இந்திய – இலங்கை நல்லுறவை சீர்குலைக்கும் மெல்கம் ரஞ்சித் – சிவசேனா அமைப்பு குற்றச்சாட்டு!

இந்திய – இலங்கை நல்லுறவை சீர்குலைக்கும் விதமாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை செயற்படுவதாக தமிழ்நாடு சிவசேனா அமைப்பின் மாநில செயல் தலைவர் க.சசிகுமார் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கையில் இருந்து தமிழகத்துக்கான கப்பல், விமான போக்குவரத்துகளை விரிவுபடுத்த இந்திய அரசாங்கம் முக்கியத்துவம் கொடுத்து வருவதாக க.சசிகுமார் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையே பாலம் அமைக்கப்பட்டால் இலங்கையின் இறையாண்மைக்கு பங்கம் ஏற்படுமென கர்தினால் மல்கம் தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கையின் சுதந்திரமும் பறிபோகும் என்றும் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டிருந்தார்.

வளமான, வலிமையான நாடாக இலங்கையை உருவாக்க வேண்டும் என்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும்
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பல்வேறு ஒப்பந்தங்களில் கையழுத்துட்டுள்ளதாக க.சசிகுமார் மேலும் தெரிவித்தார்.

இந்திய அரசாங்கம் பல கோடி நிதியை இலங்கை அரசாங்கத்திற்கு ஒதுக்கியுள்ளதாக தமிழ்நாடு சிவசேனா அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, இந்திய அரசாங்கத்தினால் இலங்கையில் 10 ஆயிரம் பேருக்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம் மற்றும் பல்வேறு திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இந்திய-இலங்கை நல்லுறவைச் சீர்குலைக்கும் விதமாக, இலங்கையின் கத்தோலிக்க ஆயர் கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை செயற்படுவதாக தமிழ்நாடு சிவசேனா அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.

Related

Posted in Uncategorized

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட ரெலோ முல்லைத்தீவு மாவட்ட பொறுப்பாளர் விஜிந்தன் விடுதலை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பயங்கரவாத தடை பிரிவு பொலிஸாரினால் 19 ஆம் திகதி கைது செய்யப்பட்டு கால வரையறையின்றி சிறைகாவலில் தடுத்து வைக்கப்பட்ட ரெலோ முல்லைத்தீவு மாவட்ட பொறுப்பாளர் கமலநாதன் விஜிந்தன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினருமான க.விஜிந்தன் அவர்களை கொழும்பில் உள்ள பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவினர் விசாரணைக்கு அழைத்து அங்கு வைத்து விசாரணை மேற்கொண்ட பின்னர்,21ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு கால வரையறையின்றி சிறைகாவலில் தடுத்து வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

“நாளை முல்லைத்தீவு“ எனும் அமைப்பை ஆரம்பித்து சமூக அபிவிருத்தி செயல்பாடுகளில் ஈடுபட்ட முன்னாள் அபிவிருத்தி சங்கத் தலைவர் கமலநாதன் விஜிந்தன், அவரின் அரசியல் வளர்ச்சியை பொறுக்க முடியாத காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலர் முகநூல் பதிவுகளை அனுப்பி மொட்டை கடிதம் அனுப்பியிருந்தனர்,முகநூலில் விடுதலைப் புலிகளின் அமைப்பை மீள் உருவாக்கும் வகையிலான விடயங்களை பதிவு செய்ததன் மூலம் நாட்டில் இனப்பிரச்சினை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை தூண்டும் வகையில் செயல்பட்டதாக குற்றம் சுமத்தி, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பயங்கரவாத தடை பிரிவு பொலிஸாரினால் கடந்த 19ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

இதனூடாக ரெலோவின் முல்லைத்தீவு மாவட்ட செயற்பாடுகளை முடக்க எடுக்கப்பட்ட சதிமுயற்சிகளை முறியடித்து அவரின் கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கம் முயற்சியால் ஏழு நாட்களில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ரெலோ அமைப்பின் மறைந்த தலைவர் சிறி சபாரத்தினம் திருவுருவச்சிலை நாளை திறந்து வைக்கப்படும்

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அனைத்து போராளிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும்  அறியத்தருவது எதிர்வரும் 23.06.2024  (ஞாயிற்றுக்கிழமை)   அன்று மாலை 4.00 மணியளவில்  தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மறைந்த தலைவர் அடலேறு சிறி சபாரத்தினம்  அவர்களின் திருவுருவச்சிலை வவுனியாவில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் திறந்து வைக்க இருப்பதனால் அனைவரும்  கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைத்து நிற்கின்றோம்.

இன மத பேதங்களை கடந்து இவ் நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு  அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

“ஈழப் போராட்டம் இந்தியாவின் பாதுகாப்புடன் பின்னிப்பிணைந்துள்ளது” -சிறி சபாரத்தினம்

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ)  வவுனியா மாவட்ட நிருவாகம்.

Posted in Uncategorized

ரெலோ அமைப்பின் மறைந்த தலைவர் சிறி சபாரத்தினம்  அவர்களின் திருவுருவச்சிலை நாளை திறந்து வைக்கப்படும்

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அனைத்து போராளிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும்  அறியத்தருவது எதிர்வரும் 23.06.2024  (ஞாயிற்றுக்கிழமை)   அன்று மாலை 4.00 மணியளவில்  தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மறைந்த தலைவர் அடலேறு சிறி சபாரத்தினம்  அவர்களின் திருவுருவச்சிலை வவுனியாவில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் திறந்து வைக்க இருப்பதனால் அனைவரும்  கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைத்து நிற்கின்றோம்.

இன மத பேதங்களை கடந்து இவ் நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு  அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

“ஈழப் போராட்டம் இந்தியாவின் பாதுகாப்புடன் பின்னிப்பிணைந்துள்ளது” -சிறி சபாரத்தினம்

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ)  வவுனியா மாவட்ட நிருவாகம்.

Posted in Uncategorized

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ்த் தலைவர்களுடன் முக்கிய சந்திப்பு

இலங்கைக்கு எதிர்வரும் 20ஆம் விஜயம் மேற்கொள்ளும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆகியோரைச் சந்திக்கவுள்ளார்.

அதனைத்தொடர்ந்து அவர் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச, வடக்கு,கிழக்கு தமிழ்க் கட்சிகளின் தலைவர்களையும், மலையகக் கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார். அத்தோடு முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.

இந்திய பாராளுமன்றத் தேர்தல்கள் நிறைவடைந்ததன் பின்னர் மீண்டும் வெளிவிவாகார அமைச்சர் பதவியை ஏற்றுள்ள காலநிதி. சுப்ரமணியம் ஜெய்சங்கர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.

இந்த விஜயத்தின் போது, இலங்கையில் இந்தியாவின் முதலீடுகள் மற்றும் இருதரப்பு உறவுகள் உட்பட பரஸ்பர ஒத்துழைப்புக்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக களநிலைமைகள் தொடர்பிலும் கவனம் செலுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Posted in Uncategorized

கதிர்காம காட்டுவழி பாதை திறக்கும் திகதி தொடர்பாக ஆளுநர் உத்தரவாதம்: ரெலோ அமைப்பின் பிரதி தலைவர் ஹென்றி மகேந்திரன்

கதிர்காம காட்டுவழி பாதயாத்திரைக்கான கதவு திறக்கும் திகதி தொடர்பான சர்ச்சைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக ரெலோ அமைப்பின் பிரதி தலைவர் ஹென்றி மகேந்திரன் ஆலையடிவேம்பு பிரதேச அக்கரைப்பற்று, இந்துமாமன்ற கட்டடத்தில் இன்று (17) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தகவலை தெரிவித்திருந்தார்.

கதிர்காம பாதயாத்திரைக்கான காட்டுவழிப்பாதை திறப்பு ஏற்கனவே இம்மாதம் 30ஆம் திகதி என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும் திடீரென அத்திகதியில் மாற்றம் ஏற்பட்டு அடுத்த மாதம் 02ஆம் திகதி என அறிவிக்கப்பட்டது.

இதனால் குழப்பமடைந்த யாழ்ப்பாணம் தொடக்கம் கிழக்கு மாகாணம் வரையுள்ள பாதயாத்திரிகர்களும் பொது அமைப்புக்களும் ரெலோ அமைப்பினர் தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு என்னிடம் கேட்டுக்கொண்டனர்.

இவ்விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுத்த அடைக்கலம் செல்வநாதன் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் உரிய அமைச்சர்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக கூறினார்.
இதன் அடிப்படையில் உரிய திகதியில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு இம்மாதம் 30 ஆம் திகதி கதவு திறப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஆளுநரும் உரிய அதிகாரிகளும் உறுதி அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கை விரைவில் கௌரவ ஆளுநர் அல்லது மாவட்ட அரசாங்க அதிபர் மூலம் வெளியிடப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

Posted in Uncategorized

இலங்கை – சீன இராஜதந்திர உறவுகள் பெய்ஜிங்கில் மீளாய்வு!

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பல்துறைசார் இராஜதந்திர உறவுகள் தொடர்பில் வட்டமேசை கலந்துரையாடல் திங்கட்கிழமை (17) பெய்ஜிங்கில் இடம்பெறவுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேசேகர தலைமையில் விசேட பிரதிநிதிகள் குழு சென்றுள்ளது.

பெய்ஜிங்கில் இடம்பெறும் இந்த இருதரப்பு கலந்துரையாடலில் சீன வெளியுறவு துணை அமைச்சர் சன் வெய்டாங் கலந்துகொள்வார். அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட இருதரப்பு ஈடுபாட்டின் துறைகளில் முன்னேற்றம் குறித்து இதன்போது மீளாய்வு செய்யப்படவுள்ளது.

இதற்கு முன்னர் இத்தகையதொரு கலந்துரையாடல் 2023ஆம் ஆண்டு மே மாதம் கொழும்பில் நடைபெற்றது. இலங்கை – சீன உறவுகள் மற்றும் கூட்டுத்திட்டங்கள் என்பவை தொடர்பில் முழுமையாக பெய்ஜிங்கில் கலந்துரையாடலில் மீளாய்வு செய்யப்படும். அத்துடன் இருதரப்பு புதிய அணுகுமுறைகளுக்கான வாய்ப்புகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படும்.

பொருளாதார உறவுகளை பொறுத்தவரையில் இலங்கையின் முக்கியமானதொரு பங்காளியாக சீனா உள்ளது. குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் தற்போது முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ளது. அதாவது மூன்றாம் கடன் தவணையை சர்வதேச நாணய நிதியம் விடுவித்து இலங்கையின் பொருளாதாரத்துக்கு உத்தரவாதம் அளித்துள்ளது.

அதை தொடர்ந்து, சர்வதேச கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களில் இலங்கை கைச்சாத்திட வேண்டும். இதற்கான இறுதிக்கட்ட தீர்மானங்களுக்காக வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழு இவ்வாரத்தில் ஜப்பான் செல்கின்றது. ஆனால் சர்வதேச கடன் மறுசீரமைப்பு விடயத்தில் சீனா தனித்து செயற்படுவதனால் இலங்கைக்கு நெருக்கடியானதொரு நிலைமையே உருவாகியுள்ளது.

இவ்வாறானதொரு தருணத்தில் பெய்ஜிங்கில் இடம்பெறுகின்ற இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பல்துறைசார் இராஜதந்திர உறவுகள் தொடர்பான கலந்துரையாடல், கடன் மறுசீரமைப்புக்கு சாதகமான சூழலை உருவாக்கும் என்ற நம்பிக்கையை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

Posted in Uncategorized

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் வெற்றிக்கு ரெலோ தலைவர் செல்வம் வாழ்த்து

மாண்புமிகு நரேந்திர மோடி
தலைவர் பாரதீய ஜனதா கட்சி
பிரதம மந்திரி
இந்தியா

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துக்கள்

இந்திய நாட்டின் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுடைய கட்சி நாடு தழுவிய ரீதியில் பெற்ற வெற்றிக்கு எமது வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.

தங்களின் தலைமையில் பாரதீய ஜனதா கட்சி தொடர்ந்தும் மூன்றாவது தடவையும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியை பெற்று ஆட்சி அமைப்பது தங்கள் மீது மக்கள் கொண்டுள்ள அதீத நம்பிக்கையை பறை சாற்றுகிறது.

தங்களது இந்த வெற்றிக்கு எமது ஈழ மக்கள் சார்பாகவும் நமது கட்சி சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் அடைகிறேன். தங்கள் அரசியல் பணி தொடர்ந்து சிறக்க எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

செல்வம் அடைக்கலநாதன் பா.உ
தலைவர் – தமிழ் ஈழ விடுதலை இயக்கம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் வெற்றிக்கு ரெலோ தலைவர் செல்வம் வாழ்த்து

மாண்புமிகு மு க ஸ்டாலின்
தலைவர், திராவிட முன்னேற்றக் கழகம்
முதலமைச்சர்
தமிழ்நாடு

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துக்கள்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுடைய அரசியல் இயக்கம் பெற்ற மாபெரும் வெற்றிக்கு எமது உளம் நிறைந்த வாழ்த்துக்கள்.

தாங்கள் இந்த மாபெரும் இயக்கத்தின் தலைமையை ஏற்று பயணிக்கத் தொடங்கிய காலத்தில் இருந்து மாநிலங்கள் அவை தேர்தலிலும் அபரிதமான வெற்றியை ஈட்டியதோடு நாடாளுமன்றத் தேர்தலிலும் வரலாறு காணாத வெற்றியை பெற்றிருப்பது தங்களுடைய ஆளுமையையும் தலைமைத்துவத்தையும் வெளிப்படுத்தி நிற்கிறது.

தாங்கள் ஈட்டிய இந்த மாபெரும் வெற்றிக்கு எமது ஈழ மக்கள் சார்பாகவும் எமது கட்சி சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்.

தங்கள் அரசியல் பணி தொடர்ந்து சிறக்கவும் மக்கள் மனதில் இன்று போல் என்றும் இடம்பெற்றிருக்கவும் வாழ்த்துகிறேன்.

அன்புடன் செல்வம் அடைக்கலநாதன் பா.உ
தலைவர் – தமிழ் ஈழ விடுதலை இயக்கம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

இராணுவத்தினால் அழிக்கப்பட்ட தியாகி பொன் சிவகுமாரனின் சிலையில் அஞ்சலி

பொன் சிவகுமாரனின் 50 ஆவது நினைவேந்தல் இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்பட்ட பொன் சிவகுமாரனின் திருவுருவச்சிலையில் தமிழ்த் தேசியவாதிகளால் இன்று காலை உணர்வுபூர்வமாக அஞ்சலிக்கப்பட்டது.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் ரெலோ தலைமை குழு உறுப்பினருமான தியாகராஜா நிரோஸ் மற்றும் அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் ஈஸ்வரன, அதன் செயலாளா தனுபன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு அகவணக்கம் செலுத்தியதுடன் திருவுருவச் சிலைக்கு தீபமேற்றி மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

உயிர் தமிழுக்கு உடல் மண்ணிற்கு என்ற இலட்சியத்துடன் தமிழ் மக்களின் விடுதலைக்காக தன்னுயிர்த் தியாகம் செய்த தியாகி பொன் சிவகுமாரன் அவர்களது உருவச்சிலை 05 யூன் 1975 ஆம் ஆண்டு சிறைமீண்ட இளைஞன் முத்துக்குமாரசுவாமி அவர்களால் திறந்து வைக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினராலும் இராணுவத்துடன் சேர்ந்தியங்கிய தரப்புக்களாலும் அச் சிலை பலதடவைகள் உடைத்து நொருக்கப்பட்டு உரும்பிராய் சந்தை வளாகத்தில் வீசப்பட்டு புதையுண்டு கிடந்த நிலையில் அதனை தமிழ் மீள எடுத்து சிவகுமாரனின் சிலை அமைத்த வளாகத்தில்; மீள சிலை வளாகத்தின் ஒருபகுதியில் முன்னாள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் ரெலோ தலைமை குழு உறுப்பினருமான தியாகராஜா நிரோஸ் பிரதியிஸ்டை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized