அர்த்தமுள்ள வகையில் செயல்படுமாறு இலங்கை அரசாங்கத்தை இந்தியா வலியுறுத்தியுள்ளது

தமிழர்கள் உட்பட தனது அனைத்து குடிமக்களின் அடிப்படை சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கான, தனது உறுதிமொழிகளை விரைவில் செயல்படுத்துவதற்கு “அர்த்தமுள்ள வகையில்” செயல்படுமாறு இலங்கை அரசாங்கத்தை இந்தியா வலியுறுத்தியுள்ளது.

“இலங்கையின் நெருங்கிய அண்டை நாடாகவும் நண்பராகவும், 2009ஆம் ஆண்டு முதல் இலங்கையின் நிவாரணம், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் புனரமைப்புச் செயன்முறைகளுக்கான இலங்கையின் முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றது” என ஜெனிவாவில் உள்ள ஐ. நா சபை மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புகளுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி இந்திராமணி பாண்டே தெரிவித்துள்ளார்.

சமத்துவம், நீதி, கண்ணியம் மற்றும் அமைதிக்கான தமிழர்களின் அபிலாஷைகளை ஆதரிக்கும் இரண்டு அடிப்படைக் கொள்கைகளை இந்தியா ஆதரித்து வருகிறது.

இந்தியா ஊக்குவிக்கும் விடயங்கள்

அத்துடன் இலங்கையின் ஐக்கியம், பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை, இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளையும் இந்தியா ஊக்குவிப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கையின் ஊடாடும் உரையாடலின் போது பாண்டே கூறியுள்ளார்.

சமத்துவம், நீதி மற்றும் அமைதிக்கான தமிழர்களின் அபிலாஷைகளையும், 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் மாகாண சபைத் தேர்தலை நடத்தி இலங்கையில் தமிழர்களுக்கு மரியாதை மற்றும் கண்ணியமான வாழ்வை உறுதி செய்வதற்கும் இலங்கை அரசாங்கம் உறுதியளிக்கும் என்று இந்தியா நம்புவதாக பாண்டே குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் உள்ள சிறுபான்மை தமிழ் சமூகம் தமக்கான அதிகாரப் பகிர்வை வழங்கும் 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி வருகின்றது.

13வது திருத்தம், இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் கொண்டு வரப்பட்டது. இது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தற்காலிக இணைப்புடன் 9 மாகாணங்களை பகிர்ந்தளிக்கப்பட்ட அலகுகளாக உருவாக்கியது.

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேர்தல்கள்

இந்தநிலையில் தேர்தல் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையைத் தொடர்ந்து ஒன்பது மாகாணங்களுக்கான தேர்தல்கள் 2018 முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன

தற்போதுள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் தேர்தலை நடத்துவதற்கு நாடாளுமன்றத் திருத்தம் தேவைப்படுகிறது என்று பாண்டே தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் தனது உறுதிமொழிகளை செயல்படுத்துவது குறித்து இலங்கை அரசாங்கத்தின் மறுஉறுதிப்படுத்தலை கவனத்தில் கொண்டுள்ளது.

இருப்பினும், அதற்கான முன்னேற்றம் போதுமானதாக இல்லை, கடந்த வருடத்தில் இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் அதன் பொருளாதார சவால்களை சமாளிக்க இந்தியா நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் பலமுனை ஆதரவை வழங்கியுள்ளதாக பாண்டே தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

”G77+ சீனா” மாநாட்டுக்கு புறப்பட்டார்‌ ஜனாதிபதி

“தற்போதைய அபிவிருத்தி சவால்களுக்கு மத்தியில், விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தின் வகிபாகம்” என்ற தொனிப்பொருளில் செப்டம்பர் 14 முதல் 16 வரை கியூபாவின் ஹவானாவில் நடைபெறவுள்ள “G77+ சீனா” அரச தலைவர் மாநாட்டில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (13) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டார்.

அதேநேரம், எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 78ஆவது வருடாந்த அமர்வின் அரச தலைவர்கள் மாநாட்டிலும் ஜனாதிபதி கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.
எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான நுமு-649 ரக விமானம் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 03.15 மணியளவில் டுபாய் நோக்கி ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் சென்றுள்ளனர்.

துபாயில் இருந்து ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் அமெரிக்கா செல்லவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஜனாதிபதி நாடு திரும்பும் வரை அவரின் கீழுள்ள அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்களும் தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில், தொழில்நுட்ப பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்தும், சிறுவர், மகளிர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர் அனூப பெஸ்குவலும், பதில் நிதி அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவும், பாதுகாப்பு பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனுவும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி: 6 உடற்பாகங்கள் மீட்பு

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் செவ்வாய்க்கிழமை (12) ஆறாவது நாளாக இடம்பெற்ற நிலையில் ஆறாம் நாள் அகழ்வுப் பணிகள் சற்றுமுன்னர் நிறைவடைந்தன.

குறித்த அகழ்வாய்வின் போது ஏழு மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருந்ததுடன் ஐந்து மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தொடர்சியாக அகழ்வுபணிகள் நடைபெற்றிருந்தன.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த புதன்கிழமை (06) உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இந் நிலையில் ஆறாம் நாள் அகழ்வாய்வுகள் இன்று (12) முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ , தொல்லியல் ஆய்வாளர் பரமு புஷ்பரட்ணம், தடயவியல் பொலிஸார், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அகழ்வு பணியின் இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா இன்றையதினம் ஒரு உடற்பாகம் முழுமையாகவும் இன்னொரு உடற்பாகம் பகுதியளவில் மீட்கப்பட்டதாகவும் ஏற்கனவே மீட்கப்பட்ட ஐந்து உடற்பாகங்களுடன் ஆறு உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த பகுதியில் துப்பாக்கி சன்னம் ஒன்றும், கழிவு நீரை சுத்திகரிக்கும் உபகரணம் ஒன்றும் தடயப்பொருட்களாக எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அகழ்வு பணியில் உடலங்களை அடையாளப்படுத்துவதில் கடினத்தன்மை காணப்படுவதாகவும் ஒன்றன் மேல் ஒன்றாக பல உடல்கள் பின்னி பிணைந்து இருப்பதாலும் இந்தநிலை தோன்றியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் அகழ்வு பணிகள் தொடர்ந்து நாளைய(13) தினமும் ஏழாவது நாளாக முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை நடவடிக்கைகளில் 19.4% ஐ இலங்கை நிறைவு செய்துள்ளது

2023 ஆகஸ்ட் இறுதி வரை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தீர்மானம் 30/1 இன் கீழ் நடைமுறைப்படுத்துவதாக உறுதியளிக்கப்பட்ட நடவடிக்கைகளில் 19.4% ஐ இலங்கை நிறைவு செய்துள்ளது என்று வெரிடே ரிசர்ச் வெளியிட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்டதிலிருந்து,எட்டு வருடங்களாக, தீர்மானத்தின் 61.1% உறுதிப்பாடுகள் ‘மோசமான’ அல்லது ‘இல்லை’ என்ற அளவில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

7 விடயங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்தநிலையில், (1) பரந்த நிலைமாற்று நீதி செயல்முறைகளில் ஈடுபடுதல்; (2) காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகத்தை நிறுவுதல்; (3) இழப்பீடுகளுக்கான அலுவலகத்தை நிறுவுதல்; (4) வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களில் இருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச மாநாட்டில் கையெழுத்திட்டு உறுதிப்படுத்துதல்; (5) வலுக்கட்டாயமாக காணாமல் போதல்களை குற்றமாக்குதல்; (6) மற்றும் (7) சிறப்பு நடைமுறை ஆணை வைத்திருப்பவர்களுடன் ஒத்துழைக்க வேண்டும் என்ற 7 விடயங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

எனினும் 2015 ஆம் ஆண்டு முதல் ‘மோசமான நிலையில் இருக்கும் சில முக்கிய கடமைகளாக, பொதுமக்களின் வாழ்க்கையை இயல்புநிலைக்கு மீட்டமைத்தல்; (2) ஊடகவியலாளர்கள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள், மத சிறுபான்மையினர் மற்றும் சிவில் சமூகத்தின் மீதான தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகள், (3) இந்தத் தாக்குதல்களின் குற்றவாளிகளைக் கண்டறிதல் மற்றும் (4) எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்களைத் தடுப்பது போன்ற விடயங்களிலும் எந்த முன்னேற்றமும் இல்லை என வெரிடே ரிசேர்ச் தெரிவித்துள்ளது.

புதிய அரசியல் கட்சிக்கு கோட்டாபய ராஜபக்ஸ ஆதரவு?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ புதிய அரசியல் கட்சியொன்றுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக Daily Mirror பத்திரிகை இன்று செய்தி வௌ்யிட்டுள்ளது.

தொழிலதிபரான திலித் ஜயவீர தலைமையிலான மவ்பிம மக்கள் கட்சிக்கு கோட்டாபய ராஜபக்ஸ தமது ஆதரவை வழங்கியுள்ளதாக Daily Mirror பத்திரிகையின் முதற்பக்கத்தில் செய்தி வௌியிடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஜூலை மாதம் ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்த கோட்டாபய ராஜபக்ஸ, தனக்கு மிகவும் நெருக்கமான தொழிலதிபர் தலைமையிலான புதிய அரசியல் கட்சியின் மூலம் இழந்த தனது நன்மதிப்பை மீண்டும் கட்டியெழுப்பவும் பலப்படுத்தவும் தயாராகி வருவதாக அந்த பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்தாலும், முன்னாள் ஜனாதிபதிக்கான சகல சலுகைகளையும் வசதிகளையும் பெற்றுக்கொள்ளும் கோட்டாபய ராஜபக்ஸ, அண்மையில் தொழிலதிபர் திலித் ஜயவீரவினால் வாங்கப்பட்ட மவ்பிம மக்கள் கட்சிக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அந்த பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஜயவீர, மவ்பிம மக்கள் கட்சியை பொறுப்பேற்ற பின்னர், கட்சியின் யாப்பு மாற்றப்பட்டு புதிய அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவை மேற்கோள்காட்டி குறித்த பத்திரிகை கூறியுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஸவின் வியத்மக அமைப்பிற்கு இணையாக புதிய உறுப்பினர்களை கட்சியில் இணைத்துக்கொள்வதுடன், கல்விமான்களை உறுப்பினர்களாக இணைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் Daily Mirror பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மவ்பிம மக்கள் கட்சியும் திலித் ஜயவீரவின் அமைப்பும் இணைந்து எதிர்வரும் தேர்தலில் மவ்பிம மக்கள் கட்சியின் கீழ் போட்டியிடவுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட தலைவர் ஹேமகுமார நாணயக்கார, குறித்த பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் இந்தக் கட்சி போட்டியிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்த செய்தி குறித்து தொழிலதிபர் திலித் ஜயவீர தனது பேஸ்புக் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.

Daily Mirror பத்திரிகையின் நண்பர்களே, இங்குள்ள தலைப்பு மற்றும் அதன் உள்ளடக்கம் தவறாக வழிநடத்துகிறது. தயவுசெய்து என்னை அழைக்கவும், நான் உங்களுக்கு சரியான விடயங்களை வழங்குகின்றேன்.

என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

நாட்டை விட்டு தப்பிச் சென்ற புலனாய்வு அதிகாரி! பிள்ளையானின் கட்சியின் முக்கியஸ்தர் கூறிய உண்மைகள்

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சனல் 4 விவகாரத்தினை தனது அரசியலுக்காக பயன்படுத்தமுனைவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (10.09.2023) அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் சஜித் பிரேமதாச கடந்த காலத்தில் தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு வாய்துறக்காத நிலையில் சனல் 4 விவகாரம் குறித்து மட்டும் பேசுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் இது தொடர்பிலான முழுமையான தகவல்கள் பின்வரும் காணொளியில் பதிவாகியுள்ளன.

https://www.facebook.com/watch/?v=855161639077353

Posted in Uncategorized

இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட பத்துபேரின் விபரங்களை தருமாறு பல நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன-ஐநாவின் பிரதி மனித உரிமை ஆணையாளர்

இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட பத்துபேரின் விபரங்களை தருமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்திடம் பல நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன என ஐக்கியநாடுகளின் பிரதி மனித உரிமை ஆணையாளர் நடா அல் நசீவ் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களை நிராகரித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர் உரிய தகவல்கள் ஆதாரங்களை வழங்குவதற்காகவும் உரிய நீதித்துறை மற்றும் ஏனைய செயற்பாடுகளிற்கு ஆதரவை வழங்குவதற்காகவும் தனது அலுவலகம் ஆதாரங்கள் தகவல்களை சேகரிக்கும் பாதுகாக்கும் ஆராயும் நோக்கில் பொறுப்புக்கூறல் திட்டத்தை ஆரம்பித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

தனது திட்டத்திடமிருந்து தகுதிவாய்ந்த அதிகாரிகள் அதிகளவில் வேண்டுகோள்களை விடுக்கின்றனர் குறிப்பாக பத்துபேர் குறித்த விபரங்களை கோருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தை மீண்டும் நிராகரித்த இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1, 51/1 தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என இலங்கை அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான உரையாடலின் போதே ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியான ஹிமாலி சுபாஷினி அருணதிலக இதனை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் பொறுப்புக்கூறல்தொடர்பான திட்டத்தை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கின்றது என ஜெனீவா ஐநாவிற்கானஇலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி சுபாசினி அருணதிலக தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமைபேரவையின் 54 அமர்வின் ஆரம்பத்தில்நேற்று இலங்கையின் நிலைப்பாட்டை முன்னிறுத்தி உரையாற்றுகையில் அவர் இதனைதெரிவித்துள்ளார்ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் பொறுப்புக்கூறல்தொடர்பான திட்டத்தை சந்தேகத்திற்குரிய ஆணை என வர்ணித்துள்ள அவர் மேலும்தெரிவித்துள்ளதாவது

இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறல் திட்டத்திற்கு வழிவகுத்தஇரண்டு 46.ஃ1 -51.ஃ1 தீர்மானங்களையும் முற்றுமுழுதாக நிராகரித்துள்ளது என்பதை நான்ஆரம்பத்திலேயே தெரிவிக்க விரும்புகின்றேன்.எழுத்துமூல அறிக்கைகளையும் முடிவுகளையும் பரிந்துரைகளையும் நாங்கள்நிராகரிக்கின்றோம்.

இந்த தீர்மானங்களின் காணப்படும் உள்ளடக்கங்களைஏற்றுக்கொள்ளாததால் பல நாடுகள் இந்த தீர்மானத்தை எதிர்த்தன அல்லது அதில்வாக்களிப்பதைதவிர்த்தன என்பதை நாங்கள் மீண்டும்நினைவுபடுத்தவிரும்புகின்றோம்.குறிப்பாக ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையை அவர்கள் ஏற்றுக்கொள்ளவேயில்லை.ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளமைமுன்னொருபோதும் இடம்பெறாத விடயம்.

இது மனித உரிமைபேரவையின் உறுப்பு நாடுகள் பேரவைக்கு வழங்கிய ஆணைக்குஅப்பால் செல்கின்றது என்பதை இலங்கை மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றது.இந்த தீர்மானங்கள் உள்விவகாரங்களில் தலையிடுபவை சமூகங்களைதுருவமயப்படுத்துபவவை.

மேலும் இந்த தீர்மானங்களை மனித உரிமைகளிற்கு அப்பாற்பட்டகாரணங்களிற்காகவும் தங்களின் உள்நாட்டு அரசியலுக்காகவும் ஒருசில நாடுகள் பின்பற்றுகின்றனஇந்த தீர்மானத்தின் நிதிசார்ந்த தாக்கங்கள் குறித்து பல நாடுகள்கேள்வி எழுப்பியுள்ளனஇது பேரவையினதும் உறுப்புநாடுகளினதும்வளங்கள் மீது பயனற்றவிதத்தில் செலவுகளை உருவாக்ககூடியது என்பதைஇலங்கை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டிவந்துள்ளது.

இதன் காரணமாக இலங்கை இதற்கு ஒத்துழைப்பு வழங்காது.எனினும் பல்தரப்பு கட்டமைப்பில் ஆக்கபூர்வமாக பங்கெடுக்கின்றநாடு என்ற அடிப்படையிலும் சர்வதேச சமூகத்துடனான எங்களின் ஆழமான ஈடுபாட்டை கருத்தில்கொண்டும்.இலங்கை பேரவையின் ஏனைய பொறிமுறைகளுடன் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை தொடர்ந்தும்பேணும

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை இலங்கை இடைநிறுத்தவேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம் மனித உரிமை பேரவையில் வேண்டுகோள்

இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டம் சர்வதேச சட்டங்கள் சர்வதேசதாரதங்களை பின்பற்றும்வரை அதனை பயன்படுத்துவதை இடைநிறுத்திவைக்கவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் பொறுப்புக்கூறல் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களித்தலை நிறுத்துதல் ஆகியவற்றையும் வலியுறுத்தியுள்ளது.

இலங்கை மேலும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 54 அமர்வு இன்று ஆரம்பமானவேளை ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை குறித்த அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளது.

இலங்கையின் நல்லிணக்க பொறிமுறைகளை கருத்தில்எடுத்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தின் பொருளாதார நிதி நெருக்கடி காரணமாக இலங்கை எதிர்கொண்ள்ள சவால்களை கவனத்தில் எடுத்துள்ள அதேவேளை கருத்துசுதந்திரம் கருத்துவெளிப்பாட்டுச்சுதந்திரம் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் மற்றும் இலங்கையின் அனைவரினதும் பொருளாதார சமூக கலாச்சார சுதந்திர உரிமைகள் ஆகியவற்றை உட்பட மனித உரிமைகளை உறுதி செய்வதற்கான அவசியத்தை வலியுறுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக எடுக்கப்பட்ட சாதகமான நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதார ஸ்திரதன்மைக்கு வழிவகுத்ததை ஏற்றுக்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் பலவந்தமாக காணாமல்செய்யப்பட்ட பல சம்பவங்களிற்கு தீர்வை காணல் ஆகியவற்றையும் வலியுறுத்தியுள்ளது.

அமைதியான ஒன்றுகூடுதலிற்கான உரிமையை உறுதி செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம் அமைதியான வழியில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களிற்கு எதிராக பலத்தை பிரயோகிப்பதை தவிர்க்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தை பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை அது சர்வதேச சட்டங்கள் தராதரங்களை முழுமையாக பின்பற்றும்வரை இடைநிறுத்திவைக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் பொறுப்புக்கூறல் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களித்தலை நி;றுத்துதல் ஆகியவற்றையும் வலியுறுத்தியுள்ளது.

Posted in Uncategorized

பாரிய சைபர் தாக்குதல்: பல அரச நிறுவனங்களின் தரவுகள் அற்றுப்போகும் அபாயம்

பாரிய சைபர் தாக்குதல் காரணமாக அமைச்சரவை அலுவலகம் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களின் அதிகளவிலான தரவுகள் அற்றுப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ICTA எனப்படுகின்ற இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் இதனை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியது.

இந்த வருடம் மே மாதம் 17 ஆம் திகதி மற்றும் ஆகஸ்ட் 26 ஆம் திகதிகளில் இடம்பெற்ற பாரிய வைரஸ் தாக்குதல் காரணமாகவே இந்த தரவுகள் அற்றுப்போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் கூறுகின்றது.

இதற்கமைய gov.lk என்ற மின்னஞ்சலை பயன்படுத்தும் அனைத்து அரச அலுவலகங்களிலும் தரவுகள் அற்றுப்போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக ICTA உறுதிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக சண்டே டைம்ஸ்” பத்திரிகை இன்று(10) விரிவாக தகவல்களை வௌியிட்டிருந்தது.

gov.lk என்ற மின்னஞ்சலை பயன்படுத்தும் அரச நிறுவனங்களில் அமைச்சரவை அலுவலகம் உள்ளிட்ட இராஜாங்க அமைச்சுகள் பல உள்ளன.

இந்த மின்னஞ்சல் ஊடாக மிகவும் முக்கிய அரச தகவல்கள் பரிமாறப்படுகின்றன.

இந்த தாக்குதல் ransomware தாக்குதல் எனவும் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் கூறுகின்றது.

ransomware தாக்குதல் என்றால் என்ன?

ஏதேனும் ஒரு மின்னஞ்சல் ஊடாக கிடைக்கும் இணைப்பு அல்லது Link-ஐ கிளிக் செய்யும் போது அந்த முழு மின்னஞ்சல் கட்டமைப்பையும் ஹெக்கரின் பிடிக்குள் கொண்டுவரப்படுவதே ரான்சம் வெயர் தாக்குதல் எனப்படுகிறது.

இதனை அடுத்து இந்த மின்னஞ்சல் கட்டமைப்புகள் உள்ள தரவுகளை அணுகவும் அவற்றை பயன்படுத்தவும் அதன் உரிமையாளரால் முடியாமற்போகும்.

இந்த ransomware தாக்குதலின் பின்னர் என்ன நடந்தது.

ransomware தாக்குதலால் சுமார் ஐயாயிரம் மின்னஞ்சல் முகவரிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ICTA நிறுவனம் ஏற்றுக்கொள்கின்றது.

ஓவ் லைன் பெக்கப் எனப்படுகின்ற மேலதிக தரவுக் கட்டமைப்பொன்று இருக்காததால் இந்த தாக்குதல் இடம்பெற்று இரண்டரை மாதங்கள் கடந்தும் ஈமேல்கள் இல்லாமற்போயுள்ளன.

ICTA தற்போது என்ன கூறுகின்றது.

இவ்வாறு தரவுகள் அழிவடையும் சம்பவங்கள் மீள நிகழாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ICTA எனப்படுகின்ற இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தின் பின்னர் நாளாந்தம் ஓவ் லைன் பெக்கப் செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனைத் தவிர பயன்படுத்துகின்ற செயலிகளை புதுப்பிக்கவும் வைரஸ் தாக்குதல்கள் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு முறைகளை கையாளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ICTA கூறியுள்ளது.

காணாமற்போயுள்ள முக்கிய அரச தகவல்களை மீளப்பெற்றுக்கொள்ள முடியுமா?

தமது நிறுவனம், SL CERT எனப்படும் இலங்கை கணினி அவசரநிலை ஆயத்தக் குழுவுடன் இணைந்து அற்றுப்போயுள்ள தகவல்களை மீளப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் மூலோபாய தொடர்பாடல் தொடர்பான பணிப்பாளர் சம்பத் டி சில்வா கூறினார்.