் கவிழ்க்கலாம் என கனவு காண வேண்டாம் – பசில் ராஜபக்ஷ

ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஆட்சியைக் கவிழ்க்கலாம் என கனவு காண வேண்டாம் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, எதிரணிக்கு பதிலுரை வழங்கியுள்ளார்.

நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர், தான் அமைச்சராக பதவி ஏற்றவுடனேயே இந்த ஆர்ப்பாட்டங்களை எதிரணியினர் தீவிரப்படுத்தியுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

குறிப்பிட்ட ஒரு சிலரைக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசை ஒருபோதும் கவிழ்க்க முடியாது என்றும் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

கட்சியை மனதில் வைத்தே நாட்டு மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடனான அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் தெரிவு செய்துள்ளார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே அர்த்தமற்ற இந்த ஆர்ப்பாட்டங்கள் கைவிட்டு நாட்டினதும் மக்களினதும் நலன் சார்ந்த திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பசில் ராஜபக்ஷ எதிரணியிடம் கேட்டுக்கொண்டார்.

Posted in Uncategorized

கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த தனிமைப்படுத்தல் சட்டம்- சர்வதேச மன்னிப்புச்சபை கண்டனம்

இலங்கையில் அமைதியாக முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் தனிமைப்படுத்தும் சட்டம் பிரயோகிக்கப் பட்டிருப்பதானது, கருத்து சுதந்திரத்தைக் கட்டுப் படுத்துவதற்கான ஓர் கருவியாக அரசாங்கம் கொரோனா வைரஸ் பரவலைப் பயன் படுத்துவதை வெளிப்படுத்தி இருக்கிறது என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

பொது மக்கள் அதிகளவில் ஒன்று கூடும் போராட்டங்கள், பொதுக் கூட்டங்களுக்கு மறு அறிவித்தல் வரும் வரையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நாட்டில் பல இடங்களில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு போராட்டங்களை நடத்துபவர்களை கைது செய்யும் காவல் துறையினர், நீதி மன்றம் அவர்களை பிணையில் செல்ல அனுமதித்தாலும், அந்த உத்தரவை மீறி தனிமைப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் தனிமைப்படுத்தல் சட்டம் பிரயோகிக்கப் படுவது இலங்கை அரசாங்கம் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப் படுத்துவதற்கு இந்த கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலை ஓர் கருவியாகப் பயன்படுத்தப் படுவதை வெளிப்படுத்தி இருக்கின்றது என சர்வதேச மன்னிப்புச் சபை சாடியுள்ளது.

Posted in Uncategorized

COVID செலவுகளுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 150 மில்லியன் டொலர் கடன்

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 150 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெறுவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

நாட்டில் முன்னெடுக்கப்படும் COVID தடுப்பூசி ஏற்றும் திட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய செலவுகளுக்காக இந்த கடன் பெறப்படுவதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தெரிவித்தார்.

இதனடிப்படையில், ஆசிய அபிவிருத்தி வங்கியும் (ADB) நிதி அமைச்சும் கடன் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் நேற்று கைச்சாத்திட்டுள்ளன.

Posted in Uncategorized

சுதந்திரக் கட்சி மொட்டை கைவிடுகிறது

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் பிரதான பங்காளிகளின் ஒன்றான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, அரசாங்கத்திலிருந்து வெளியேறுவது தொடர்பில் கலந்தாலோசித்து வருகிறதென தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏனைய பங்காளிகளில், அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோருக்கும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினருக்கும் இடையில் கடுமையான கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன.

இந்நிலையில், அரசாங்கத்திலிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஓரங்கட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக, சுதந்திரக் கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதனிடையே, இளம் உறுப்பினர்களுக்கு இடமளிக்கும் வகையில், முழுமையான அமைச்சரவை மாற்றமொன்றை விரைவில் மேற்கொள்வதற்கு அரசாங்கம் கலந்தாலோசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த மாற்றத்தின் போது, தாமரை மொட்டுவைச் சின்னமாகக் கொண்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதிக்கத்தை அமைச்சரவைக்குள் அதிகரித்துக் கொள்ளும் வகையிலேயே மாற்றங்கள் செய்யப்படும் எனவும், கையை சின்னமாகக் கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் ஓரங்கட்டப்படக் கூடுமெனவும் உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், அவ்வாறு ஓரம் கட்டப்படுவதற்கு முன்னர், தாங்களாகவே அரசாங்கத்திலிருந்து விலகிக்கொள்வதே உசித்தமானதாக இருக்குமென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் கதைகள் அடிபடுகின்றனவென அறியமுடிகின்றது.

அதனோர் அங்கமாகவே, கட்சியின் தலைமை தன்னை விலகுமாறு கேட்டால், கட்சியின் மத்தியக்குழு விலகவேண்டுமென தீர்மானித்தால், தன்னுடைய பதவியை எந்நேரத்தில் துறப்பதற்குத் தயாராக இருப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கத்தையும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவையும் ஆட்சியதிகாரத்துக்கு கொண்டுவருவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியே பெரும்பாடுபட்டது என்பதை நினைவுப்படுத்திய தயாசிறி ஜயசேகர, பழையவற்றை மறந்துவிடக்கூடாது என்றார்.

இதனடிடையே, கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுக்கூட்டம் நேற்று முன்தினம் (08) கட்சியின் தலைமையகத்தில் கூடியது.

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் நிலைமைகளின் அடிப்படையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இருக்கவேண்டுமா என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அரசாங்கத்திலிருந்து விலக வேண்டுமென மத்தியக் குழு உறுப்பினர்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனர். எனினும், நெருக்கடியான நிலைமையில், தேர்தலொன்று இல்லாத சூழ்நிலையில், அரசாங்கத்திலிருந்து விலகவும் உசிதமானதல்ல என மற்றுமொரு பிரிவினர் எடுத்துரைத்துள்ளனர்.

எவ்வாறான நிலைமைகள் ஏற்படினும், கட்சியைப் பலப்படுத்தி, மக்களிடத்தில் செல்லவேண்டுமென சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

இதற்கிடையே, கடமைகளையும் பொறுப்புகளையும் முறையாக முன்னெடுக்காத அமைச்சர்களை, அவ்வமைச்சிலிருந்து நீக்கிவிட்டு புதிய முகங்களுக்கு அதுவும் இளம் உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கு கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாகவும் அறியமுடிகின்றது.

குறுகிய காலப்பகுதியில் திறமைகளை வெளிப்படுத்திய, முன்னேற்றத்தை காண்பித்த இராஜாங்க அல்லது பிரதியமைச்சர்களுக்கு இதன்போது முன்னுரிமை கொடுப்பது தொடர்பிலும் அரசாங்கம் ஆலோசித்துள்ளதாக அறியமுடிகின்றது.

அவ்வாறாதொரு நிலைமை ஏற்படுமாயின் அரசாங்கத்துடன் முட்டிமோடிதிக் கொண்டிருக்கும் பங்காளிகள், ஓரங்கட்டப்படக்கூடும் அல்லது பெயரளவில் ஏதாவது பொறுப்புகள் வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நிதியமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதன் பின்னர், தன்னுடைய அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட பெசில் ராஜபக்‌ஷ, “கசப்பான தீர்மானங்களை எடுப்பேன்” என பகிரங்கமாக அறிவித்துள்ளார். ஆகையால், அரசாங்கத்துக்குள் தற்போது ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகளை களையும் வகையிலும் தீர்மானங்கள் எதிர்காலத்தில் எடுக்கப்படலாமென அறியமுடிகின்றது.

Posted in Uncategorized

நாமல் ராஜபக்சவை பிரதமராக நியமிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே நிதி அமைச்சர் பதவியிலிருந்து மகிந்த விலக இணங்கினார்

அடுத்த சில வாரங்களில் அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொள்வது குறித்து ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச கவனம் செலுத்தி வருகின்றார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாடு முழுவதுமாக திறக்கப்படும்போது துரித அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும் திறமை வாய்ந்தவர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்க வேண்டும் என ஜனாதிபதி விரும்புகின்றார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மக்கள் மத்தியில் அரசாங்கத்திற்கான ஆதரவு குறைவடைந்துள்ளதையும் சில அமைச்சுகளின் செயற்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளதையும் ஜனாதிபதி கருத்தில் எடுத்துள்ளார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிறப்பாக செயற்படாத சிரேஸ்ட அமைச்சர்களின் பதவிகள் பறிபோகலாம் அல்லது முக்கியத்துவமற்ற பதவிகள் வழங்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

திறமையான இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு அமைச்சரவையில் இடமளிக்கப்படலாம் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாமல்ராஜபக்சவை பிரதமராக நியமிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையே அமைச்சரவை மாற்றம் என தெரிவித்துள்ள அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்த்ததை விட குறுகிய காலத்தில் இது இடம்பெறும் என தெரிவித்துள்ளன.

நாமல் ராஜபக்சவை பிரதமராக நியமிக்கவேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே பிரதமர் நிதிஅமைச்சர் பதவியிலிருந்து விலக இணங்கினார் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்தின் ஆட்கள் எனக் கூறி ரெலோ வலி கிழக்கு தவிசாளருக்கு அச்சுறுத்தல்

யாழ். நகரில் “அரசாங்கத்தின் ஆட்கள்” எனக் கூறி பிக்கப் வாகனத்தில் வந்தவர்கள் தம்மை அச்சுறுத்தியதுடன் தாக்கவும் முயற்சித்ததாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளரும் ஆன தியாகராஜா நிரோஷ் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 04.20 மணிக்கு தவிசாளர் உத்தியோகபூர்வ வாகனத்தில் யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியின் பழைய தபால் கந்தோர் ஒழுங்கை ஊடாக பயணித்த போது, மத்திய மாகாண இலக்கத்தகடு கொண்ட செய்யப்பட்டுள்ள செகுசு பிக்கப் (CP PP – 0595) வாகனத்தில் ஒரு குழுவினர் எச்சரித்தவாறு தவிசாளரின் வாகனத்தை முந்திச் சென்றுள்ளனர்.

முந்திச் சென்றவர்கள் முன்னர் தனியார் நெடுந்தூர பேருந்து தரிப்பிடமாக பாவிக்கப்பட்ட வளாகத்திற்குள் தவிசாளரின் வாகனம் நிறுத்தப்பட்டதுடன் அவ் வளாகத்திற்குள் நுழைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து தவிசாளார் என்ன பிரச்சினை எனக்கேட்டபோது, அவர்கள் தூஷன வார்த்தைகளை உபயோகித்தவாறு தவிசாளரை நோக்கி வந்தனர்.

தவிசாளார் தொலைபேசியில் அவசர பொலிஸ் (119) இலக்கத்திற்கு முயற்சித்தபோது, தாம் அரசாங்கத்தின் ஆட்கள் எனக் கூறியவாறு தவிசாளரைத் தாக்குவதற்கு கட்டிட உடைவு கல் ஒன்றினை அக் குழுவில் வந்திருந்த ஒருவர் தூக்கி வீச எத்தனித்த போது அவ்விடத்தில் ஒருவரால் தடுக்கப்பட்டுள்ளார். மக்கள் ஒன்றுகூடியவுடன் தவிசாளார் அச்சுறுத்தியவர்களை படம் பிடித்தபோது தாழும் படம் பிடித்தவாறு விலகிச்சென்றனர்.

இந்நிலையில் இவ்விடத்தில் இருந்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையம் சென்ற வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளார் தியாகராஜா நிரோஷ் அச்சுறுத்தியவர்களுக்கு எதிராக பொலிஸ் முறைப்பாட்டினைப் பதிவுசெய்துளளார். முறைப்பாட்டில் (CP PP – 0595) இலக்க வாகனத்தில் வந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றிவர சி.சி.டிவி கமராக்கள் பொருத்தப்பட்டுள்ள இடமென்றில் இவ் அச்சுறுத்தல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.