சட்டமா அதிபர் பதவிக்கு சஞ்சய ராஜரத்தினத்தின் பெயர் பரிந்துரை

இலங்கையின் அடுத்த சட்டமா அதிபராக பதில் சொலிஸிட்டர் ஜெனரல் சஞ்சய ராஜரத்தினம் நியமிக்கப்படுவார் என்று நம்பகத் தகுந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

சபாநாயகர் தலைமையில் நடைபெறும் உயர் பதவிகளை நியமிக்கும் தெரிவுக்குழுவின் அடுத்த அமர்வில் இவரது நியமனம் தொடர்பான மனு பரிசீலிக்கப்படும் என்று சபாநாயகர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போதைய சட்டமா அதிபர் தப்புல டிலிவேர எதிர்வரும் 20 ஆம் திகதி ஓய்வுபெறவுள்ளார்.

இந் நிலையில் வெற்றிடமாகவுள்ள சட்டமா அதிபர் பதவிக்கு சஞ்சய ராஜரத்தினத்தின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது. அவர் தற்போது சட்டமா அதிபர் துறையின் சிரேஷ்ட அதிகாரியாக உள்ளார்.

Posted in Uncategorized

AstraZeneca தடுப்பூசிகளை பெறுவது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபன தலைவருடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, உலக சுகாதார ஸ்தாபன தலைவர் Tedros Adhanom உடன் காணொளி கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இது குறித்து ஜனாதிபதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்கு தேவையான 6 இலட்சம் AstraZeneca தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறித்த தடுப்பூசிகளை நாட்டிற்கு வழங்குவதற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் Tedros Adhanom முயற்சிகளை மேற்கொள்வார் என தாம் நம்புவதாக ஜனாதிபதி நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

மறைந்த தலைவர் சிறீ சபாரத்தினத்தின் 35 வது ஆண்டு தினம் கோண்டாவில் அன்னங்கை தோட்ட வெளியில் இன்று  நடைபெற்றது.

மறைந்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரத்தினத்தின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் தின நிகழ்வு அவரை சுட்டுப் படுகொலை செய்த இடமான யாழ்.கோண்டாவில் அன்னங்கை தோட்ட வெளியில் இன்று வியாழக்கிழமை(06-05-2021) ரெலோ யாழ் மாவட்ட தலைவரும் வலி கிழக்கு தவிசாளருமானா நிரோஜ் தலைமையில் நடைபெற்றது.

மறைந்த தலைவர்,போராளிகள்,பொதுமக்கள் ஆகியோருக்கு இரண்டு நிமிட மெளன அஞ்சலி இடம்பெற்றதைத் தொடர்ந்து,தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் பொதுச்சுடர் ஏற்றி வைத்து எழுச்சி தினம் ஆரம்பமானது,தலைவர் சிறீ சபாரத்தினத்தின் உருவப்படத்திற்கு ரெலோ பேச்சாளர் சுரேந்திரன்,செயலாளர் நாயகம் கருணாகரம்,பொருளாளர் விந்தன் கனகரத்தினம் மலர் மாலை அணிவித்தார்கள்.

நினைவுரைகள் இடம்பெற்றன. நினைவுரைகளின் இறுதியாக கட்சியின் கிழக்கு மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர்களான ரெலோ செயலாளர் நாயகம் கருணாகரம்,தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமை குழு உறுப்பினரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வினோ நோதரலிங்கம் உரையாற்றிக் கொண்டிருந்தார்.

குறித்த நினைவேந்தல் தின நிகழ்வு முடிவடையும் தருவாயில் கோப்பாய்ப் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்தமையால் அப்பகுதியில் திடீர் பரபரப்புத் ஏற்பட்டது.

இந்நிலையில் அங்கு வந்த கோப்பாய்ப் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குறித்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுகின்றனரா? என நன்கு நோட்டமிட்டதுடன் தற்போதைய கொரோனாத் தொற்று நிலைமை காரணமாக அப்பகுதியில் நீண்ட நேரம் ஒன்றுகூடியிருக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தினர்.

அஞ்சலி நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சிமன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் என்போர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

அகில இலங்கை ரீதியில் முதல் இடம் பெற்ற யாழ் மாணவன் தனராஜ் சுந்தர்பவனை ரெலோ ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் நேரில் சென்று கெளரவித்தார்

க. பொ.த. உயர்தர பரீட்சையில் 2020 புதிய பாடத்திட்டத்தில் கணிதப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதல் இடம் பெற்ற யாழ் சரசாலை மாணவன் தனராஜ் சுந்தர்பவனையையும், உயிரியல் பிரிவில் அகில இலங்கை ரீதியில் 30 வது இடம் பெற்ற அவர் சகோதரி தனராஜ் தரணிகாவையும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினுடைய ஊடகப் பேச்சாளர் சந்தித்து கெளரவித்தார்.

அவருடன் நல்லூர் ரெலோ பிரதேச சபை உறுப்பினர் மதுசூதன்,ரெலோ சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் கஜீதன் ஆகியோர் கலந்து டொண்டனர்.

வீழ்ச்சியடைந்த தமிழத்தின் கல்வியை அகில இலங்கை ரீதியில் முதல் இடம் பெற்று எழுச்சியையும் இனத்துக்கு கெளரவத்தையும் பெற்றுத் தந்தவர்கள் தொடர்ந்தும் சாதனைகளை நிலைநாட்ட வாழ்த்தினார்.

Telo Sri Anna 2021

தமிழ் தேசிய வீரர்களுக்கு மீண்டும் மீண்டும் தலை சாய்த்து அஞ்சலிக்கின்றோம்

தலைவர் ஸ்ரீசாபாவின் 35 வது நினைவு நாள் – 06/05/2021

“தமிழ் தேசிய ஒற்றுமை வாரம்”

(சித்திரை 29 – வைகாசி 06)

ஈழ விடுதலைப் போராட்டக் களத்தில்
விடுதலை இயக்கங்களின் ஒற்றுமை
குலைந்த,குலைக்கப்பட்ட நாள்!!
ஈழக் கனவு கலைந்த,கலைக்கப்பட்ட நாள்!!!
சுதந்திரத்துக்காக போராட
சுதந்திரம் மறுக்கப்பட்ட நாள்!!!
எம் மீதும் எம் தலை(வன்) மீதும்
துரோகம் சூட்டப்பட்ட நாள்!!!!

தமிழ் தேசிய வீரர்களுக்கு மீண்டும் மீண்டும் தலை சாய்த்து அஞ்சலிக்கின்றோம்

சுதந்திரம் எமது பிறப்புரிமை சுயாட்சி எமது கோரிக்கை

Posted in Uncategorized

கொழும்பு துறை முக நகர சட்டமூலம் தொடர்பான தீர்ப்பு சபாநாயகருக்கு கிடைக்கப் பெற்றுள்ளது

கொழும்பு துறை முக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றின் தீர்ப்பு சபாநாயகருக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

நேற்று (05) மாலை குறித்த தீர்ப்பு சபாநாயகருக்கு கிடைத்ததாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, அது தொடர்பில் எதிர்வரும் 18ஆம் திகதி பாராளுமன்றத்தில் சபாநாயகர் அறிவிக்கவுள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்துக்குப் பின்னர், அந்த சட்டமூலம் தொடர்பான விவாதம் பாராளுமன்றத்தில் 18 மற்றும் 19ஆம் திகதிகளில் நடத்தப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவும் வீதத்தை விட இலங்கையில் கொரோனா பரவும் வேகம் அதிகம் என தெரிவிப்பு!

இந்தியாவில் கொரோனா பரவும் வீதத்தை விட இலங்கையில் கொரோனா பரவும் வேகம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் எம் பாலசூரிய இந்தவிடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் சனத்தொகை மற்றும் இலங்கையின் சனத்தொகைக்கமைய பதிவாகும் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது தெளிவாவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த தமிழ் சிங்கள புதுவருடத்தின் பின்னர் நாளாந்தம் ஆயிரத்து 900 த்தை அண்மித்த கொரோனா தொற்றாளர்கள் பதிவாகி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Posted in Uncategorized
Telo Sri Anna 2021

தலைவர் சிறீ சபாரத்தினம் அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவு எழுச்சி

நாளைய தினம் 06/05/2021 காலை 10.00 மணிக்கு மறைந்த எம் தலைவர் சிறீ சபாரத்தினம் அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அவரை சுட்டு படுகொலை செய்த இடமான கோண்டாவில் அன்னங்கை தோட்ட வெளியில் நடைபெறும்.

நிகழ்வுகள்,

01,மறைந்த தலைவர்,போராளிகள்,பொதுமக்கள் ஆகியோருக்கு இரண்டு நிமிட மெளன அஞ்சலி,
02,பொதுச்சுடர் ஏற்றுதல்,
03,தலைவரின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்தல்,
04,திருவுருவ படத்திற்கு மலர் தூபி அஞ்சலி செலுத்துதல்.

நாட்டின் கோவிட் சூழ்நிலை காரணமாக மாவட்ட செயலகங்களில் 06-05-2021 அன்று எளிமையான முறையில் நடைபெறும்.

 

 

 

தமிழ் தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் சமல் ராஜபக்சவுடன் சந்திப்பு

தமிழ் தேசிய கட்சிகளின் ரெலோ, தமிழ் அரசு கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் புளட் ஆகிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பில் அமைச்சர் சமல்ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன் போது பல்வேறு விடயங்களுக்கு அமைச்சர் சாதகமான பதில்களை வழங்கியுள்ளதுடன் அடுத்த கட்டமாக மீண்டும் ஒரு சந்திப்பை நடத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

1.கல்முனை பிரதேச செயலகத்தை தரமிறக்கும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க இணக்கம் தெரிவித்தார்.

2. முல்லை கரைத்துறைப்பற்றில் 08 கிராம சேவையார் பிரிவுகளதும் காணி நிர்வாகத்தினை மகாவலி அதிகார சபை பொறுப்பேற்பதனை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக இணங்கினார்.

இது தொடர்பில் குழு அமைத்து ஆராயும் வரை எந்த நடவடிக்கையும் மேலதிகமாக நடைபெறாதனவும் இணங்கினார்.

3. மாதுறு ஓயா இடது கரை நீர்ப்பாசன நீரை வாகனேரி குளத்திற்கு கொண்டு செல்லும் வகையில் விளானோடையில் தடுப்பு அணை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கும் இணங்கினார்.

4.மகாவலி நீர் கோடைகாலத்தில் மாவில் பகுதியில் மறிக்கப்பட்டு கோடைகால விவசாயத்திற்காக மூதூர் பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது.

இதனால் மாவில் பகுதியிலிருந்து கடற்கரை வரையான 12KM நீளமான பகுதியில் மாகாவலி ஆற்றின் இரு கரைகளிலும் ஏற்று நீர்ப்பாசனம் மூலம் விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் மார்ச் முதல் செப்ரெம்பர் வரை நீர் இன்மையால் நீர்ப்பாசனம் செய்ய முடியாத நிலையில் பயிர்கள் அழிவடைகிறது.

அதனால் மாதம் இருமுறை மாவில் பகுதியிலிருந்து நீரை திறந்து ஏற்று நீர்ப்பாசன விவசாயிகளுக்கு வசதி செய்யுமாறு கோரனோம் அதற்கும் இணங்கினார்.

5.அபிவிருத்தி உத்தியோகத்தர்களது இடமாற்ற விடயம் பற்றிப் பேசுவதற்கு இம்மாத இறுதியில் நேரம் ஒதுக்குவதாக தெரிவித்தார்.

பிரதமரின் கூட்டத்தை புறக்கணித்த பங்காளிக்கட்சிகள்

அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகளின் பல தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

வாசுதேவ நானாயக்காரா, உதய கம்மன்பிலா, பேராசிரியர் திஸ்ஸா விட்டாரணா, டாக்டர் ஜி.வீரசிங்க, விமல்வீரவன்சா ஏ.எல்.எம் அதாவுல்லா, டிரான் அலெஸ், அசங்கா நவரத்னே, அதுரலியே ரத்தனா தேரா் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

மாகாண சபைத் தேர்தல் முறை தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக பிரதமரின் தலைமையில் கட்சித் தலைவர்களின் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டதாக அறியப்படுகிறது.

மீண்டும் கூட்டம் எதிர்வரும் 11ம் திகதி அலரிமாளிகையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.