தந்தை நாட்டைவிட்டு ஓட மாட்டார் – மகன் நாமல் அதிரடி அறிவிப்பு

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டை விட்டு ஓடவில்லை என அவரது மகன் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வௌிநாட்டு ஊடகம் ஒன்றிற்கு கருத்து வௌியிட்ட அவர், ““எனது தந்தை பாதுகாப்பாக இருக்கிறார், அவர் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார், அவர் குடும்பத்துடன் தொடர்பு கொள்கிறார், நாட்டை விட்டு செல்லமாட்டார்” என்று கூறியுள்ளார்.

Posted in Uncategorized

ஊரடங்கு உத்தரவு வியாழன் வரை நீட்டிப்பு

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் வியாழன் 12 ஆம் திகதி காலை 7.00 மணி வரை தொடரும்.
முன்னதாக புதன்கிழமை காலை 7.00 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது

திருகோணமலையில் பதற்றம்! மஹிந்த குடும்பத்துடன் அங்குதான் உள்ளாராம்.!

திருகோணமலையில் உள்ள கடற்படை முகாம் பொது மக்களால் முற்றுகையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை பாதுகாப்புத் தரப்பினரால் அலரி மாளிகை அருகில் இருந்து போராட்டக்காரர்களை அகற்றிய பின்பு மஹிந்த அலரிமாளிகையில் இருந்து தனது விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்துக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

அதன் பிறகு இன்று அதிகாலை இருள் விலக முன்னரே விமானப்படை ஹெலிகொப்டர் ஒன்றில் மஹிந்த, ஷிரந்தி, மஹிந்தவின் இரண்டாம் புதல்வன் யோஷித்த அவனது மனைவி மற்றும் இன்னும் சிலரும் திருகோணமலைக்குத் தப்பிச் சென்றுள்ளனர்.

திருகோணமலை கடற்படை முகாமில் இருக்கும் கடற்படைத் தளபதிக்கான விருந்தினர் மாளிகையில் தற்போது அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச நாடு ஒன்றின் ஒத்துழைப்புடன் இன்னும் ஒரு நாட்டில் தஞ்சம் அடைவதற்கு ஏற்பாடுகள் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Posted in Uncategorized

மஹிந்தவின் மெதமுலன இல்லமும் தீக்கிரை

மஹிந்த ராஜபக்ஷவின் பரம்பரை இல்லமான வீரக்கெட்டிய, மெதமுலன இல்லமும் தீக்கிரையாகியுள்ளது.

ஆர்ப்பாட்டகாரர்கள் சிலரினால் இவ்வாறு தீ வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, வீரகெட்டியவில் அமைந்துள்ள டி.எ.ராஜபக்ஷ உருவச்சிலைக்கும் மக்கள் தீ வைத்துள்ளனர்.

பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரின் வீடுகள், வாகனங்கள் தீக்கிரை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரின் வாகனங்கள் மற்றும் வீடுகள் போராட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்டுள்ளன.

நாட்டில் இன்று காலை முதல் காலிமுகத்திடல் மற்றும் அலரிமாலிகை உள்ளிட்ட பல பகுதிகளில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன.

அந்த வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள், வாகனங்கள் மற்றும் அலுவலகங்கள் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்டும், தீ வைக்கப்பட்டும் வருகின்றது.

அந்த வகையில் முன்னாள் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோவின் குருநாகலிலுள்ள கட்சி அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் நகர மேயர் துஷார சஞ்சீவவின் வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அத்தோடு முன்னாள் அமைச்சர் சனத் நிஷாந்தவின் கட்டிடத்திற்கும் தீ வைக்கப்பட்டள்ளது.

மஹிந்தவின் தங்காலை இல்லம் வீரகெட்டிய இல்லம் குருணாகலையிலுள்ள இல்லம் என்பன உடைத்து எரிக்கப்பட்டது.

அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின், மாத்தளையில் உள்ள வீடுமீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அருந்திக்க பெர்னாண்டோ MP ன் இல்லம் மீதான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியார் தேவலயத்துக்கு முன்பாக உள்ள நீர்கொழும்பு மேயர் தயான் லான்ஸாவின் வீடு ஆர்பாட்ட காரர்களால் முற்றாக எரித்து சாம்பலாக்கபட்டது.

ரமேஷ் பதிரணவின் வீடு தீக்கரையாக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் வீடு தீக்கரையாக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோவின் கல்கிஸ்ஸயில் அமைந்துள்ள வீடும் உடைக்கப்பட்டிருக்கிறது.

அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோவின் மனைவியின் குருணாகல் வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

பண்டாரவல மேயர் ஜானகவின் வீடும் பொதுமக்களினால் தாக்ப்பட்டது.

நீர்கொழும்பு மீரிகம வீதியில் உள்ள Avenra Garden Hotel ஆர்பாட்டகாரர்களால் முற்றாக எரிக்கப்பட்டு அங்குள்ள உலகின் விலையுயர்ந்த சொகுசு வாகனங்களும் தீயிட்டு எரிக்கப்பட்டிருக்கிறது.

தங்கொட்டுவ அருந்திக்க பிரனான்துவின் வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வீடு எரிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பந்துல குணவர்தனவின் வீடு எரிக்கப்பட்டுள்ளது.

கனக ஹேரத் MP ன் வீடு எரிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் காமினி லொக்குகேவின் வீடு எரிக்கப்பட்டுள்ளது.

பண்டார MP ன் வீடு எரிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு MP நிமல் லான்சாவின் வீடு எரிக்கப்பட்டுள்ளது.

சனத் நிஷாந்த MP ன் வீடு எரிக்கப்பட்டுள்ளது.

குருணாகல் மேயரின் வீடு எரிக்கப்பட்டுள்ளது.

மொரட்டுவ மேயர் சமன் லாலின் வீடு எரிக்கப்பட்டுள்ளது.

அருந்திக பெர்ணாண்டோ MP ன் வீடு எரிக்கப்பட்டுள்ளது.

அலரிமாளிகையின் கதவுகள் போராட்டக்காரர்களால் திறக்கப்பட்டு சிசிடிவி கமெராக்களும் தாக்கப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை மெதமுலனவிலுள்ள ராஜபக்சக்களின் பூர்வீக இல்லம் தீயிட்டுக்கொளுத்தப்பட்டது.

முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் காத்தான்குடியிலுள்ள வீட்டின் மீது இன்று திங்கட்கிழமை மாலை கல் வீச்சு நடத்ப்பட்டு வீட்டின் முன் பகுதியிலுள்ள ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமாக்கப்பட்டுள்ளது.

மஹிபால ஹேரத் MPயின் கேகாலை வீடு தீக்கரையாக்கப்பட்டது.

அலிசப்ரி ரஹீம் அவர்களின் வீடு தீயிட்டு எரிக்கப்பட்டது.

திஸ்ஸ குட்டியாராச்சி MP ன் வீடு உடைக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவின் தந்தையாரது நினைவுத் தூபியும் உடைக்கப்பட்டது.

இதுவரை கிடைத்துள்ள தகவல்கள்…

Posted in Uncategorized

வன்முறை தாக்குதலுக்கு கண்டனம் வௌியிட்ட அமெரிக்க தூதுவர்

அமைதியான போராட்டங்கள் மீது இன்று(09) மேற்கொள்ளப்பட்ட வன்முறை தாக்குதல்களுக்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Julie J. Chung கண்டனம் வௌியிட்டுள்ளார்.

இந்த தாக்குதல்கள் தொடர்பில் முழுமையான விசாரணையை மேற்கொள்ளுமாறு அவர் ட்விட்டர் பதிவினூடாக அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

Posted in Uncategorized

நிட்டம்புவ ஆர்ப்பாட்டத்தில் சிக்கி அமரகீர்த்தி அத்துகோரள உயிரிழப்பு

நிட்டம்புவயில் இன்று(09) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள உயிரிழந்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவுக்கு சொந்தமானதாக கூறப்படும் வாகனம் ஒன்று இன்று மாலை நிட்டம்புவ பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினரின் வாகனத்தில் வந்த குழுவொன்று, அப்பகுதியில் கூடியிருந்த அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது துப்பாக்கிச் சூட்டில் கிட்டத்தட்ட மூன்று பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், சம்பவத்தை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

“குறித்த பாராளுமன்ற உறுப்பினர். அந்த இடத்தை விட்டு ஓடி அருகில் உள்ள கட்டிடத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.” என்று ஒரு பொலிஸ் அதிகாரி தெரிவித்தார். இதையடுத்து ஆயிரக்கணக்கானோர் கட்டிடத்தை சூழ்ந்த, பின்னர் அவர் தனது துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி, பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதால் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இன்று கொழும்பில் அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடலுக்கு அருகில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பிரதமரின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதையடுத்து நாடளாவிய ரீதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார் மஹிந்த வர்த்தமானி அறிவித்தல்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

நாட்டின் தோல்வியடைந்த பொருளாதாரம் காரணமாக பிரதமர் பதவி விலக வேண்டும் என்று பொதுமக்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு மத்தியில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் நெருக்கடிகள் காரணமாக அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷ அதிபர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பிரதமரை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரியதாக முன்னைய செய்திகள் கூறப்பட்ட போதிலும், அந்த செய்திகளை மறுத்த பிரதமர், அவ்வாறான கோரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும், தான் பதவி விலகப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மற்றும் அதனுடன் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையில் பல கலந்துரையாடல்களை அடுத்து, பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அலரிமாளிகையில் பிரதமர் தலைமையில் இன்று காலை இடம்பெற்ற பொதுஜன பெரமுன ஆதரவாளர்களுடனான கூட்டத்தையடுத்து கோட்டா கோ கம பகுதியில் கலவரம் மூண்டது.

இந்த கலவரத்தில் 78 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில் தற்போது தனது பிரதமர் பதவியில் இருந்த மஹிந்த ராஜபக்ஷ இராஜிநாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடு பூராகவும் ஊரடங்கு உத்தரவு அமுல்…!

உடன் அமுலாகும் வகையில் நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இன்று மாலை 7 மணி முதல் நாளை (10) காலை 07 மணி வரையில் இவ்வாறு ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

அதிகாரமளிக்கக்கூடிய அதிகாரியினால் வழங்கப்படும் எழுத்து மூல அனுமதி பத்திரத்தை தவிர பொது வீதிகளில், ரயில் வீதிகளில், பூங்காக்களில், பொது மைதானங்களில் மற்றும் பொது இடத்தில் அல்லது கடற்கரையில் தங்கியிருக்க அனுமதியில்லை என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

Posted in Uncategorized

அலரிமாளிகைக்கு முன்பாக பதற்றமான சூழல்: ஊடகவியலாளர்கள் மீது தாக்குதுல்

அலரி மாளிகை முன்பு தற்போது கடும் பதற்ற நிலை நிலவி வருகிறது.

அரசாங்க ஆதரவாளர்களினால், அரசாங்கத்தை பதவி விலக கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் கூடாரங்கள் உடைத்து எறியப்படுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவ இடங்களில் செய்தி சேகரிக்கும் மற்றும் காணொளி பதிவு செய்யும் ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதாக தெரியவருகிறது.

அப்பகுதியில் உடைக்கப்பட்ட கூடாரங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.facebook.com/NewsfirstSL/videos/437790031684038