மனித உரிமைகள் தொடர்பான அம்பிகா சற்குணநாதனது கருத்துக்கள் கவலை அளிக்கின்றது – வெளிநாட்டு அமைச்சு

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் மனித உரிமைகளுக்கான உபகுழுவில் நீலன் திருச்செல்வம் அறக்கட்டளையின் தலைவி அம்பிகா சற்குணநாதன் வெளியிட்ட கருத்துக்கள், இலங்கை அரசாங்கம் பல முனைகளில் அடைந்துள்ள முன்னேற்றத்தை முற்றாகப் புறக்கணிக்கும் வகையில் அமைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் மனித உரிமைகளுக்கான உபகுழுவில் கடந்த 2022 ஜனவரி 27ஆம் திகதி இடம்பெற்ற கருத்து பரிமாற்றத்தின்போது, நீலன் திருச்செல்வம் அறக்கட்டளையின் தலைவி அம்பிகா சற்குணநாதன், இலங்கையின் மனித மற்றும் தொழிலாளர் உரிமைகளின் நிலைமை குறித்த பல்வேறு விடயங்களை வெளிப்படுத்தினார்.

“ஐ.நா. மனித உரிமைகள் பொறிமுறைகள் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆகியவற்றுடன் நீண்டகால ஒத்துழைப்பில் ஈடுபட்டு, உள்நாட்டு செயன்முறைகள் மற்றும் நிறுவனங்களின் மூலம் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை நிவர்த்தி செய்வதற்கான தனது உறுதிப்பாட்டை வழங்கும் நேரத்தில், அரசாங்கத்தின் நோக்கங்கள் மற்றும் நேர்மை குறித்த சந்தேகங்களை உருவாக்குகின்றது.

மனித உரிமைகள் தொடர்பாக அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் தனது ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையைப் பயன்படுத்த வேண்டும்” என அம்பிகா சற்குணநாதன் வழங்கிய பரிந்துரைகளில் அமைச்சு ஏமாற்றம் அடைந்துள்ளது.

இந்த நிலையில், அம்பிகா சற்குணநாதனின் கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சு, அம்பிகா சற்குணநாதனது கருத்துக்கள் கவலை அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.

நிதியமைச்சர் பஸிலை அமெரிக்கா விசாரணைகள் செய்தல் வேண்டும்! வலியுறுத்துகிறார் சுரேஷ்

கள்ளச் சந்தையில் டொலர்கள் வாங்கி வடகொரியாவிடம் ஆயுத கொள்வனவு செய்த தமது நாட்டு பிரஜையான நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சசவை அமெரிக்கா விசாரணை செய்து உண்மையைத் தெளிவுபடுத்த வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப் பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப் பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் ,

கறுப்பு சந்தையில் டொலர்களை வாங்கி வடகொரி யாவிடம் ஆயுதங்களைக் கொள்வனவு செய்ததாக இலங்கையின் நிதி அமைச்சரும் அமெரிக்கப் பிரஜையுமான பஸில் ராஐபக்ச கூறியிருக்கின்றமை தற் போது சர்ச்சையாகியுள்ளது.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் என்பது சுயநிர்ணய உரிமை, சுயாட்சி போன்றவற்றை மையமா கக் கொண்டு நடைபெற்றது. விடுதலைப் போராட்டம் என்பது பேச்சு மூலம் பேசித் தீர்க்கப்பட்டிருக்க வேண் டிய விடயம். ஆனால் 2005 ஆம் ஆண்டுக்குப் பிற்பாடு இந்த அரசாங்கம் மூர்க்கத்தனமாகப் போராட்டத்தை முன் னெடுத்தமை எல்லோருக்கும் தெரிந்த விடயம். யுத் தத்தை முன்னெடுத்துச் செல்வதற்காகப் பல கோடிக ளைச் செலவிட்டு ஆயுதங்களைக் கொள்வனவு செய் தது. முக்கியமாக சீனாவிலிருந்தும் பாகிஸ்தானில் இருந்தும் தற்போது வடகொரியாவில் இருந்துத் ஆயு தங்களை வேண்டியதாகக் கூறுகின்றார்கள்.

வட கொரியாவில் இருந்து பல மில்லியன் டொலர்களுக்குக் கடன்களாக இராணுவத் தளவாடங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இந்த இராணுவத் தளவாடங்களின் கொள்வனவு மற்றும் கடன் என்பன தற்போது எங்கு கொண்டு வந்து விட்டுள்ளது என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆனால், பஸில் ராஜபக்rவின் இத்தகைய விடயம் அன்றைய பாதுகாப்புச் செயலாளராக இருந்தவரும் அமெரிக்கப் பிரஜையாக இருக்கின்ற இன்றைய இலங்கை ஐனாதிபதி கோட்டாபய ராஜபக்rவுக்கும் தெரியும். அன்றைய பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இன்றைய நிதியமைச்சர் ஆகியோர் அமெரிக்கப் பிர ஜையாக இருந்தவர்கள். அமெரிக்காவால் பொருளாதாரத் தடை விதிக்கப் பட்ட நாட்டுடன் இவர்கள் கள்ளச்சந்தை மூலம் டொலர் களைக் கடத்தி அங்கிருந்து ஆயுதங்களைக் கொள் வனவு செய்தோம் என ஏற்றுக்கொள்கின்றார்.

நிச்சய மாக அமெரிக்க அரசு பஸில் ராஜபக்சவை மாத்திர மன்றி அன்றைய காலகட்டத்தில் இலங்கையை வழி நடத்திய தலைவர்களும் விசாரிக்கப்படவேண்டும். அன்று கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்கள் ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவிப்பதற்கு உதவியாக இருந்தது. யுத்தத் துக்காகக் கள்ளச் சந்தை ஊடாக வடகொரியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆயுதங்கள் என்பது ஒரு மனிதப் படுகொலைக்கும், மனித உரிமை மீறலுக்கு மாக இலங்கை அரசாங்கத்தால் அப்போது பாவிக்கப் பட்டது என்பதுதான் முக்கியமான விடயம். ஆகவே, இத்தகைய விடயம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் எந்தவொரு விசாரணைகளையும் நடத்தப் போகின்றமை கிடையாது.

ஆனால், இவற்றை மேற் கொண்டது அமெரிக்க பிரைஜைகள் என்ற அடிப்படை யிலும் இலங்கை நாடு என்பது இவர்களுடன் சம்பந் தப்பட்டது என்பதாலும் தங்கள் பிரஜைகளான பஸில் ராஜபக்rவை விசாரிப்பதும் இலங்கை அரசு இதற்கு ஊக்கமளித்தது சம்பந்தமாகவும் விசாரிப்பது அமெ ரிக்காவின் கடமையென நாம் கருதுகிறோம். ஆகவே, இவ்வாறான நடவடிக்கைகளைக் கடந்த காலங்களில் இரகசியமாக தாங்கள் நிறைவேற்றி யதாகவும் தற்போதும் கூட நாடு வங்குரோத்து நிலை யில் டொலர்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது, எதுவும் இறக்குமதி செய்ய முடியாத நிலைமை இருக் கிறது நாளாந்தம் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற் பட்டுக் கொண்டிருக்கிறது,

அரசாங்கம் எந்தவொரு பொருளுக்கும் விலை நிர்ணயிக்க முடியாது இருக்கி றது. ஆகவே, இவ்வாறான சூழ்நிலையில் மீண்டும் கள் ளச்சந்தையில் டொலர் வாங்கலாம் என்ற சாரப்பட நிதி அமைச்சரின் கூற்று இருக்கிறது. ஆகவே, இது தொடர் பில் முழுமையான விசாரணை தேவை. ஒரு பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட நாட்டில் அமெரிக்கப் பிரஜையை இவ்வாறான நடவடிக்கை களை மேற்கொள்ள முடியுமா என்பதை உரிய விசா ரணை செய்து அமெரிக்க அரசு உண்மைகளை தெளிவுபடுத்த வேண்டும் என்பதை கேட்டுக்கொள் கிறோம். – எனக் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

‘மரண சான்றிதழ் வழங்குவோம்’ என்ற வார்த்தையை தவிர்க்குமாறு காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கம் கோரிக்கை

இலங்கையின் 74வது சுதந்திர தினம், தமிழர்களுக்கு ஒரு கறுப்பு நாள் எனவும் அரசாங்கம் இனிமேல் மரண சான்றிதழ் வழங்குவோம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை முற்றாக தவிர்க்க வேண்டும் எனவும் கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

திருகோணமலை அன்புவெளிபுரம் கையளிக்கப்பட்டு,கடத்தப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் அலுவலகத்தில் இன்று (4) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவி ஜே.நாகேந்திரன் ஆஷா,

“இன்றைய தினம் நாட்டின் 74வது சுதந்திர தினத்தினை வெகு விமர்சையாக கொண்டாடி கொண்டிருக்கிறார்கள் ஆட்சியாளர்கள். ஆனால் இன்றைய நாள், தமிழர்களுக்கான கறுப்பு நாள். இத்தனை வருடங்கள் கடந்தும் கையளிக்கப்பட்டு,கடத்தப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரரின் தரவுகள் சரியாக வழங்கப்படவில்லை. இந்த நாட்டில் எமக்கு எந்த ஒரு சுதந்திரமும் இல்லை.

தாங்கள் இன்றுவரை நிம்மதியாக இந்த நாட்டில் வாழ வில்லை. அரசாங்கத்தின் அழுத்தங்களின் காரணமாக அரச புலனாய்வு துறையினர்களின் கேள்விகளுக்கு உள்ளாக்கப்பட்டு,பின் தொடரப்பட்டு மற்றும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றோம்.

தமது உறவுகளுக்கு நீதி விசாரணை இல்லாமல் எவ்வாறு மரண சான்றிதழ் வழங்க முடியும். எமக்கு மரண சான்றிதழ் தேவையில்லை. அவர்களுக்கான சரியான ஒரு நீதி மாத்திரமே வேண்டும்” என்றார்.

”கடினமான காலங்கள் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை”: ஜனாதிபதியின் சுதந்திர தின உரை!

பெற்றுக்கொண்ட சுதந்திரத்தின் உயர்ந்தபட்ச பலனை அடைவதற்கு, அனைவரும் நாட்டுக்கான தமது பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டுமென்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தினார்.

சுதந்திரமானதும் ஜனநாயகமானதுமான நாட்டின் மக்களுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளன. அது போன்றே, பொறுப்புகளும் உள்ளன என்றும் எடுத்துரைத்த ஜனாதிபதி , அந்தப் பொறுப்புகளை மறந்து உரிமைகள் பற்றி மாத்திரம் பேசுவது உகந்ததல்ல என்றும் குறிப்பிட்டார்.

இன்று (04) முற்பகல், கொழும்பு சுதந்திரச் சதுக்கத்தில் இடம்பெற்ற 74ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்டு தேசத்துக்காக உரையாற்றும் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் அயோமா ராஜபக்ஷ ஆகியோர் கொண்டாட்ட இடத்துக்கு வருகை தருவதை அறிவிக்கும் வகையில் இசைக்கருவிகள் இசைக்கப்பட்டன. அதன் பின்னர், ஜனாதிபதி அவர்களினால் தேசிய கொடி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து,

பாடசாலை மாணவ, மாணவியரினால் தேசிய கீதம் பாடப்பட்டது.

பாதுகாப்புப் படைகளின் பிரதானி, கடற்படை, விமானப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர், ஜனாதிபதி அவர்களை விசேட மேடைக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து, பாடசாலை மாணவிகளால் “ஜயமங்கள கீதம்” மற்றும் “தேவோ வஸ்ஸது காலேன” கீதம் ஆகியன பாடப்பட்டன. தொடர்ந்து, இலங்கையின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த அனைத்து இலங்கையர்களையும் நினைவேந்தும் வகையில் 02 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனையடுத்து, ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தும் முகமாக, 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி தேசத்துக்கான உரையை ஆரம்பித்தார்.

“நாட்டுக்கு முன்னால் காணப்படும் சவால்களை வெற்றிகொள்ள வேண்டுமாயின், அர்ப்பணிப்புகளின் ஊடாகவே அவை சாத்தியப்படும். கடினமான காலங்கள் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அவ்வாறான கடினமான காலங்களை எதிர்கொள்வதற்கு, பலமிக்க மனிதர்கள் அவசியம். நாம் தற்காலத்தில் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் அனைத்தும் நீண்டகாலப் பிரச்சினைகள் அல்ல. நேர்மறையான அணுகுமுறைகளுடன் அவ்வாறான பிரச்சினைகளுக்கு பதிலளிக்க முடியும்” என்று, ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

“நாடு தற்போது முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான காரணங்களைக் கண்டுபிடித்துக்கொண்டு பல வருடங்கள் பின்னோக்கிச் செல்வதை விட, அவற்றுக்கான நீண்டகால மற்றும் குறுகியகாலத் தீர்வுகளைக் காண்பதே காலோசிதமானது. அரசாங்கம் தற்போது அதற்கான அவதானத்தையே செலுத்தியுள்ளது” என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
நாட்டுக்கு எடுத்துக்காட்டாக எப்போதும் செயற்படுமாறு அனைத்து அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அரசியல்வாதிகளிடமும் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி அவர்கள், நாட்டு மக்களுக்கு அந்த முன்னுதாரணத்தைக் காட்டும் போதே, பெரும்பாலான மக்கள் உங்களைப் பின்பற்றுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.

வெற்றிகொள்ளப்பட்டுள்ள சுதந்திரத்தை எதிர்காலச் சந்ததியினருக்காகப் பாதுகாப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் ஒற்றுமை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை நிலைநாட்டுவதாக வழங்கிய உறுதிமொழியை எப்போதும் காப்பதாகவும் குறிப்பிட்டார்.

சுதந்திரத்தின் உண்மையான அர்த்தத்தை அடைந்த பெருமைமிக்க தேசத்தை உருவாக்குவதற்காக இணையுங்கள் என்று, தேசபக்தியுள்ள மக்கள் அனைவருக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

74ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம், கொவிட் தொற்றொழிப்புக்கான சுகாதார வழிகாட்டுதல்களுடன், நாட்டின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இராணுவ, கடற்படை, விமானப்படை, பொலிஸ், சிவில் பாதுகாப்பு மற்றும் தேசிய மாணவப் படையினர், இதற்கான அணிவகுப்பு மரியாதைகளில் ஈடுபட்டிருந்ததோடு, இலங்கையின் அனைத்துச் சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அழகிய கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

மஹா சங்கத்தினர், அனைத்து மதத் தலைவர்கள், நிறைவேற்று அதிகாரமுள்ள ஐந்தாவது ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச , பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், மத்திய வங்கியின் ஆளுநர், இராஜாங்க அமைச்சர்கள், ஆளுநர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் செயலாளர்கள், முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பு பிரதானிகள், அரச அதிகாரிகள் மற்றும் படையினர் உள்ளிட்ட பலரும் இந்தக் கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

Posted in Uncategorized

வட பகுதி மீனவர்களின் போராட்டம் தொடர்கிறது

74 ஆவது சுதந்திர தினம் இன்று (04) கொண்டாடப்படும் நிலையில், சுதந்திரம் அற்றுப்போன பலரும் எம் மத்தியில் இருக்கவே செய்கின்றனர். வட பகுதி மீனவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

Sea Of Sri Lanka எனப்படும் இலங்கையின் கடல் வளத்தில் இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுத்து நிறுத்துமாறு கோரி வட பகுதி மீனவர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

யாழ். வத்திராயன் கடற்பரப்பில் இரண்டு மீனவர்கள் உயிரிழந்தமைக்கும் இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான அத்துமீறலுக்கும் எதிர்ப்பு தெரிவித்து யாழ். சுப்பர்மடம் மீனவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும் தொடர்ந்தது.

பொதுமக்களின் இயல்வு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அல்லது வீதியில் அசௌகரியங்களை உண்டு பண்ணும் வகையிலான அனைத்து செயற்பாடுகளையும் இடைநிறுத்துமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை நேற்றிரவு பருத்தித்துறை பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மீனவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் பிரதிநிதிகள் சிலரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு சென்றிருந்தனர்.

இதன்போது, உயிரிழந்த சுப்பர்மடம் பகுதியை சேர்ந்த இரு மீனவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனிடையே கிளிநொச்சி தேசிய மீனவர் ஒத்துழைப்பின் ஏற்பாட்டில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி – பூநகரி கடற்றொழில் கூட்டுறவு சங்க சமாசங்களுக்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

Sea Of Sri Lanka எனப்படும் இலங்கையின் கடல் வளத்தில் இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு தொடர்ச்சியாக நடந்தேறி வருவதை நியூஸ்ஃபெஸ்ட் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டியிருந்தது.

எமது கடற்பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழையும் இந்திய மீனவர்கள் கடந்த காலங்களில் எமது மீனவர்களின் வலைகளை அறுத்ததுடன், கடல் வளத்தையும் நாசப்படுத்துகின்றனர்.

தற்காலிகமாக இவர்கள் கைது செய்யப்படுவதும் பின்னர் விடுதலை செய்யப்படுவதும் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்றன.

Posted in Uncategorized

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சுதந்திர தினத்தில் ஆர்ப்பாட்டம்

இலங்கையின் சுதந்திர தினமான இன்று (04) தமது உறவுகளுக்கு நீதி கோரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு – முள்ளிவாய்க்காலில் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இதன்போது, யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கு முள்ளிவாய்க்காலில் சுடர் ஏற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் முள்ளிவாய்க்காலிலிருந்து செல்வபுரம் வரை பேரணியாகச் சென்று அங்கும் கவனயீர்ப்பில் ஈடுப்பட்னர்.

வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ். பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம், பேரணியாக முனீஸ்வரன் வீதியூடாக முனியப்பர் ஆலய முன்றலை சென்றடைந்தது.

பின்னர் முனியப்பர் ஆலய முன்றலில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Posted in Uncategorized

மாற்றுப் பேச்சுவார்த்தைக்கு தயார்: சர்வதேச நாணய நிதியம்

டொலர் பற்றாக்குறையினாலேயே எண்ணெய்க்கான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடன் பிரச்சினைகளால் டொலர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.

இதேவேளை, அரசாங்கம் நிதி உதவி கோரினால், இலங்கையுடன் மாற்று பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தயாராகவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம்  (IMF) தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இலங்கை அரசாங்கம் இதுவரை நிதியுதவி கோரவில்லை என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் மசாஹிரோ நொசாகி, AFP செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் ஆலோசனை பெற இலங்கை தயாராக இருப்பதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ அண்மையில் தெரிவித்திருந்தார்.

எனினும், மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் இந்த விடயம் குறித்து வேறு விதமாக கருத்து தெரிவித்திருந்தார்.

நிதியமைச்சின் புதிய பொருளாதாரப் பிரிவின் பொருளாதார திறனைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்கும் பொதுவான செயற்பாடு அதுவென மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

ஹபாயா’ சர்ச்சை: இனப்பிரச்சினைக்கு வழிவகுக்கக்கூடாது – சம்பந்தன் வலியுறுத்து

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் மீண்டும் எழுந்துள்ள ‘ஹபாயா’ சர்ச்சையால் அதிருப்தியடைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், இது இனப்பிரச்சினைக்கு வழிவகுக்கக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்பேசும் மக்கள் என்ற ரீதியில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டியது அத்தியாவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அதேவேளை, ஒவ்வொரு இனத்தினுடைய உரிமைகளையும் மற்றைய இனம் மதிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

‘ஹபாயா’ அணிந்து வந்திருந்த குறித்த முஸ்லிம் பெண் ஆசிரியர் உண்மையில் அதிபர் மீது தாக்குதல் நடத்தியிருந்தால் அது தவறான விடயம் எனவும், இந்தக் கருமத்தை நாம் சமாதானமாகத் தீர்க்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒருவரையொருவர் மதித்து மற்றவர்களுடைய கருமத்துக்கு – சுயமரியாதைக்கு – இறைமைகளுக்குப் பாதகம் இல்லாமல் நாம் செயற்பட வேண்டும்.

அனைவரும் இந்தக் கடமையை ஒற்றுமையாகச் செய்ய வேண்டும் என நான் மிகத் தயவாகக் கேட்டுக்கொள்கின்றேன். பிரச்சினையை நாம் வளர்க்கக்கூடாது. தமிழ்பேசும் மக்கள் என்ற வகையில் வடக்கு – கிழக்கு என்பது எமது சரித்திர ரீதியான வதிவிடம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டு அந்த அடிப்படையில் இறைமையை நாம் பாதுகாப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும்” – என்றார்.

Posted in Uncategorized

மகாவம்சம் கூறும் தமிழரின் சுயநிர்ணயம் தெரியாதா வீரசேகரவுக்கு? – ரெலோவின் இளைஞர் அணித் தலைவர் சபா குகதாஸ்

தமிழர்கள் சுயநிர்ணயத்துடன் சுயாட்சி நடாத்தியதாக சிங்கள மக்கள் நம்பும் மகாவம்சத்தில் மகாநாம தேரர் குறிப்பிடப்பட்ட விடையம் அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு இதுவரை தெரியாதா? என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவரும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் வீரசேகரவின் ஊடக அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்துள்ள அவர்,

சில தினங்களுக்கு முன்னதாக ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் புலிகள் கோரிய சுயநிர்ணய உரிமையை சுமந்திரனும் கோருகிறார் என குறிப்பிட்டிருந்தார். வாசிக்கும் போது வேடிக்கையாக இருந்தது.

முதலாவது சிங்கள குடியேற்றம் இலங்கையில் கி மு 6 நூற்றாண்டு விஐயன் தலைமையில் அரங்கேறும் போது தமிழர்கள் சுயநிர்ணயத்துடன் சுயாட்சி நடாத்தியதாக சிங்கள மக்கள் நம்பும் மகாவம்சத்தில் மகாநாம தேரர் குறிப்பிடப்பட்ட விடையம் அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு இதுவரை தெரியாதா?

இலங்கைத் தீவுக்கு சொந்தமான தமிழர்கள் இறைமையுடன் ஆண்ட இனம் என்ற வரலாற்றை மறைத்து பௌத்த சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்கள் மீது தொடரும் ஆக்கிரமிப்பின் ஒரு வகை வெளிப்பாடே வீரசேகரவின் ஊடக அறிக்கை.

தமிழர்களின் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சுயாட்சி ஐரோப்பியரின் இலங்கைமீதான ஆக்கிரமிப்புடன் பறிக்கப்பட்டது குறிப்பாக 1833 ஆண்டு கோல்புறுக் அரசியல் அமைப்பின் மூலம் ஒற்றையாட்சிக்குள் நாடு கொண்டுவரப்பட்டதால் தமிழர்கள் சுயாட்சியை இழந்தனர்.

பின்னர் 1948 ஆண்டு சுதந்திரம் என்ற பெயரில் சிங்களவர்களுக்கு உண்மையான சுதந்திரத்தையும் தமிழர்கள் உட்பட ஏனைய இனங்களுக்கு அவர்களின் இருப்பை ஆக்கிரமிக்கும் சிங்கள ஆட்சியாளர்களையும் கொடுத்துச் சென்றனர் பிரித்தானியர். அன்றில் இருந்து இன்று வரை தமிழ் மக்கள் மறுக்கப்பட்ட தங்களது சுயநிர்ணய உரிமைக்காக தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.

1952 இல் இருந்து 1972 வரை 90 சதவீத தமிழ் மக்கள் சமஷ்டி அடிப்படையிலான சுயாட்சித் தீர்வுக்காகவே ஐனநாயக முறையில் தேர்தல்களில் வாக்களித்தனர் பின்னர் 1977 தேர்தலில் ஒரு படி மேலே சென்று தனிநாட்டிற்கான கோரிக்கையை முன் வைத்து அதற்கான சர்வசன வாக்கெடுப்பு என்ற வகையில் வடகிழக்கில் 19 தொகுதிகளில் 18 தொகுதிகளை அன்றைய தமிழர் கூட்டணி வென்றது இது மிகப்பெரிய ஐனநாயக வெற்றி ஆனால் சிங்கள ஆட்சியாளர் தமிழர்களின் அபிலாசைகளை நியாய பூர்வமாக தீர்க்க முன் வரவில்லை இதனால் உருவாகியதே ஆயுதப் போராட்டம் இயக்கங்கள்.

ஆகவே விடுதலைப் புலிகள் தங்களது கோரிக்கையாக சுயநிர்ணய உரிமையை கோரவில்லை தமிழ் மக்களின் ஐனநாயக ரீதியாக தேர்தல் மூலம் கேட்கப்பட்ட சுயநிர்ணய உரிமையை பௌத்த சிங்கள பேரினவாத ஆட்சியாளர் அங்கிகரிக்க மறுத்தமையால் அதனைப் பெற்றுக் கொடுக்கவே ஆயுதப் போராட்டம் நடாத்தினர். எனவே யுத்தம் மௌனிக்கப்பட்டு 13 ஆண்டுகளாகியும் மீண்டும் தமிழ் மக்கள் பெரும்பாண்மையாக சுயநிர்ணய உரிமைக்காகவே பல அவலங்களுக்கு மத்தியில் தொடர்ந்து வாக்களித்து வருகின்றனர். எனவே தமிழர்கள் இந்த நாட்டின் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய இறைமையுள்ள இனம் என்பதை வரலாற்றில் இருந்து மறைக்க முடியாது.

கறுப்புச் சந்தை மூலம் ஆயுதம் கொண்டு வந்ததை மறுக்காத பசில் : செய்தியாளர் சந்திப்பில் திக்குமுக்காடினார்

இலங்கையில் இறுதி யுத்தம் நடந்த போது கறுப்புச் சந்தையைப் பயன்படுத்தி வடகொரியாவில் இருந்து ஆயுதங்கள் கொண்டுவந்ததாக நிதியமைச்சர் தெரிவித்த கருத்து தற்போது சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இன்று (02) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.

சிக்கலான கேள்விகளை தவிர்ப்பது நல்லது என்று இதற்கு நிதியமைச்சர் பதிலளிக்க, நீங்கள் சொன்ன கருத்தினால் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று ஊடகவியலாளர் மீண்டும் கேள்வியெழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த பசில் ராஜபக்ச, இதற்குப் பதிலளித்தால் இன்னும் நிலைமை சிக்கலாகிவிடும் என்று கூறி முடித்தார். ஆனால் இந்தக் கருத்தை விளக்கப்படுத்துவதற்கான நல்ல சந்தர்ப்பம் இது என்று ஊடகவியலாளர் மீண்டும் குறிப்பிட, அப்படியொன்று நடக்கவில்லை என்று சொன்னால் கதை முடிந்துவிடும் என்று நழுவல் போக்கில் பதிலளித்தார்.

கறுப்புச் சந்தையின் மூலம் டொலர்களைப் பயன்படுத்தி வடகொரியாவில் இருந்து ஆயுதங்களைக் கொண்டுவந்ததாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, சிங்கள நாளிதழுக்கு சொன்ன கருத்து சர்ச்சையாகியுள்ளது.

இந்தக் கருத்தை மறுக்காத பசில் ராஜபக்ச, ஊடகவிலாளரின் அந்தக் கேள்வியால் திக்குமுக்காடிப் போனார்.

அத்துடன், யுத்த காலத்தில் நடந்த ஏராளமான விடயங்களைப் பகிர்ந்துகொள்ள முடியாது என்றும் அவற்றை பேசாமல் இருப்பது நல்லது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ச அதனை மூடிமறைக்க முயற்சித்தாலும், வடகொரியாவுடன் கொடுக்கல் வாங்கல் செய்துகொண்டார் என்ற கருத்து தற்போது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன், பணச் சலவையில் ஈடுபட்டதாக இதற்கு முன்னர் ராஜபக்ச குடும்பத்தில் சிலர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. பண்டோரா ஆவணங்களின் மூலம் இந்த தகவல்கள் வெளிவந்திருந்தன. இதுகுறித்து விசாரணைகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டாலும், அதுகுறித்து முழுமையான விசாரணைகள் நடத்தப்படுவதைக் காண முடியவில்லை என குற்றச்சாட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பணச் சலவை மற்றும் கறுப்புப் பயணத்தைப் பயன்படுத்தி, பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ள வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்தத் தகவல்கள் அல்லது நடந்த சம்பவங்கள் குறித்து ஜெனீவா மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில் சர்ச்சைகள் வெளிவரலாம் என்றும் கூறப்படுகிறது.

பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக மேலும் புதிய பிரச்சினைகளை இந்த அரசாங்கம் உருவாக்கி வருவதாக பொதுமக்கள் தொடர் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர்.

Posted in Uncategorized