ஜனாதிபதி கோட்டாபயவுடன் இனி ஒருபோதும் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் – 11 கட்சிகள் தீர்மானம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இனி ஒருபோதும் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் என சுயாதீனமாக இயங்குவதற்கு தீர்மானித்துள்ளன 11 கட்சிகள் தீர்மானித்துள்ளன.
இந்தப் பேச்சுவார்த்தை இன்று (12) நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தப்படவிருந்தது.

பௌத்த தேசம்; கொழும்பில் பிக்குகள் களமிறக்கம்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் மோதுவதற்கு இன்று (12) ராஜபக்ச ஆதரவு பிக்குகள் குழுவொன்று தயாராகி வருகிறது.

கொழும்பு தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஸ கலையரங்கிற்கு அருகிலிருந்து இந்த பேரணி முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த ஆர்ப்பட்ட குழு ஜனாதிபதி செயலகத்தை அண்மித்த பகுதிக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளைத் துணி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வண.வட்டினாபஹ சோமானந்த தேரரிடம் இந்த நடவடிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, தேரர் உள்ளிட்ட பிக்குகள் குழுவொன்று தீவிரவாத இனவாதிகள் குழுவுடன் இணைந்து மக்கள் போராட்ட பூமியை ஆக்கிரமிக்கத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Update: A pro-government protest march was held at Viharamahadevi Park. pic.twitter.com/3zcFQcDF6s

— DailyMirror (@Dailymirror_SL) April 12, 2022

‘சிங்கள பௌத்த ஆணைக்கு கை வைக்கும் பொய்யான போராட்டங்களுக்கு ஏமாறாதீர்கள்’ என்ற தொனிப்பொருளில் இந்த எதிர்ப்பு ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதுவேளை, ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுவரும் காலிமுகத்திடல் பகுதியில் பல உளவாளிகள் இறக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இந்த தகவல் வெளியாகியுள்ள நிலையில், இப்போராட்டத்திற்கு ஆதரவாக இலட்சக்கணக்கான மக்கள் தற்போது போராட்டக்களத்தில் திரண்டு வருகின்றனர்.

அரசாங்கம் எவ்வளவு ஆத்திரமூட்டல் செய்தாலும், அமைதியான முறையில் செயல்பட வேண்டும் என்றும், வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்றும் போர்க்களத்தில் உள்ள அமைப்பாளர்கள், வலியுறுத்துகின்றனர்.

அரசாங்கம், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு பாடம் கற்பிக்க போவதாக கூறிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் மீண்டும் இனவாதத்தை தூண்டும் வகையிலான இந்த சதி குறித்து ஏற்கனவே இலங்கை தூதரகங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கு மோதல் வலயத்தில் உள்ள இளம் செயற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

இலங்கை நெருக்கடி: மஹிந்த ராஜபக்ஷ மெளனம் கலைந்தார் – காணொளி உரையின் 15 முக்கிய தகவல்கள்

இலங்கை தற்போது எதிர்கொண்டு வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள இரவு, பகலாக உழைத்து வருவதாக அந்நாட்டுப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசு மிகப்பெரிய அளவிலான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், அந்நாட்டில் ஆளும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சவையில் இடம்பெற்றுள்ள அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பதவி விலக வேண்டும் என்று கோரி பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகிறார்கள்.

இந்த விவகாரத்தில் இதுவரை பொதுவெளியில் எந்த கருத்தையும் வெளியிடாமல் தவிர்த்து வந்த இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏப்ரல் 11ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் பதிவு செய்யப்பட்ட காணொளியை தமது ஃபேஸ்புக் சமூக ஊடக பக்கம் வாயிலாகவும் ஊடகங்களிடம் பகிர்ந்துள்ளார். அதன் சில முக்கிய அம்சங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்

1. யுத்தத்தை வெற்றி கொண்டு, 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்ற சந்தர்ப்பத்தில் மக்கள் மறந்த கதை தற்போது எனக்கு நினைவிற்கு வருகிறது. எதிர்காலத்தில் மின்சாரம் தடைபடாத நாடொன்றை நான் உருவாக்குவேன் என அன்று நான் கூறினேன். அதற்கான மின் உற்பத்தி நிலையங்களை ஸ்தாபிக்கும் திட்டங்களை ஆரம்பித்திருந்தாலும், முந்தைய அரசாங்கம் எமது திட்டத்தை உரிய வகையில் முன்னோக்கி கொண்டு செல்லாததால் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாமல் போனது.

2. எரிபொருள் வாங்க மக்கள் நாட்கணக்கில் கஷ்டப்பட்ட துன்பத்தை எம்மால் உணர முடிகிறது. எரிவாயுவை வாங்க நின்ற பெண்களின் சிரமத்தை எம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. பொருட்களின் விலைகள் வானளாவ உயர்ந்துள்ளது. இந்த நேரத்தில் நாட்டை ஒன்றிணைத்துக் கட்டியெழுப்புவதற்கு நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளுக்கும் நாம் அழைப்பு விடுத்தோம். எனினும், அவர்கள் வரவில்லை.

3. தற்போது கட்சி தொடர்பில் சிந்திப்பதை விடவும், நாட்டின் பொருளாதாரத்தை வலுப் பெற செய்வதே எம் அனைவரது பொறுப்பாகும். யார் பொறுப்பேற்கா விட்டாலும், அதிகாரத்திலுள்ள கட்சி என்ற வகையில் நாம் அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்கின்றோம். இந்த பிரச்னைகளுக்கு நாம் தீர்வை பெறுவோம்.

4. 30 வருட பயங்கரவாதத்தை தோற்கடித்து, இந்த நாட்டு மக்கள் மத்தியில் இருந்த மரண அச்சுறுத்தலை இல்லாது செய்தோம். இந்த நேரத்தில் மக்கள் கஷ்டப்பட நாம் வசதிகளை உருவாக்கவில்லை. அதிவேக வீதிகள், நவீன வீதிகள் நிர்மாணிக்கப்பட்டது, உங்களை அந்த வீதிகளில் வரிசைகளில் நிற்க வைப்பதற்காக அல்ல. நாம் துறைமுகங்களை நிர்மாணித்தது, எரிபொருள் கப்பல்களை பணம் செலுத்தி அதில் உள்ள பொருட்களை வாங்க முடியாமல் நிறுத்தி வைப்பதற்காக அல்ல.

5. மக்கள் மீது கண்ணீர் புகை பிரயோகத்தை நடத்துவதற்காகவும், துப்பாக்கி சூடுகளை நடத்துவதற்காகவும் நாம் ஆட்சி நடத்தவில்லை. இந்த நாட்டின் அனைத்து பிரச்னைகளின் போதும், மக்களை பாதுகாத்துக்கொள்ள முழுமையாக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட வரலாறு எமக்கு உள்ளது. மக்களுடன் தைரியமாக வேலை செய்து, இலங்கையை கடனற்ற நாடாக மாற்றுவதற்காகவே நாம் பாடுபடுகிறோம். மிகவும் சிரமமான காலத்தில் கூட வெளிநாடுகளிடமிருந்து உதவிகளை பெற்றுக்கொள்ளும் போது, நாட்டின் சுயாதீனத்தை பாதுகாத்துக் கொள்ளவே இந்த அரசாங்கம் முயற்சித்தது.

6. இந்த நாட்டின் ஜனநாயக ஆட்சியை சீர்குலைக்காத விதத்திலான தீர்மானமொன்றை எடுப்பது எமது பொறுப்பாகும். அந்த நோக்கத்திற்காக மாத்திரமே வேலை செய்தோம். ‘நாடாளுமன்றத்திலுள்ள 225 பேரும் வேண்டாம்’ என்ற போராட்டம் தற்போது எமக்கு கேட்கிறது. அதனூடாக இந்த ஜனநாயக முறைமையை நிராகரிப்பது என்றால், அந்த ஆபத்தின் எதிர்காலத்தை சிந்தித்து புரிந்து கொள்ள வேண்டும்.

7. நாடாளுமன்றத்தில் குண்டுகளை வீசி, முழு நாடாளுமன்றத்தையும் இல்லாது செய்வதன் ஊடாக ஏற்படும் அனர்த்தத்தை நாம் கண்டுள்ளோம். அன்று நாடாளுமன்ற ஜனநாயகம் நிராகரிக்கப்பட்டதால், இளைஞர்கள் ரத்தம் வீதிகளில் வழிந்தோடியதை கண்டோம். இந்த ஜனநாயகத்தை நிராகரிக்க வேண்டும் என்றால், அந்த அபாயத்தை கடந்த காலங்களை நினைத்துப் பார்த்து முடிவெடுக்க வேண்டும்,

8. ஆயிரக்கணக்கான இளைஞர்களை உயிரோடு எரித்தார்கள். 88, 89 ஆகிய இருள்ட யுகத்தில் 60 ஆயிரம் வரையான இளையோரின் உயிர்களை நாம் இழந்துள்ளோம். அன்று இளைஞர்களின் உயிர்களை காப்பாற்றுவதற்கு நாம் எடுத்த முயற்சி, முதியோரின் நினைவில் இருப்பதை நாம் நன்கறிவோம். தெற்கிலுள்ளவர்களை போன்று வடக்கில் உள்ளவர்களுக்கும் இதனை நினைவுப்படுத்த வேண்டும்.

9. அந்த இறந்த உறவுகளின் பெற்றோரிடம் கேட்டால், உண்மையை தெரிந்து கொள்ள முடியும். நாடாளுமன்றம் வேண்டாம், தேர்தல் வேண்டாம் என கூறியே, மக்கள் பிரதிநிதிகள் வீதிகளில் கொலை செய்யப்பட்டனர். அதனூடாகவே 70களில் வடக்கு இளைஞர்கள் போராட்டத்தை ஆரம்பித்தார்கள். அந்த அரசியல் செயல்பாடு காரணமாக வடக்கில் மாத்திரமன்றி, தெற்கு மக்களும் துன்பங்களை அனுபவித்தனர்.

10. கண்ணி வெடிகளுக்கு, துப்பாக்கி சூடுகளுக்கு ஆயிரக்கணக்கானோர் பலியானார்கள். பாடசாலை மாணவர்களும் படிப்படியாக போராட்டத்திற்கு அழைத்த செல்லப்பட்டார்கள். அதன் பின்னர் பாடசாலை மாணவர்களை பலவந்தமாக யுத்தத்திற்கு அழைத்து சென்றனர்.

11. நாடாளுமன்றம் வேண்டாம் என்றே அன்றும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் ஆபாயத்தை நாம் அறிந்தமையினால், உங்களிடம் ஒன்று கேட்டுக்கொள்கின்றேன். நீங்கள் பிறந்த இந்த தாய் நாட்டை மீண்டும் அந்த இருள் சூழ்ந்த யுகத்திற்கு கொண்டு செல்ல வேண்டாம் என நாம் கேட்டுக்கொள்கிறோம். இந்த பிரச்னையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தில் இருப்பவர்கள், ஒவ்வொரு நொடியையும் கடக்கின்றனர். இரண்டு அல்லது மூன்று நாட்களில் முடியாது போனாலும், விரைவில் இந்த பிரச்னையைத் தீர்ப்போம்.

12. நீங்கள் வீதிகளில் போராடும் ஒவ்வொரு தருணத்திலும், எமது நாட்டிற்கு டொலர் கிடைப்பதற்கான சந்தர்ப்பம் இல்லாது போகிறது. பாரிய அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு முன்னர், தேசத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த பிரச்னையிலிருந்து மீண்டெழுவது எம் அனைவரது பொறுப்பாகும். அதற்காக சக்தி, தைரியம் உள்ள அனைவரையும் நாம் அழைத்திருக்கிறோம்.

13. உங்களின் பொறுமை இந்த நாட்டிற்கு தற்போது அவசியம். அன்புக்குரிய பிள்ளைகளே, நீங்கள் பிறந்த இந்த பூமியின் மீது அளப்பரிய அன்பை கொண்டுள்ளீர்கள் என்பதை நாம் அறிவோம். அன்று வன்முறைகளிலிருந்து இளைஞர்களை காப்பாற்றுவதற்கு பாத யாத்திரை செல்லும் போது, மிதிக்கப்பட்ட மணல் துகில்ககளை விடவும், எனக்கும், எனது குடும்பத்திற்கும் கூறியுள்ள நிந்தனைகள் மற்றும் அபகீர்த்திகள் அதிகம் என்பதை சம்பந்தப்பட்டவர்களிடம் கூற வேண்டும்.

14. நாட்டிற்கான கடமைகளில் ஈடுபட்டுள்ள முப்படையினர், போலீஸார் இடையூறு, அபகீர்த்தி ஏற்படுத்த வேண்டாம். இன்று சுதந்திரமாக வீதிகளில் நீங்கள் பயணிக்க, ஆர்ப்பாட்டங்களை நடத்த, ராணுவத்தினர் தமது உயிர்களை தியாகம் செய்து, நாட்டை மீட்டெடுத்ததை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

15. ஆர்ப்பாட்டம் நடத்தும் உங்களின் கைகளில் தேசிய கொடி இருக்கிறது. நாம் பிறந்த இந்த மண்ணில் எந்தவொரு இடத்திலும் தேசிய கொடியை ஏற்றுவதற்கான சந்தர்ப்பத்தை இந்த நாட்டிற்கு ஏற்படுத்திக் கொடுத்தது நாம்தான். அனைவருக்கும் இறைவனின் ஆசி கிடைக்கட்டும்.

பிபிசி தமிழ்

சுயாதீனமாக செயற்பட தீர்மானித்த மைத்திரி சார்பு விக்கெட்டை வீழ்த்தியது ஆளும் தரப்பு – இராஜாங்க அமைச்சர் பதவியையும் கொடுத்தது

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்தது இருந்தது.

எனினும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பணடார இராஜாங்க அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி பொதுஜன பெரமுனவில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார இன்று(11) இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.

அதற்கமைய சேதனப் பசளை உற்பத்தி, மேம்பாடு மற்றும் விநியோக ஒழுங்குபடுத்தல், நெல், தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு, விதை உற்பத்திகள் மற்றும் உயர் தொழில்நுட்ப கமத்தொழில் இராஜாங்க அமைச்சராக சாந்த பண்டார பதவியேற்றுள்ளார்.

இதற்கு முன்னதாக இந்த பதவியை ஷஷீந்திர ராஜபக்ஸ வகித்திருந்தார்.

இதேவேளை, பியங்கர ஜயரத்னவின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளாததால் அவர் தொடர்ந்தும் இராஜாங்க அமைச்சர் பதவியில் நீடிப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Posted in Uncategorized

பொதுஜன முன்னணியின் கூட்டணிக்கட்சிப் பிரதிநிகளைச் சந்தித்தார் சஜித்

அரசாங்கத்திற்கு எதிராக பிரதான எதிரணியான ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரவிருக்கும் நம்பிக்கையில்லாப்பிரேரணைக்கு பாராளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படப்போவதாக அறிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கூட்டணிக்கட்சிப் பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலான பேச்சுவார்த்தை எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கும் கூட்டணிக்கட்சிகளின் பிரதிநிதிகளான மைத்திரிபால சிறிசேன, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோருக்கும் இடையில் நடைபெற்றுள்ளது.

இருப்பினும் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப்பிரேரணைக்குத் தாம் ஆதரவளிக்கப்போவதில்லை என்ற தொனியில் கூட்டணிக்கட்சிகளின் பிரதிநிதிகள் கருத்து வெளியிட்ட நிலையில், சுமுகமான முடிவொன்று எட்டப்படாமல் இப்பேச்சுவார்த்தை நிறைவிற்கு வந்துள்ளது.

எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான சந்திப்பொன்று ஞாயிற்றுக்கிழமை (10) முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பில் மைத்திரிபால சிறிசேனவுடன் பாராளுமன்றத்தில் சுயாதீனமானச் செயற்படப்போவதாக அறிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கூட்டணிக்கட்சிகளின் பிரதிநிகளான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட சிலரும் பங்கேற்றிருந்தனர்.

அதேவேளை சஜித் பிரேமதாஸவுடன் பிரதான எதிரணியான ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார கலந்துகொண்டிருந்தார்.

இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் என்னவென்று அறிந்துகொள்வதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்கவைத் தொடர்புகொண்டு வினவியபோது, அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தை நீக்கி, மீண்டும் 19 ஆவது திருத்தத்தைக் கொண்டுவரல், நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்தல், தற்போது நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியை எவ்வாறு கையாளுதல் போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவித்தார்.

இருப்பினும் அரசாங்கத்திற்கெதிராகப் பிரதான எதிரணியான ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரவிருக்கும் நம்பிக்கையில்லாப்பிரேரணைக்கு பாராளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படப்போவதாக அறிவித்த உறுப்பினர்கள் ஆதரவளிப்பார்களா? இல்லையா? என்பதை அறிந்துகொள்வதே இந்தச் சந்திப்பின் பிரதான நோக்கம் என்று கட்சியின் உள்ளகத் தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது.

ஆனால் இச்சந்திப்பில் கலந்துகொண்ட மைத்திரிபால சிறிசேன உள்ளடங்கலாகக் கூட்டணிக்கட்சிகளின் உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாப்பிரேரணைக்குத் தாம் ஆதரவளிக்கப்போவதில்லை என்ற தொனியில் கருத்து வெளியிட்ட நிலையில், சுமுகமானதொரு முடிவு எட்டப்படாமல் இந்தப் பேச்சுவார்த்தை நிறைவிற்கு வந்துள்ளது.

எது எவ்வாறிருப்பினும் ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகளும், சுயாதீனமாகச் செயற்படும் மேலும் சில சட்டத்தரணிகளும் இணைந்து நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை உள்ளடங்கலாக அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தை நீக்கி, அதற்குப் பதிலாக மாற்றுத் திருத்தமொன்றைக் கொண்டுவருவதற்கான வரைவைத் தயாரிக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

இது இவ்வாறிருக்க சுமார் இருவாரங்களுக்கு முன்னதாக (நாடளாவிய ரீதியில் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைவதற்கு முன்னர்) முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவைத் தொடர்புகொண்டு, இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பதற்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கைவிடுத்திருக்கின்றார்.

இதுகுறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக்கூட்டத்தில் ஆராயப்பட்டதுடன், இடைக்கால அரசாங்கத்தில் இணைவதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து மீண்டும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவின் ஊடாக ஆளுந்தரப்பினர் அதே கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

அதன்போதும் இடைக்கால அரசாங்கத்தில் இணைய விரும்பவில்லை என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து, இடைக்கால அரசாங்கத்தில் இணையும் பட்சத்தில் வெளிவிவகார அமைச்சு, நிதியமைச்சு, சுகாதார அமைச்சு, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு உள்ளடங்கலாக 5 அமைச்சுப்பதவிகளை ஐக்கிய மக்கள் சக்திக்கு வழங்குவதாகக்கூறிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அதற்கும் பிரதான எதிரணி உடன்படாததையடுத்து, ஹர்ஷ டி சில்வாவை நிதியமைச்சராக நியமிப்பதற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இவையனைத்திற்கும் உடன்படாத ஐக்கிய மக்கள் சக்தி, தற்போது அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப்பிரேரணையைக் கொண்டுவருவதற்குத் தீர்மானித்திருப்பதுடன் அதற்கு ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

அமெரிக்க டொலரின் விற்பனை விலை மேலும் அதிகரிப்பு

பல அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்று மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றை இன்றைய தினம் 330 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Posted in Uncategorized

காலி முகத்திடலில் கோ ஹோம் கோத்தா கிராமம் உருவானது !

கொழும்பு – காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பு கொட்டும் மழையிலும் இரவோடு இரவாக இன்று திங்கட்கிழமை 3 ஆவது நாளாகவும் மக்கள் ஆர்ப்பாட்டம் தொடர்ந்த வண்ணமுள்ளது.

இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பபட்டுள்ள மக்கள் ‘கோட்டா-கோ-கம’ (கோட்டகோகம) என்ற பெயரில் முகாம் ஒன்றை அமைத்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களால் காலி முகத்திடல் பகுதியில் கூடாரங்கள் அமைத்து உணவு சமைத்து, பரிமாறி ஆர்ப்பாட்டம் தொடர் ஆர்ப்பாட்டமாக முன்னெடுக்கப்பட்டது.

ஒரு சிறிய மாதிரிக் கிராமம் போன்று கோட்டா-கோ-கம அமைக்கப்பட்டுள்ளது. அங்கு இலவச உணவு, தண்ணீர், கழிப்பறைகள் மற்றும் சுகாதார அவசரநிலைகளுக்கான மருத்துவ முகாம் உட்பட அனைத்து அடிப்படைத் தேவைகளும் உள்ளன.

Posted in Uncategorized

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியால் அகதிகளாக மக்கள் தொடர்ந்து இடம்பெயர்

இலங்கை நாட்டில் தொடர்ச்சியாக நிலவிவரும் பொருளாதார கஷ்டத்தின் நிமித்தம் வட பகுதி மக்கள் மன்னார் பாக்குநீர் வழியாக இந்தியாவுக்கு தங்கள் குடும்பங்களுடன் அகதிகளாக இடம்பெயரும் சம்பவம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்து.

ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரைச் சேர்ந்த 19 பேர் அதிகளாகச் சென்று தஞ்சம் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக மக்கள் உணவு அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகிவருகின்ற இவ்வேளையில் யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரை சேர்ந்த 9 பேர் படகு ஒன்றில் மன்னாரில் இருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (10.04.2022) அதிகாலை தனுஷ்கோடி வந்து பின்னர் அங்கிருந்து பேருந்து மூலமாக மண்டபம் அகதிகள் முகாமுக்கு போய் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதைத் தொடர்ந்து மெரைன் போலீசார் இலங்கை தமிழர்கள் 9 பேரிடமும் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சூழலில் தற்போது இலங்கை மன்னார் பகுதியில் இருந்து புறப்பட்ட மேலும் 10 பேர் மணல் தீடையில் இறங்கியுள்ளதாகவும்

ஞாயிற்றுக்கிழமை (10.04.2022) மட்டும் ஒரே நாளில் 19 இலங்கை அகதிகள் தலைமன்னார் பாக்குநீர் கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் அகதிகளாகச் சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

.தீடையில் நின்றவர்களை தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் ஹெவர் கிராப்ட் கப்பல் மூலம் 10 பேரை மீட்டு கொண்டு வருவதற்கான நடவடிக்கையையும் மேற்கொண்டிருந்தனர்.

பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பின் அகதிகளாகச் சென்ற இவ் இலங்கை தமிழர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்படுவார்கள் என மெரைன் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்தில் இருந்து விலகிய 41 பாராளமன்ற உறுப்பினர்களை கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளார் ஜனாதிபதி ! இன்றிரவு முக்கிய பேச்சு

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்திலிருந்து விலகி, சுயாதீனமாக இயங்குவதாக அறிவித்துள்ள பாராளமன்ற உறுப்பினர்களை , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளார்.

அரசாங்கத்தில் இருந்து விலகிய, 41 எம்.பிக்களுக்குமே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்றிரவு 7 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, இடைக்கால அரசாங்கமொன்றை அமைக்குமாறே கோரியுள்ளனர்.

இதேவேளை, விமல் வீரவங்ச உள்ளிட்டவர்கள், அதனைத்து கட்சிகளையும் இணைத்துக்கொண்டு இடைக்கால அரசாங்கமொன்றை அமைக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

கொட்டும் மழையிலும் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம்!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு காரணமான ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி தென்னிலங்கை மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்று கொட்டும் மழையின் மத்தியிலும் தொடர்கிறது.

கொழும்பில் ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக ஆயிரக்கணக்கான மக்கள் கொட்டும் மழைக்கும் மத்தியிலும் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

நேற்றைய நாள் கொழும்பில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்களில் பெருமளவானவர்கள் வீடுகளுக்குச் செல்லாமல் அங்கேயே தரித்திருந்து போராடி வருவதாக கொழும்பும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போராட்டத்தில் பங்கேற்றிருப்பவர்களுக்கு பலர் உணவு, தேநீர் என்பவற்றை வழங்கி ஆதரவு தெரிவித்துவருவதாகவும் தெரியவந்துள்ளது.

இன்றைய தினமும் ஜனாதிபதி செயலகம் முற்றுகையிடப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக கொழும்பும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Posted in Uncategorized