ஜெய்சங்கர் சொல்லாமல், சொன்னது? – Elanadu Editorial

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய் சங்கர், கூட்டமைப்புடனான சந்திப்பின்போது, வழக்கத்திற்கு மாறாக ஒரு விடயத்தை சுட்டிக்காட்டியிருக்கின்றார். அதாவது. அரசாங்கத்தின் அரசியல் யாப்பு முயற்சிகளுக்குள் சிக்கிவிடாதீர்கள். அண்மையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடிய விடயங்களை சம்பந்தன் பகிர்ந்து கொண்டபோதே, அவர் மேற்கண்ட வாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

ரணில் – மைத்திரி ஆட்சிக் காலத்தில், புதியதோர் அரசியல் யாப்பு தொடர்பில் சம்பந்தன் தரப்பு, காலத்தை விரயம் செய்திருந்தது. சம்பந் தன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, ஒருமுறை கூட சம்பந் தன் இந்தியாவுக்கு செல்லவில்லை. புதிய அரசியல் யாப்பு முயற்சி வெற்றியளிக்காது – காலத்தை விரயம் செய்யாமல், அரசியலமைப்பில் இருக்கின்ற 13ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள குறைபாடுகளை நிவர்த்திசெய்து, ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கும் வகையிலான முயற்சிகளை செய்யுமாறு பலரும் கோரியிருந்தனர்.
பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. குறிப்பாக டி. பி. எல். எவ் தலைவர் சித்தார்த்தன், புதிய அரசியல் யாப்பில் தனக்கு நம்பிக் கையில்லை என்று தொடர்ச்சியாக கூறிக்கொண்டிருந்தார். ஆனால், சம்பந்தனும் சுமந்திரனுமே புதிய அரசியல் யாப்பு தொடர்பில் மக்களுக்கு நம்பிக்கையூட்டிக் கொண்டிருந்தனர்.

ரணில் – மைத்திரி கால சம்பந்தனின் அணுகுமுறை முற்றிலும் கொழும்பு மட்டும் போதுமானது என்னும் அடிப்படையில்தான் இருந் தது. இந்தியாவின் உதவி தேவையில்லை என்னும் அடிப்படையிலேயே சம்பந்தனும் சுமந்திரனும் செயல்பட்டுவந்தனர். ஆனால், அனைத்தும் தோல்விடைந்த நிலையிலேயே மீளவும் இந்தியாவின் தயவை நாடினர். இந்த அனுபத்திலிருந்தே ஜெய்சங்கர் இவ்வாறானதொரு கருத்தைத் தெரிவித்திருக்கின்றார்.

ஏற்கனவே, ரணில் – மைத்திரி கால அரசியலமைப்பு திட்டத்துக்குள் சிக்குப்பட்டு காலத்தை விரயம் செய்ததுபோல் மீளவும் செய்யாதீர்கள் – என்பதுதான் அவர் சொல்லா மல், சொன்ன செய்தி.

இலங்கையின் அரசியலமைப்பு பிரச்னையை வெறுமனே சட்டக் கண்கொண்டு நோக்கினால் அதிக விடயங்கள் விளங்காமலேயே போய்விடும். இலங்கையின் அரசியலமைப்பு விடயம் வெறும் சட்ட ரீதியில் தீர்க்கக் கூடிய பிரச்னையென்றால் பிரச்னைகள் எப்போதோ தீர்ந்திருக்கும். எனவே, விடயங்களை ஆழமாக விளங்கிக் கொண்டு, கூட்டமைப்பு, சூழ்நிலைமைகளுக்கு ஏற்ப விடயங்களைக் கையாள வேண்டும். முன்னைய அரசாங்கத்தில் எதிர்பார்த்த விடயங்கள் எவையும் நடைபெறாமல்போன பின்னர், இந்தியாவிடம் சென்றது போன்றல்லாமல், இந்தியா என்ன கூறுகின்றது – என்பதைத் துல்லிய மாகப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப செயல்படுவது தொடர்பிலேயே கூட்டமைப்பினர் சிந்திக்க வேண்டும். ஜெய்சங்கர் அவ்வாறு கூறிய தற்கு பின்னால் பிறிதொரு விடயமும் உண்டு. அதாவது, அரசாங்கம்
தமிழர் பிரச்னையை ஓர் உள்நாட்டு பிரச்னையென்றவாறு வாதிட முயற்சிக்கின்றது.

தமிழர் பிரச்னையில் இந்தியாவின் தலையீட்டை நுட்பமாக தவிர்க்க விரும்புகின்றது. அரசாங்கத்தின் நகர்வுகளுக்குள் சிக்கிவிடாதீர்கள் – சிக்கிக் கொண்டால், எங்களால் எதுவும் செய்ய முடியாமல் போய்விடும். ஜெய்சங்கர் சொல்லாமல் சொன்ன இன் னொரு செய்தி இது.

இ.தொ.கா சந்தா பெறாத தொழிற்சங்கமாக மாற்றியமைக்கப்படும்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சந்தா பெறாத தொழிற்சங்கமாக எதிர்காலத்தில் மாற்றியமைக்கப்படும் என தெரிவித்துள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவரும்,  பிரதம அமைச்சரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான், மலையக மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்தும் குரல் கொடுக்கும் என்றார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபைக் கூட்டம் நேன்று முற்பகல் கொட்டகலையிலுள்ள சி.எல்.எவ் வளாகத்தில் நடைபெற்றது.

இதன் பின் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

” நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், எமது மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலைமையில் இருந்து அவர்களை மீட்டெடுப்பது தொடர்பில் தேசிய சபையில் ஆராயப்பட்டது. எமது மக்களின் உரிமைகளுக்காகவும், பொருளாதார எழுச்சிக்காகவும் நாம் தொடர்ந்து தீவிரமாக செயற்படுவோம்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சந்தா பெறாத சங்கமாக மாறவேண்டும் என்பதே மறைந்த தலைவரின் இலட்சியமும்கூட. அதனை நாம் நிறைவேற்றுவோம். தற்போது சந்தா பெற்றாலும் கணக்கு விவரம் உரியவகையில் காண்பிக்கப்படுகின்றது.

அரசில் இருந்து வெளியேறுவது சம்பந்தமாக இன்று கலந்துரையாடப்படவில்லை. ” – என்றார்.

Posted in Uncategorized

ராஜீவ் கொலை வழக்கு : எழுவர் விடுதலை குறித்து விளக்கமளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழுபேரின் விடுதலைக் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

குறித்த வழக்கு தொடர்பில் சிறையில் இருக்கும் நளினி, ஆளுநரின் முடிவுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

குறித்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டுள்ளது. இதன்போது இது குறித்து ஆளுநர் எவ்வித முடிவும் எடுக்காத நிலையில், நளினியை விடுதலை செய்வது குறித்து எவ்வாறு உத்தரவுப்பிறப்பிக்க முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதேநேரம் இந்த விவகாரம் தொடர்பில் அமைச்சரவையின் தீர்மானம் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Posted in Uncategorized

ஜனாதிபதி கோட்டாவின் பேஸ்புக் பதிவுகளுக்கு கருத்து தெரிவிக்க தடை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பேஸ்புக் பதிவுகளுக்கு கருத்து தெரிவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு மில்லியனுக்கும் அதிக பின்பற்றுனர்களைக் கொண்ட இந்த பேஸ்புக் பக்கத்தில், கருத்து தெரிவிப்பதற்கு நேற்று (புதன்கிழமை) மாலை முதலே தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டு மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பேஸ்புக் பதிவுகளில் அதிகளவானவர்கள் தங்களது ஆதங்கங்களை வெளிப்படுத்தி வந்தனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

நாடு முழுமையாக மூடப்படும் அபாயம்

சில நாட்களேனும் நாட்டை முழுமையாக மூடிவிடுமாறு அரசாங்கத்திடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

எரிபொருள் தட்டுப்பாட்டால், மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்ப முடியாத நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. மின் வெட்டால், வர்த்தக நடவடிக்கைகளை முறையாக முன்னெடுக்க முடியாத அச்சம் ஏற்பட்டுள்ளது. பல தொழில்துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆகையால் சில நாட்களேனும் நாட்டை முழுமையாக மூடிவிடுவதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்திடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

Posted in Uncategorized

நாம் வாய் திறந்தால் நாடு பற்றியெரியும் – விமல்

இலங்கையில் இந்தியாவின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கே, இலங்கைக் கேட்கும்போதெல்லாம் இந்தியா கடன் வழங்குவதாக தெரிவித்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, லிற்றோ நிறுவனத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு முயற்சிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தொடர்பில் எமக்கு தெரிந்த விடயங்களை நாம் அம்பலப்படுத்தினால் நாடு பற்றியெறியுமென எனவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், இந்தியாவுக்கு சென்றுவிட்டு நாடு திரும்பிய நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் ஊடகவியலாளர்கள் எதிர்காலத்தில் என்ன நடக்குமென வினவினார்கள். இதற்கு சிரித்தப்படியே அதிகமாக சிந்திக்க வேண்டாமென பசில் கூறினார். அதாவது அதிகமாக நாட்டு மக்கள் சிந்திக்க ஆரம்பித்தால் பசிலை இங்கிருக்கவிடமாட்டார்கள் என்பதாலேயே  பசில் அவ்வாறு கூறினார் என்றார்.

பசிலின் பதவியைப் பறிப்பதால் மாத்திரம் நாட்டை நெருக்கடி நிலைமைகளில் இருந்து மீட்க முடியாது. பசில் என்கிற பல்லை பிடுங்குவதால் மாத்திரம் வாய் சுத்தமாகாது எனவும் தெரிவித்தார்.

இதேவேளை பசில் ராஜபக்ஷவின் இரு மகளில் ஒருவர் இந்தியா பிரஜையையும், மற்றொருவர் பிரித்தானிய பிரஜையையும் திருமணம் முடித்துள்ளனர். இந்தியாவில்  திருமணம் முடித்துள்ள பசிலின் மகளின் மாமனார் றோ உளவு அமைப்பின் பிரதானியின் மகன் எனவும் தெரிவித்தார்.

இலங்கைக் கேட்கும்போதெல்லாம் கடன்களை இலங்கைக்கு வாரி வழங்குவதற்கு இந்தியாவுக்குப் பைத்தியமா? இலங்கையில் நிறைவேற்றிக்கொள்ள வேண்டிய தேவைகள் இந்தியாவக்கு இருக்காதா? லிற்றோ நிறுவனத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக இருக்கிறது எனவும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

அடுத்தவாரம் முதல் ஒரு நாளைக்கு 10 மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டு

மின்சார நெருக்கடி மிகவும் உச்சகட்டத்தை எட்டியுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.12 மணி நேர மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்த அனுமதி கோரப்பட்டது. எனினும், இந்த நிலைமை ஓரளவுக்கு குறைப்பதற்காக, கையிருப்புக்கு அவசியமான குறிப்பிடத்தக்க அளவான எரிபொருளைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது. தற்போது ஏற்படும் நிலைமை அவ்வளவு சிறந்ததாக இல்லை.

இலங்கை முழுவதும் காலை 8 மணி முதல் இரவு 12 மணி வரையான காலப்பகுதிக்குள் 10 மணிநேர மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விருப்பமின்றியேனும் மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மின்னுற்பத்தி நிலையங்களில், 800 மெகாவாட் மின்சார உற்பத்திக்கான எரிபொருள் இன்மையால், மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய இயலுமை இல்லை. நிதி பிரச்சினை காரணமாகவே மின்சார பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை அடுத்த வாரத்தில் இருந்து இலங்கையில் ஒரு நாளைக்கு 10 மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டு ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபையின் உள்ளக தகவல்களை மேற்கோள்காட் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.மின் உற்பத்தி நிலையங்கள் தேவையான எரிபொருளைப் பெறாவிட்டால், ஒரு நாளைக்கு 10 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகின்றது.

இந்தநிலையில் ஏனைய அனல்மின் நிலையங்கள் மூடப்படுவதைத் தடுக்க, எரிபொருளை அவசரமாக விநியோகிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.எரிசக்தி அமைச்சு தேவையான அளவு எரிபொருளை வழங்கத் தவறினால், அடுத்த வாரம் முதல் 10 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நீடிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Posted in Uncategorized

பாராளுமன்றத்தை எப்படி கலைக்கலாம்?: கம்மன்பில விளக்கம்!

பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அதற்காக நாட்டின் அரசியலமைப்பில் காணப்படும் சந்தர்ப்பங்களை செயற்படுத்துவது தொடர்பில் அவர் விளக்கியுள்ளார்.

பாராளுமன்றத்தை கலைப்பதற்கு இரண்டு அல்லது இரண்டரை வருடங்கள் அவசியம் என சபாநாயகருக்கு கூறப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் விருப்பத்திற்கு அமைய பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டுமானால் மாத்திரமே இரண்டரை வருடங்கள் தேவைப்படும்.

எனினும், பாராளுமன்றத்தின் தேவைக்கு அமைய, பாராளுமன்றத்தை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் கலைக்க முடியும். அதற்கு அரசியலமைப்பின் 71 ஆவது சரத்தின் அ பிரிவு வழி சமைத்துள்ளது.

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பாராளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதியால் முடியும். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஒருவரிடம் காணப்படும் பட்சத்தில், ஜனாதிபதி அல்ல பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை வைத்திருக்கும் நபரே பலம் மிக்கவராகக் கருதப்படுவார்

அரசாங்கத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை இல்லா பிரேரணையை கொண்டு வந்து அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும். இது மிகவும் கடினமான விடயம் . அதனை மேற்கொள்ள மக்களின் பேராதரவு கட்டாயம் தேவை என உதய கம்மன்பில சுட்டிக்காட்டினார்.

இந்தியாவிடமிருந்து கடன் கிடைப்பதால், ஏப்ரல் மாதமளவில் தற்போதுள்ள நெருக்கடிகளுக்கு ஓரளவு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், கடன் வசதிகளுடாக கிடைக்கும் சலுகைகள் முடிவடைந்த பின்னர் மக்கள் வீதிக்கு இறங்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக தம்மால் நடவடிக்கை எடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறு 113 பேர் ஒன்றிணைந்த பின்னரே நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர முடியும் எனவும் அவர் கூறினார்.

Posted in Uncategorized

இ.தொ.காவின் புதிய தலைவராக செந்தில் தொண்டமான்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவிற்கு பின்னர் வெற்றிடமாக இருந்த இ.தொ.காவின் தலைமை பதவிக்கே செந்தில் தொண்டமான் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கொட்டகலை CLF வளாகத்தில் இன்று இ.தொ.காவின் தேசிய சபை கூடிய போதே செந்தில் தொண்டமான் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக

இதேவேளை, கட்சியின் நிதி செயலாளர் பதவியை வகித்த மருதபாண்டி ராமேஷ்வரன் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக ஒரே நாளில் 150 போராட்டங்கள்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக ஒரே நாளில் – ஒரே நேரத்தில் 150 போராட்டங்களை நாடு தழுவிய ரீதியில் நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 07ஆம் திகதி தேர்தல் தொகுதிகள்வாரியாக குறித்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இந்தபோராட்டங்களில் பங்கேற்று, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளனர்.