காலி முகத்திடலில் கோ ஹோம் கோத்தா கிராமம் உருவானது !

கொழும்பு – காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பு கொட்டும் மழையிலும் இரவோடு இரவாக இன்று திங்கட்கிழமை 3 ஆவது நாளாகவும் மக்கள் ஆர்ப்பாட்டம் தொடர்ந்த வண்ணமுள்ளது.

இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பபட்டுள்ள மக்கள் ‘கோட்டா-கோ-கம’ (கோட்டகோகம) என்ற பெயரில் முகாம் ஒன்றை அமைத்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களால் காலி முகத்திடல் பகுதியில் கூடாரங்கள் அமைத்து உணவு சமைத்து, பரிமாறி ஆர்ப்பாட்டம் தொடர் ஆர்ப்பாட்டமாக முன்னெடுக்கப்பட்டது.

ஒரு சிறிய மாதிரிக் கிராமம் போன்று கோட்டா-கோ-கம அமைக்கப்பட்டுள்ளது. அங்கு இலவச உணவு, தண்ணீர், கழிப்பறைகள் மற்றும் சுகாதார அவசரநிலைகளுக்கான மருத்துவ முகாம் உட்பட அனைத்து அடிப்படைத் தேவைகளும் உள்ளன.