ஒருவர் தன்வசம் வைத்திருக்கக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் அளவு தொடர்பாக மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் இலங்கையில் வசிக்கும் ஒருவர் தன்வசம் வைத்திருக்கக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் அளவை 15,000 அமெரிக்க டொலர்களிலிருந்து 10,000 அமெரிக்க டொலர்களாகக் குறைப்பதற்குத் தீர்மானித்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

பொதுமக்களின் கைகளிலுள்ள வெளிநாட்டு நாணயத்தை முறைசார் வங்கி முறைமைக்குள் கொண்டுவரும் நோக்கில் 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச்சட்டத்தின் 8 ஆவது பிரிவின்கீழ் வழங்கப்பட்டுள்ள கட்டளைக்கு அமைவாக இத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி இலங்கையில் வசிக்கும் ஒருவர் தன்வசம் வைத்திருக்கக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் அளவு 15,000 அமெரிக்க டொலர்களிலிருந்து 10,000 அமெரிக்க டொலர்களாகக் குறைக்கப்படவுள்ளது. அதுமாத்திரமன்றி ஏனைய வெளிநாட்டு நாணயங்களும் இதற்குச் சமனான அளவில் குறைக்கப்படவுள்ளது.

அதேவேளை மேற்குறிப்பிட்ட தொiகையை விடவும் அதிகளவிலான வெளிநாட்டு நாணயத்தை கைகளில் வைத்திருப்பவர்கள் கடந்த 16 ஆம் திகதியிலிருந்து 14 வேலைநாட்களுக்குள் தம்வசமுள்ள வெளிநாட்டு நாணயத்தை தனிநபர் வெளிநாட்டு நாணயக்கணக்கில் அல்லது வர்த்தக வெளிநாட்டு நாணயக்கணக்கில் வைப்பிலிடவேண்டும். இல்லாவிட்டால் உரிமம்பெற்ற வர்த்தக வங்கி அல்லது தேசிய சேமிப்பு வங்கி போன்ற அதிகாரமளிக்கப்பட்ட வர்த்தகருக்கு விற்பனை செய்யவேண்டும்.

மேற்குறிப்பட்ட காலப்பகுதியின் பின்னர் எவரேனும் 10,000 டொலர்களுக்கு மேற்பட்ட வெளிநாட்டு நாணயத்தைத் தம்வசம் வைத்திருந்தால் வெளிநாட்டு நாணயச்சட்டத்தின் பிரகாரம் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்த மேலதிக தகவல்களை ஏதேனுமொரு உரிமம்பெற்ற வர்த்தக வங்கி மூலமோ, தேசிய சேமிப்பு வங்கி மூலமோ அறிந்துகொள்ளமுடியும். இல்லாவிட்டால் வெளிநாட்டுச் செலாவணித் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.dfe.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் ஊடாகவோ அல்லது 011-2477255/011-2398511 ஆகிய இலக்கங்களின் மூலம் வெளிநாட்டுச்செலாவணித்திணைக்களத்தைத் தொடர்புகொள்வதன் ஊடாகவோ அறிந்துகொள்ளமுடியும்.

Posted in Uncategorized

சீனத் தூதுவரை சந்தித்து மஹிந்த நன்றி தெரிவிப்பு

முன்னாள் பிரதமரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ சீனத் தூதுவரை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கும் சீனத் தூதுவருக்குமிடைியலான சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை (24) இடம்பெற்றது.

இலங்கையின் கடிமனமான இந்த கால கட்டத்தில் இலங்கைக்கு உதவுவதற்காக சீனாவுக்கு மஹிந்த ராஜபக்ஷ தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை மக்கள் மிகவும் பொறுமையாக இருப்பதாகவும், அதற்கு தனது பாராட்டுகளை தெரிவிப்பதாகவும், இலங்கையின் நிலை மிக விரைவில் வழமைக்கு திரும்பும் எனவும் சீன தூதுவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பல கொலைகள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் குறித்த தகவல்களை ஐ.நா.விடம் வெளிப்படுத்திய TMVP இன் உறுப்பினர் வெளிநாட்டில் தஞ்சம்!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த ஒருவர் பல கொலைகள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார் என்று ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல்கள், பல கொலைகள் மற்றும் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முக்கிய தகவல்களை அவர் வெளிப்படுத்தியதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி அந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்பிலும் வெளிநாட்டிலும் உள்ள சில முக்கிய இராஜதந்திர தூதரகங்களுக்கு தம்மிடம் உள்ள தகவல்களின் சுருக்கமான விபரங்களைக் கடிதம் மூலம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதன்பின்னர் அவர் உயிருக்கு பயந்து, சமீபத்தில் நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் அவர், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் அதிகாரிகளைச் சந்தித்து தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் ஏனையவர்களும் செய்த குற்றங்கள் தொடர்பான வாக்குமூலங்களை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐ.நா. அதிகாரிகள் சுமார் 5 நாட்கள் அவரிடம் இருந்து வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் நடராஜா ரவிராஜ் ஆகியோரின் கொலை மற்றும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல்போன சம்பவத்துடன் தொடர்புடைய தகவல்களை அந்த நபர் வெளிப்படுத்தியுள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்த கொலைகள் பற்றிய விவரங்களையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார் எனக் கூறப்படுகிறது.

ஐ.நா. மற்றும் இராஜதந்திர வட்டாரங்களிற்கு வழங்கப்பட்ட தகவல்கள் முன்னைய அரசாங்கத்துடன் தொடர்புடைய சிலர் மீது நேரடியாக குற்றச்சாட்டுகளை சுமத்தும் வகையில் அமைந்துள்ளன என்றும் இந்த தகவல்களை அடிப்படையாகக்கொண்டு, ஐ.நா.வும் தூதரங்களும் என்ன நடவடிக்கையை எடுக்கப்போகின்றன என்பது தெரியவில்லை என ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அறிய தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனை தொடர்புகொள்ள முயற்சித்த போதிலும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் ஐ.நா.விடம் இருந்து இந்த விடயம் குறித்து அறிய முயற்சித்தப்போதிலும் பயனளிக்கவில்லையென அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

அமெரிக்க உயர்மட்ட தூதுக்குழு நாளை (26) இலங்கை வருகை

அமெரிக்க திறைசேரி திணைக்களம் மற்றும் இராஜாங்க திணைக்களம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட தூதுக்குழு நாளை (26) நாட்டிற்கு வருகை தரவுள்ளது.

இவர்கள் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்கள் என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

ஆசியாவிற்கான பிரதி உதவி திறைசேரி செயலாளர் Robert Kaproth, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான பிரதி உதவி இராஜாங்க செயலாளரான தூதுவர் Kelly Keiderling ஆகியோரே நாட்டிற்கு வருகை தரவுள்ளனர்.

இந்த குழு, அரசியல் பிரதிநிதிகள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளை சந்திக்கவுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை மக்களின் பாதுகாப்பு மற்றும் செழிப்பிற்கான தமது தொடர்ச்சியான உறுதிப்பாட்டினை இந்த விஜயம் அடிக்கோடிட்டு காட்டுவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) தெரிவித்துள்ளார்.

இலங்கையர்கள் தமது வரலாற்றில் மிகப்பெரும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் போது, பொருளாதார வளர்ச்சிக்கு உதவி செய்வதற்காகவும் ஜனநாயக நிறுவனங்களை பலப்படுத்துவதற்காகவும் தாம் மேற்கொள்ளும் முயற்சிகள் முன்னரை விட தற்போது மிகவும் முக்கியமானதாக உள்ளதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மக்கள் தமது பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காகவும் உணவு பாதுகாப்பின்மையை எதிர்த்து போராடுவதற்காகவும் பொது சுகாதாரம் மற்றும் கல்வியை மேம்படுத்துவதற்காகவும் முயற்சி செய்யும் இவ்வேளையில், எதிர்வரும் மாதங்களில் அமெரிக்கா தொடர்ந்தும் இலங்கை மக்களுக்கு உதவிகளை வழங்கும் என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

தமிழக அரசின் நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் இலங்கை வந்தது!

இந்திய – தமிழக அரசின் உதவிப்பொதிகள் தாங்கிய இரண்டாவது கப்பல் கொழும்பை வந்தடைந்தது.
3 பில்லியன் இலங்கை ரூபாவிற்கும் அதிக பெறுமதி மிக்க மனிதாபிமானஉதவி பொருட்களுடனான கப்பல் தூத்துக்குடியிலிருந்து கொழும்பு துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ளது.
இதில் 15000 மெட்ரிக்தொன் அளவான அரிசி, பால்மா மற்றும் அத்தியாவசிய மருந்துகள் அடங்கியுள்ளன.
இப்பொருட்கள் பங்கீட்டு அடிப்படையில் நாடு முழுவதும் விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது.
Posted in Uncategorized

தேர்தல் எப்போது? : பிரதமர் ரணில் பதில்!

அரசாங்கம் உறுதியான பொருளாதார அடித்தளத்தை ஏற்படுத்தினால் மட்டுமே புதிய தேர்தலை நடத்த முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

முதலில் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதன் பின்னரே தேர்தலை நடத்த முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மிக முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டவுடன், பொருத்தமான 225 பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்வதற்கு பொதுமக்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டுமெனவும், அவர்களை தெரிவு செய்யும் பொறுப்பும் அதிகாரமும் பொது மக்களுக்கு உள்ளது எனவும் பிரதமர் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாடு முழுவதும் எதிர் கொண்டுள்ள நிதி நெருக்கடியைச் சமாளிக்க நாட்டு பிரஜை ஒவ்வொருவரும் ஒன்றுபட வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கூறியுள்ளதுடன், அரசியல்வாதிகள் மற்றும் மக்களிடம் இருந்து அர்ப்பணிப்பை எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு காணப்பட்டால் மட்டுமே உலக நாடுகள் இலங்கைக்கு உதவ முன்வரும் என பிரதமர் மேலும் கூறினார்.

அத்துடன் நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் நாம் உறுதியாக உள்ளோம் என்பதை அரசியல்வாதிகளும், ஒட்டுமொத்த மக்களும் உலகுக்கு நிரூபிக்க வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

எனவே நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்திற்கு , அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்குமாறு பிரதமர் அனைவரிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நிபந்தனையுடன் இலங்கைக்கு உதவ ஐஎம்எப் இணக்கம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்காக நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (24) இடம்பெற்றது.

இன்று பிற்பகல் கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு இணங்க இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு உதவ எதிர்பார்த்துள்ளதாக பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது.

ஒரு வார காலம் இலங்கையில் தங்கியிருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு, ஊழியர்கள் மட்ட உடன்படிக்கையை எட்டுவது தொடர்பான கொள்கை அடிப்படையிலான விடயங்கள் குறித்து நீண்ட ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்படி, பிரதமர், நிதியமைச்சு, மத்திய வங்கி உள்ளிட்ட பொருளாதார அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தியதுடன் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளனர்.

உதவிகளை திசை திரும்பி விடும் வரலாறு இலங்கைக்கு உள்ளது! IMFஜ எச்சரிக்கும் முக்கிய ராஜதந்திரி

உதவிகளை திசை திருப்பி விடும் வரலாறு இலங்கைக்கு இருப்பதாக திறந்த சமூக நிதியத்தின் (Open Society Foundations) தலைவர் Mark Malloch-Brown தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் தனது விஜயத்தின் போது இந்த பிரச்சினையை நிகழ்ச்சி நிரலில் வைப்பதன் மூலம் நாட்டை இந்த பிரச்சினை இருப்பதற்கான காரணத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அப்படி செய்யவில்லை என்றால், உதவிகள் அத்தியவசியமாக தேவைப்படும் மக்களுக்கு பதிலாக ஊழல் அரசியல்வாதிகள் பிணை எடுப்பதற்கான ஆபத்து இருப்பதாகவும் Brown எச்சரித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணம் ஊழலான ஆட்சி என பொருளாதார நிபுணர் ஒருவர் சுட்டிக்காட்டி இருந்தமைக்கு பதிலளிக்கும் வகையில் Brown இதனை கூறியுள்ளார்.

அமைப்பு ரீதியான ஊழல், நாட்டின் கடன் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளதாக பொருளாதார நிபுணர் நிஷான் டி மெல் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் மட்டத்திலான உடன்படிக்கைக்காக சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கை அதிகாரிகளுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் தீர்வு தொடர்பான நிகழ்ச்சி நிரலில் இந்த பிரச்சினை உள்ளடக்கப்படுமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சிலர் தற்போது இலங்கை வந்துள்ளனர். நெருக்கடியை தீர்க்க இலங்கை கடன் மறுசீரமைப்பை எதிர்பார்த்துள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த ராஜதந்திரியான Mark Malloch-Brown, கொபி அன்னான்( Kofi Annan) ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமாக பணியாற்றிய காலத்தில், பிரதி செயலாளர் நாயகமாக பணியாற்றினர்.

பிரித்தானிய தொழிற்கட்சியின் முன்னாள் உறுப்பினரான Mark Malloch-Brown 2007 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை ஆபிரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் விவகாரங்களுக்கான ராஜாங்க அமைச்சராக கடமையாற்றியுள்ளார்.

தம்மிக பெரேரா அமைச்சராக பதவியேற்றார்!

வர்த்தகர் தம்மிக்க பெரேரா அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முன்னிலையில் அவர், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பதவியேற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து அவரின் பாராளுமன்ற ஆசனத்திற்கு தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் ஏற்படும் அபாயம் விடுக்கப்பட்ட எச்சரிக்கை – நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார

தற்போது மக்கள் எதிர்நோக்கும் அழுத்தங்களினால் நாட்டில் உள்நாட்டு யுத்தம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமை மோசமடைந்தால், மக்கள் தங்களைக் கடத்திச் செல்லத் தூண்டப்படுவார்கள் என்றும், அதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதால் உள்நாட்டுப் போர் வெடிக்கும் என்றும் அவர் கூறினார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ரஸ்யாவிடம் இருந்து எரிபொருள் மற்றும் உரங்களை பெற்றுக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தமக்கு அறிவிக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்திற்கு பதில் இதுவரை கிடைக்கவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எரிசக்தி அமைச்சர் எரிபொருளைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களினடம் ஒப்படைக்காமல் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதால் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்ய இலங்கை அஞ்சுவதாகவும் தெரிவித்த அவர், அரசாங்கம் இவ்வாறு தொடர்ந்தும் செயற்பட்டால் மக்களின் சகிப்புத்தன்மை அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார்.

Posted in Uncategorized