மக்களின் பொழுதுபோக்கு மையமாக அமைக்கப்பட்ட ஆரியகுளத்தை வைத்து அரசியல் செய்வதை நிறுத்துங்கள் – யாழ் மாநகர முதல்வர்

மக்களின் பொழுதுபோக்கு மையமாக அமைக்கப்பட்ட ஆரியகுளத்தை வைத்து அரசியல் செய்வதை நிறுத்துங்கள் என யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்வாறானதொரு நிலைமை ஏற்படுமாக இருந்தால் அதற்கு எதிரான மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராக வேண்டும் என கேட்டுக்கொண்டார்.அத்தோடு பொதுமக்கள் ஜனநாயக ரீதியாக எதிர்ப்பினை காட்டி போராட வேண்டும் என்றும் முதல்வர் மணிவண்ணன் கேட்டுக்கொண்டார்.

ஆரியகுளத்தை புனரமைக்கும் போது அருகிலிருந்த விகாராதிபதியுடன் சேர்ந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் போராடிக்கொண்டிருந்ததை மக்கள் அறிவார்கள் எனவும் ஆரியகுளத்தை மாநகர சபையிடமிருந்து பறிக்க எடுக்கும் முயற்சி என்பது யாழ்ப்பாணத்தில் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு விடயம் என மேலும் தெரிவித்துள்ளார்.

”கொழும்பு தொடர்மாடி மக்களுக்கு சமைத்த உணவு வழங்குங்கள்” – பிரதமரிடம் மனோ கோரிக்கை

உணவு இல்லை.  எரிவாயு இல்லை. மின்சாரம் இல்லை. இவற்றால் நாட்டிலேயே மிகவும் துன்புறுவது கொழும்பு தொடர்மாடி குடியிருப்புகளில் வாழும் மக்கள்தான்.
மாநகரத்தில் நாளாந்த வருமானம் பெற்று வந்த குடும்பங்கள், ஒருவேளை உணவுமின்றியும், உணவு சமைக்க வழியுன்றியும் தவிக்கிறார்கள்.
குறிப்பாக, வடகொழும்பின் பின்தங்கிய நகர தோட்ட குடியிருப்புகளில் வாழ்ந்த மக்கள், எமது ஆட்சிகாலத்தில் சுமார் 13,000 தொடர்மாடி இல்லங்களில் குடியமர்த்தப்பட்டார்கள்.
இந்த குடும்பங்களை அடையாளம் கண்டு, இவர்களுக்கும், கொழுப்பு நகரின் பின்தங்கிய குடியிருப்புகளில் வாழும் மக்களுக்கும், பங்கீட்டு அட்டைகள் வழங்கி, அவர்களுக்கு சமைத்த உணவு வழங்குங்கள்.
இதற்காக, கொழும்பு துறைமுகத்தில் அமைந்துள்ள பாரிய சமையலறை மற்றும் கொழும்பு மாநகரசபைக்கு சொந்தமான பயன்படுத்தபடாத சமையலறைகள் ஆகியவை பயன்படுத்தலாம்.
இராணுவ சமையல் பணியாளர்களை பணியில் அமர்த்தி இயல்பு நிலைமை திரும்பும்வரை இந்த திட்டத்தை முன்னெடுங்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் கொழும்பு எம்பி மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் பிரதமருக்கு நேரடியாக கடிதம் அனுப்பியுள்ள மனோ எம்பி, ஊடகங்களிடம் மேலும் கூறியுள்ளதாவது,
நாடு முழுக்க வாழ்வாதார பிரச்சினைகள், மக்களின் கழுத்துகளை நெரிக்கின்றன. இவற்றில் மிகவும் துன்பங்களை நகரங்களில் வாழும் குடும்பங்கள் சந்திக்கிறார்கள்.
கிராமிய பகுதிகளில் இருக்கும் இயற்கை வளங்கள், மரம், செடி, கொடி, தண்ணீர் என்பன நகரங்களில் இல்லை.
ஒரு கிண்ணம் நீரும் பணம் கொடுத்தே வாங்க வேண்டியுள்ளது. அதிலும் கொழும்பு தொடர்மாடி குடியிருப்புகளில் வாழும் மக்கள் படும்பாடு சொல்லும்தரமன்று.
இந்த கொழும்பு மாநகர பின்தங்கிய மக்களை, விசேட தேவை உள்ள பிரிவினராக அறிவித்து, பங்கீட்டு குடும்ப அட்டைகளை வழங்கி அவர்களுக்கு முதற்கட்டமாக சமைத்த உணவு வழங்குங்கள்.
இதன்மூலம் இங்கு வாழும் பள்ளி பிள்ளைகள், குழந்தைகள், பெண்கள், வயோதிபர்களின் பசியை ஓரளவாவது போக்கலாம். மீண்டும் நாட்டில் இயல்பு நிலைமை திரும்பும்வரை இந்த திட்டத்தை நடைமுறை செய்யுங்கள்.
கொழும்பு மாவட்ட எம்பி என்ற முறையில், எதிரணியில் இருந்தபடி கட்சி பேதமின்றி, இது தொடர்பில் நாம் உங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க தயார்.
Posted in Uncategorized

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த பிரதமர்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு சார்பில் அத்தியாவசிய பொருட்கள், மருந்து பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

நிவாரணப் பொருட்கள் இன்று இலங்கை வந்தடைந்துள்ளன . அரசிடம் நிவாரணப் பொருட்கள் ஒப்படைக்கப்பட்ட நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியால் இந்நாட்டு மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு சார்பில் அரிசி, பால் மா உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்து பொருட்கள் உள்ளிட்டவை தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும் என தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதற்காக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இலங்கைக்கு அனுப்புவதற்காக அரிசி, பால் மா , மருந்து பொருட்கள் உள்ளிட்டவற்றை தயார் செய்யும் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன.

தமிழ்நாடு சார்பில் அரிசி, மருந்து உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் ´தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து அன்புடன்´ எனும் வாசகங்கள் அச்சிடப்பட்ட மூட்டைகளில் பொட்டலமிடப்பட்டன. பின்னர் சென்னை துறைமுகத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனைத்தும் கப்பல் மூலம் கடந்த 18ஆம் திகதியன்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நிவாரணப் பொருட்களை கொண்டு சென்ற கப்பல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.

Posted in Uncategorized

இலங்கையின் கடன்மீள்செலுத்துகை ஆற்றல் ‘டி’ நிலைக்குத் தரமிறக்கம்

வெளிநாட்டுக்கடன் மீள்செலுத்துகைகளை இடைநிறுத்துவதாகக் கடந்த ஏப்ரல் 12 ஆம் திகதி இலங்கை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டதையடுத்து இம்மாதம் 18 ஆம் திகதியுடன் சலுகைக்காலம் முடிவடையும் சர்வதேச பிணையங்களுக்கான கொடுப்பனவைச் செய்யத்தவறியமையால் ஃபிட்ச் ரேட்டிங் சர்வதேச தரப்படுத்தல் நிறுவனம் இலங்கையைக் கடன்களை மீளச்செலுத்தமுடியாத ‘டி’ நிலைக்குத் தரமிறக்கியுள்ளது.

வெளிநாட்டுக்கடன் மீள்செலுத்துகையை இடைநிறுத்துவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 12 ஆம் திகதி வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் இலங்கையை ‘சி’ நிலைக்குத் தரமிறக்கியிருந்துது.

இந்நிலையில் தற்போது நாட்டை ‘சி’ நிலையிலிருந்து ‘டி’ நிலைக்குத் தரமிறக்கியுள்ள ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் மீளச்செலுத்தப்படவேண்டிய வெளிநாட்டுப்பிணையங்களுக்கான கொடுப்பனவு மீளச்செலுத்தப்படாமையே அதற்குக் காரணம் என்றும் விளக்கமளித்துளளது.

அதேவேளை நியூயோர்க் நகரைத் தளமாகக் கொண்டியங்கும் மற்றுமொரு பிரபல கடன் தரப்படுத்தல் நிறுவனமான மூடீஸ் தரப்படுத்தல் நிறுவனம் கடந்த 19 ஆம் திகதி இலங்கையின் கடன் மீள்செலுத்துகை ஆற்றல் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த ஏப்ரல் 18 ஆம் திகதி மீளச்செலுத்துவேண்டிய சர்வதேச பிணையங்களுக்கான சலுகைக்காலம் இம்மாதம் 18 ஆம் திகதியுடன் முடிவிற்கு வந்திருக்கும் நிலையில், அதற்குரிய கொடுப்பனவைச்செய்யத் தவறியிருப்பதன் காரணமாக இலங்கை முதன்முறையாக அதன் சர்வதேச பிணையங்களைச் மீளச்செலுத்தமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது.

வெளிநாட்டுக்கடன் மீள்செலுத்துகையை இடைநிறுத்துவதாகவும், சர்வதேச நாணய நிதியத்தின் பொருத்தமான செயற்திட்டத்துடன் இணைந்ததாக வெளிநாட்டுக்கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவிருப்பதாகவும் கடந்த ஏப்ரல் 12 ஆம் திகதி இலங்கை அரசாங்கம் அறிவித்தைத்தொடர்ந்து, இலங்கை கடன்களை மீளச்செலுத்தமுடியாத நிலைக்குத் தள்ளப்படும் என்று நாம் எதிர்பார்த்தோம் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

21ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் நாளை(23) அமைச்சரவையில் சமர்ப்பிப்பு

அரசியலமைப்பின் 21ஆவது திருத்த சட்டமூலம் நாளை(23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதித்துறை, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இதில் இரட்டை பிரஜாவுரிமையை கொண்டவர்கள், பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாத வகையில் திருத்தம் மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனைத்தவிர, தற்போதுள்ள சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு மேலதிகமாக தேசிய கணக்காய்வு ஆணைக்குழு மற்றும் தேசிய கொள்வனவு ஆணைக்குழு என்பன சுயாதீன ஆணைக்குழுக்களாக திருத்தப்படும் எனவும் நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கூறியுள்ளார்.

தற்போதுள்ள ஆணைக்குழுக்களின் அதிகாரங்களை சுதந்திரமாகவும் பலப்படுத்தும் வகையிலும் 21ஆவது அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்தார்.

அரசியலமைப்பு சபையினூடாகவே மத்திய வங்கியின் ஆளுநரை நியமிப்பதற்கும் அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது ​மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

தமிழக மக்களின் மனிதாபிமான நன்கொடை பொருட்கள் இலங்கையை வந்தடைந்தன

இலங்கைக்கு இந்தியா நன்கொடையாக வழங்கிய மேலும் 2 பில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான பொருட்கள் தாங்கிய கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளன.

மனிதாபிமான உதவியாக இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட பால் மா, அரிசி மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் உட்பட 2 பில்லியன் ரூபா பெறுமதியான முதலாவது கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

குறித்த பொருட்கள் இலங்கையை இன்று வந்தடைந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இந்திய தமிழக மக்களால் வழங்கப்பட்டதும் இரண்டு பில்லியன் இலங்கை ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பாரிய மனிதாபிமான உதவிப்பொருட் தொகுதியினை உயர் ஸ்தானிகர், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிடம் இன்று கொழும்பில் கையளித்தார்.

இப்பொருட்களை கையளிக்கும் நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் திரு.செந்தில் தொண்டமான், பிரதமரின் பணிக்குழாம் பிரதானி திரு.சாகல ரத்நாயக்க மற்றும் உணவுத்துறை ஆணையாளர் திருமதி ஜே.கிருஸ்ணமூர்த்தி உட்பட சிரேஸ்ட உத்தியோகத்தர்களும் ஏனைய பலரும் கலந்துகொண்டனர்.

9000 மெட்ரிக்தொன் அரிசி, 50 மெட்ரிக்தொன் பால்மா மற்றும் 25 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான மருந்து வகைகளும் ஏனைய மருத்துவப் பொருட்களும் இத்தொகுதியில் உள்ளடங்கியுள்ளன.

கடந்த மே 18ஆம் திகதி தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இந்த உதவிப்பொருட்களை சென்னை துறைமுகத்திலிருந்து கொடியசைத்து வழியனுப்பிவைத்தார். தமிழக அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் 16 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 40000 மெட்ரிக் தொன் அரிசி, 500 மெட்ரிக் தொன் பால்மா மற்றும் மருந்துப் பொருட்கள் அடங்கிய பாரிய உதவித் திட்டத்தின் கீழ் இது முதற்தொகுதியாக அனுப்பி வைக்கப்படுகின்றது.

தற்போது கையளிக்கப்பட்டுள்ள இத்தொகுதி உதவிப்பொருட்கள் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் மேல் மாகாணங்கள் உள்ளடங்கிய நாடளாவிய ரீதியிலுள்ள நலிவான மற்றும் தேவைகளை எதிர்கொண்டிருக்கும் பிரிவினருக்கு இலங்கை அரசாங்கத்தால் எதிர்வரும் நாட்களில் விநியோகிக்கப்படும்.

அத்துடன் இன்னும்பல மனிதாபிமான உதவித்திட்டங்களும் ஏனைய உதவிகளும் இந்தியாவிடமிருந்து வழங்கப்படவுள்ளன. இந்திய மக்களாலும் அரசாங்கத்தாலும் முன்னெடுக்கப்பட்டும் இவ்வாறான பல்பரிமாண திட்டங்கள், இலங்கைக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தினை சுட்டிக்காட்டுவதுடன் இலங்கை மக்களின் நலன்கள் மீது அவர்கள் கொண்டிருக்கும் அக்கறையினையும் பிரதிபலிக்கின்றன.

3.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருளாதார உதவிகள், தடுப்பூசிவிநியோகம், சோதனை அலகுகள், கொவிட்-19 பெருநொய்க்கு எதிரான போராட்டத்துக்காக கிட்டத்தட்ட 1000 மெட்ரிக்தொன் திரவநிலை ஒட்சிசன் வழங்கியமை, கடல் அனர்த்தங்களை தணிப்பதற்காக இந்திய கடற்படை மற்றும் கரையோரக் காவல் படையால் வழங்கப்படும் உடனடி பதிலளிப்பு நடவடிக்கைக்கள் முதலான ஆதரவுகள் இலங்கைக்கு வழங்கப்படுகின்றன.

Posted in Uncategorized

ஓகஸ்ட் முதல் இலங்கையில் உணவு நெருக்கடி

தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காணப்பதற்காக சர்வதேச சமூகத்தினர் இலங்கையுடன் கை கோர்த்துள்ளார்கள் என்றும். அவர்களிடமிருந்து ஆரோக்கியமான பதில் விரைவில் கிடைக்கும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

வெளிநாட்டு செய்தி நிறுவனமான ஸ்கைநியூஸுக்கு வழங்கிய பேட்டியொன்றில் இவ்வாறு தெரிவித்துள்ள பிரதமர் நெருக்கடி நிலைமைக்கு முன்னைய நிர்வாகமே காரணம் என்றும் கூறினார்.

நாட்டில் உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம் காணப்படுவதாக குறிப்பிட்ட அவர், விவசாயத்திற்கு தேவையான உரம் இல்லாமையினால் எதிர்வரும் மூன்று மாதங்களில் உணவு நெருக்கடிக்கு முகங்கொடுக்க நேரிடும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காணப்பதற்காக சர்வதேச சமூகத்தினர் இலங்கையுடன் கை கோர்த்துள்ளார்கள். அவர்களிடமிருந்து ஆரோக்கியமான பதில் விரைவில் கிடைக்கும் என்று ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் ஒருபோதும் இல்லாதவகையில் நாடு வங்குரோத்து நிலையை எதிர்கொண்டுள்ளது.எமக்கு தற்போது டொலரும் இல்லை. ரூபாவும் இல்லை.

தற்போது நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்வது குறித்து ஸ்கைநியூஸ் ஊடகவியலாளர் இதன்போது சுட்டிக்காட்டிய போது, இளைஞ்கள் தமது எதிர்காலம் பறிக்கப்பட்டதாக நினைக்கின்றனர்.இதேபோன்று வயதானவர்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்னர். நடுத்தர வகுப்பினர் தமது வாழ்க்கை நிலை சீர்குழைந்திருப்பதாக காணுகின்றனர். விவசாயத்துக்கான போதிய உரம் இல்லாமையினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தாம் எதிர்கொண்டுள்ள சுமைகளை தாங்கிக்கொள்ள முடியாமையினாலேயே ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன என்றும் பிரதமர் கூறினார்.

உக்ரேன் போர் இலங்கை மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா? இது குறுகிய காலத்திற்குள் மோசமான நிலையை அடையுமா? என்ற கேள்விக்கு பிரதமர் பதிலளிக்கையில், உண்மையிலேயே நாம் ஸ்திரமான நிலையில் இல்லை விவசாயத்துக்கான போதிய உரம் இல்லை இதனால் எதிர்வரும் பருவகாலத்தில் முழுமையான விளைச்சல் கிடைக்காமல் போகும். இதன் காரணமாக ஓகஸ்ட் முதல் இலங்கையில் உணவு நெருக்கடிக்கான சாத்தியம் காணப்படுகிறது. எதிர்வரும் மார்ச் மாதம் வரையில் நாம் எவ்வாறு வாழ்க்கையை கொண்டுசெல்வது என்பதில் கவனம் செலுத் வேண்டும் என்றும் தெரிவித்தார்..

தற்போதைய நிலையில் உதவி வழங்க முன்வரும் நாடுகளுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன? என்ற கேள்விக்கு பிரதமர் ரணில்விக்கிமசிங்க பதில் அளிக்கையில் ” நாம் பெற்ற கடனை திருப்பி செலுத்துவதற்கு பணமில்லை. இது குறித்து வெட்கப்படவேண்டும்.இதுதான் யதார்த்தம் நாம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். இதற்கு சில காலம் செல்லும்” என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, உணவு நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான குழுவொன்றை நியமிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோவுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

Posted in Uncategorized

மே18 ஐ தமிழினப் படுகொலை நாளாக கனேடிய பாராளுமன்றம் பிரகடனம்- இலங்கை கண்டனம்

கனேடிய நாடாளுமன்றில் மே 18ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அங்கீகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இலங்கை அரசாங்கம், இலங்கைக்கான பதில் கனேடிய துாதுவரை நேரில் அழைத்து கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

கனேடிய அரசாங்கத்தின் பிரேரணையில் உள்ள இனப்படுகொலை என்ற விடயமானது போலியானது எனவும் அதனை நிராகரிப்பதாகவும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு கனேடிய நாடாளுமன்றில் மே 18ஆம் திகதி தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அங்கீகரிக்கப்பட்டது.

கனேடிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது நல்லிணக்க முயற்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இலங்கைக்கான பதில் கனேடிய உயர்ஸ்தானிகர் Amanda Strohan அமண்டா ஸ்ரோகனை, வெளிவிவகார அமைச்சரிற்கு இன்று அழைத்து ஜி.எல். பீரிஸ் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

குறித்த பிரேரணையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் பொய்யானது என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளதோடு கனேடிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையினால் இலங்கை தொடர்பில் தவறான எதிர்க்கருத்துக்கள் வெளியிடப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள தவறுகளை திருத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இனப்படுகொலை தீர்மானத்தை கனடா பாராளுமன்றம் நேற்று ஏகமனதாக ஏற்று அங்கீகரித்தது. அத்துடன், ஒவ்வொரு ஆண்டும் மே-18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளாக கனடா பாராளுமன்றம் ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

15 இலட்ச ரூபாய்க்காக தனியார் உதவியை எதிர்பார்க்கும் இலங்கை அரசு

இலங்கையிலிருந்து தடகள வீரர்களை, கொலம்பியாவில் நடக்க உள்ள, உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த வீரர்களை கொலம்பியா அனுப்புவதற்கு ஆகும் விமான செலவான 15 இலட்சம் ரூபாய்க்காக தனியாரின் உதவியை இலங்கை அரசு எதிர்பார்க்கிறது என்று `தி ஐலேண்ட் ஆன்லைன்` இணையத்தில் செய்தி வெளியியாகியுள்ளது.

ஓகஸ்ட் 1ம் திகதி முதல் 6ஆம் திகதி வரை, கொலம்பியாவின் காலி நகரில் உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கு தகுதியான வீர்ரகளை அனுப்ப வேண்டும்.

அதேபோல, இலங்கையில் ஏற்கனவே மே 9ம் திகதி நடக்கவிருந்த தேசிய அளவிலான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளும் ஊரடங்கு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த போட்டிகளும் ஜூன் 7முதல் 10 வரையிலான தேதிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டிகளை நடத்தி, இதன்மூலமும் வீரர்களை தேர்வு செய்து சர்வதேச போட்டிக்களங்களுக்கு அனுப்ப வாய்ப்புண்டு.

ஆனால், தேர்வு செய்யப்பட்ட வீரர்களை அனுப்புவதற்கான செலவைக் கையாளுவதில் பொருளாதாரத்தில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பேசும்போது “முதல் இரண்டு இடத்தில் இருக்கும் சிறந்த வீர்ரகள் இருவரை மட்டும், தங்கள் சொந்தப் பணத்தில் செல்ல அனுமதிப்ப என்பது, பணம் ஏற்பாடு செய்யமுடியாத அதேசமயம் தகுதியுடையவர்கள் இருக்கும்போது முறையன்று.

எனவேதான் இதில் தனியாரின் உதவியை நாடுகிறோம் என்கிறார் இலங்கை தடகளப்பிரிவின் மூத்த அதிகாரிகளில் ஒருவர் என்று ஐலேண்ட் ஆன்லைன் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான திட்டம் – சர்வதேச நிதி நிறுவனங்கள் கூட்டாக வெளியீடு

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான கூட்டுத்திட்டமொன்றை உலகவங்கி ஆசிய அபிவிருத்தி வங்கி ஆசிய முதலீட்டு உட்கட்டமைப்பு வங்கி ஆகியன கூட்டாக வெளியிட்டுள்ளன.

இந்த கூட்டு திட்டத்தில் மருந்துதேவைகளை நிறைவேற்றுவதற்கான திட்டம்,நிதி உதவி எரிவாயு மற்றும் உரதட்டுப்பாட்டிற்கு தீர்வை காண்பதற்கான திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.