இலங்கைத் தமிழர்களுக்கு உதவிகளை வழங்க பிரதமர் மோடியிடம் தமிழக முதலமைச்சர் கோரிக்கை

இலங்கைத் தமிழர்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு அனுமதிக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் உள்ள இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து உரையாடிய போதே இக்கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தின் ஊடாக இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் உதவிகளை செய்வதற்கு அனுமதிக்குமாறு இதன்போது மு.க..ஸ்டாலின் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதரார நெருக்கடி நிலைகாரணமாக இலங்கையில் வாழமுடியாது படகு மூலம் தமிழ்நாட்டிற்கு சென்றுள்ள தமிழர்களை மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைத்து பராமரிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உதவிகளை செய்ய முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதே நேரம் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் தினமும் இலங்கை கடற்படையால் சிறைப்பிடித்து செல்வது பற்றியும் பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கி கூறியதோடு தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கும் நாட்டை மீட்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்! கரு ஜயசூரிய அழைப்பு

நாடு பொருளாதார மற்றும் சமூக ரீதியாக விழுந்துள்ள பாதாளத் திலிருந்து மீண்டு நாட்டு மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்று வதற்கு நாட்டிலுள்ள அனைத்து முன்னணி அரசியல் சக்திகளும் பொது இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும் என சமூகநீதிக்கான தேசிய அமைப்பின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையி லேயே இவ்வாறு தெரிவிக்கப்பட் டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்படுள்ளவை வருமாறு,

இன்று அரசாங்கம் தோல்வியைடந்துள்ளது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. நாட்டை பின்னடை யச் செய்துள்ளனர். அதை உட னடியாக நிறுத்த வேண்டும். அதற்கு இந்த நாட்டில் உள்ள அனைத்து அரசியல் சக்திகளும் ஒருமித்த இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும். ஒவ்வொரு அரசியல் கட்சியும் தனித்தனியாக அரசியல் செய்வது எமக்குப் பிரச்சினை அல்ல.

ஆனால் நாடு விழுந்துள்ள இந்த படுகுழியிலிருந்து நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டுமானால் அனைத்து அரசியல் கட்சிகளும் தலைவர்களும் ஒருமித்த பொது உடன்பாட்டுடன் செயற்பட வேண்டும். இன்று நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி தீர்க்க முடியாத பிரச்சி னையல்ல. ஒரு கட்டத்தில் இந்தியாவும் இதே போன்ற நெருக்கடியை சந்தித்தது. ஆனால், இந்தியா அதை மிகத் துல்லியமான கூட்டு முயற்சியால் தீர்த்து வைத்தது.

நாம் அனைவரும் அத்தகைய அணுகுமுறையை எடுக்க வேண் டும். அதே சமயம் நாடாளுமன்றம் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும். எனவே, இந்த நாட்டில் உள்ள அனைத்து அரசியல் சக்திகளும் தனிமனித அதிகாரத்தை இல் லாதொழித்து மீண்டும் நாடாளு மன்ற மரபுக்குத் திரும்ப வேண்டும்.

அதற்குப் பொதுவான ஒருமித்த கருத்துடன் தெளிவான வேலைத்திட் டத்தை நோக்கி நகர வேண்டும். எந்த அதிகார நோக்கமும் இல்லாமல், மிகுந்த நேர்மையுடன் அதற்காக நாங்கள் நிற்கிறோம். அத்துடன் நாட்டுக்குள் ஏற்பட் டிருக்கும் அரசியல் சமூக, பொருளாதாரப் பிரச்சினைக்கு 20 ஆவது திருத்தச் சட்டமும் காரணமாகும். அதனால், துரிதமாக நாடாளுமன் றத்துக்கு பூரண அதிகாரம் வழங்க வேண்டும். 20 ஆவது திருத்தச் சட்டத்தை இரத்து செய்வதன் மூலம் பல பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணலாம் என்றார்.

Posted in Uncategorized

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் உட்பட 45 பேர் கைது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டின் முன்பாக நேற்று வியாழக்கிழமை இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் உட்பட 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் பொலிஸ் பேருந்து ஒன்றும், ஜீப் ஒன்றும், முச்சக்கரவண்டி ஒன்றும், 2 டிராஃபிக் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இராணுவ பேருந்து ஒன்றும் ஆர்ப்பாட்டக்காரர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உட்பட 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

புலிகளுடன் இணைந்து கூட்டமைப்பை நாமே உருவாக்கினோம்; கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தகுதி சுமந்திரனுக்கு உள்ளதா?: ரெலோ சுடச்சுட பதிலடி!

விடுதலைப் புலிகளின் ஆசீர்வாதத்துடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை உருவாக்கியவ்கள் நாமே. விடுதலைப் புலிகளை வன்முறையாளர்கள் போல காட்டிக் கொள்ளும் சுமந்திரன், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் அங்கம் வகிக்கும் தகுதியுள்ளதா என கேள்வியெழுப்பியுள்ளார் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை சீர்குலைக்கிறார் என எம்.ஏ.சுமந்திரன் மீது நீண்டகாலமாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபயவை சந்திப்பதில்லையென ரெலோ எடுத்த முடிவை சுமந்திரன் பகிரங்கமாக விமர்சித்து வருகிறார். நேற்று வவுனியாவில் நடந்த நிகழ்வொன்றின் பின்னர் கருத்து தெரிவிக்கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேறினால் சந்தோசமடைவேன் என கூறியிருந்தார்.

இதை தொடர்ந்து, ஜனாதிபதி கோட்டாவை காப்பாற்ற எமது கட்சி வராததால் சுமந்திரன் ஏன் பதற்றமடைகிறார், கடந்த நல்லாட்சி காலத்திலும் ரணிலை காப்பாற்ற இதுபோலவே ‘விழுந்து விழுந்து’ பணியாற்றினார் என ரெலோ ஆதாரவாளர்கள் சமூக ஊடகங்களில் சுட்டிக்காட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில், எம்.ஏ.சுமந்திரனின் கருத்திற்கு ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று பதிலளித்துள்ளார்.

தமிழ்பக்கம் அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது,

”தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழீழ விடுதலை இயக்கம் விலகிச் சென்றால் தமிழ் அரசு கட்சி சந்தோசப்படும் என சுமந்திரன் தெரிவித்திருந்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாகி, 10 வருடங்களின் பின்னரே சுமந்திரன் கட்சிக்குள் வந்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்தில் ரெலோ முக்கிய பங்காற்றியிரு;தது. கிழக்கில் உள்ள தமிழ் அரசு கட்சியின் பிரமுகர்கள் பலருக்கும் அது தேரியும்.

ஆயுதப் போராட்டத்தை வன்முறையென சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். வன்முறையை ஏற்கவில்லையென்றும் குறிப்பிட்டார்.

சுமந்திரன் வன்முறையென குறிப்பிடும் வே.பிரபாகரனின் ஆசீர்வாதத்துடனேயே தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அந்த கூட்டமைப்பில் சுமந்திரன் எப்படி அங்கம் வகிக்க முடியும்.

இதேவேளை, சுமந்திரனின் கருத்து தமிழ் அரசு கட்சியின் கருத்தா என்பதை அந்த கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும், சுமந்திரனின் கருத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்தை என்பதை இரா.சம்பந்தன் தெளிவுபடுத்த வேண்டும்.

போராட்டத்திலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திலும் ஒரு துளியளவு பங்களிப்பையும் செலுத்தாதவர் சுமந்திரன். தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் அனைவருக்கும் முன்பாகவே எமது முடிவை அறிவித்தோம். எமது முடிவு ஜனநாயகரீதியிலானது என இரா.சம்பந்தனும் தெரிவித்திருந்தார்.

சுமந்திரன் பல தடவைகள் சீண்டிய போதும், நாம் உருவாக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமை பாதிக்கப்பட கூடாது என்பதற்காக மௌனம் சாதித்தோம். இப்பொழுது சுமந்திரன் சொன்ன கருத்து பாரதூரமானது. அதற்கு பதிலடி கொடுப்போம்.

எம்மை துரோகிகள் போல சுமந்திரன் பொய்யான கருத்தை தெரிவித்திருந்தார். நாம் துரோகிகளாக புலிகளால் பார்க்கப்பட்டிருந்தால், கூட்டமைப்பை உருவாக்கும் பணியை புலிகள் எம்மிடம் தந்திருக்க மாட்டார்கள்.

விடுதலைப் புலிகளும், ரெலோவும் எப்படி அன்னியோன்யமாக செயற்பட்டார்கள் என்பது வரலாறு தெரிந்தவர்களிற்கும், விடுதலைப் புலிகளின் மூத்த போராளிகளிற்கும் நன்கு தெரியும். வவுனியாவில் புலிகளுடன் சேர்ந்து செயற்படுவதாக கூறி, எமது உறுப்பினர்களும், அலுவலகங்களும் தாக்கப்பட்டிருந்தன.

எம்மையும் புலிகளையும் பற்றி பேசும் தகுதி சுமந்திரனுக்கு கிடையாது” என்றார்.

Posted in Uncategorized

தரகராக செயற்பட வேண்டாம்! – லண்டனில் இருந்து சுமந்திரன் எம்.பிக்கு வேண்டுகோள்

இலங்கை அரசாங்கத்தின் தரகராக செயற்பட வேண்டாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

லண்டனில் இருந்து வெளியாகும் விடுதலைப் புலிகள் அமைப்பு சார்பான இணையத்தளம் ஒன்றினால் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதான தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புலம்பெயர் தமிழர்கள் சார்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த எம்.ஏ.சுமந்திரனுக்கு அதிகாரம் இல்லை என குறித்த இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியல் கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், எம்.ஏ. சுமந்திரன் லண்டன் வந்த போது தமிழ் மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தப்பிச் சென்றதாகவும் அந்த இணையத்தளத்தில் கூறப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை முழுமையாக இழக்கப்பட்டுள்ளது : ஒன்றிணைந்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணுங்கள் – ஞானசார தேரர்

அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை முழுமையாக இழக்கப்பட்டுள்ளது. அதனை மீளக் கட்டியெழுப்ப முறையான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

ஆளும் மற்றும் எதிர்தரப்பிலுள்ள சகல பொருளாதார நிபுணர்களையும் ஒன்றிணைத்து விசேட குழுவொன்றை நியமித்து, நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் வழியை ஆராய வேண்டும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

ராஜகிரியவிலுள்ள ஸ்ரீ சத்தர்ம ராஜினகா விகாரையில் நேற்று வியாழக்கிழமை (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளின் உண்மை நிலைவரம் என்ன என்பது தொடர்பிலும் , அதற்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது தொடர்பிலும் அரசாங்கம் முழுமையான அறிவிப்பொன்றை வெளியிட வேண்டும். அதனை விடுத்து ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொண்டிருப்பது பொறுத்தமற்றது,

எரிபொருளை விநியோகிப்பதற்கு முறையான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட வேண்டும். அவ்வாறில்லை என்றால் மக்கள் பதற்றமடைந்து, அவர்கள் வீதிக்கு இறங்கி போராட தொடங்கினால் பிரச்சினைகள் மேலும் உக்கிரமடையக் கூடும். அரசாங்கத்தின் மீது மக்களுக்கு தற்போது துளியளவும் நம்பிக்கை இல்லை. இது துரதிஷ்டவசமான நிலைமையாகும்.

கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்தியதைப் போன்று , இந்த நெருக்கடிகளையும் முறையாக கட்டுப்படுத்தி அரசாங்கம் மக்கள் மத்தியில் மீண்டும் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டும். அவ்வாறு முடியாது என்றால் இயன்றவர்களிடம் பொறுப்பினை ஒப்படைத்துவிட்டு , ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.

அவ்வாறில்லை எனில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி என அனைத்து தரப்பிலுமுள்ள பொருளாதாரத்தில் நிபுணத்துவமுடையவர்களை ஒன்றிணைத்து விசேட குழுவொன்றை நியமித்து பிரச்சினைக்கு தீர்வு காணும் வழிமுறைகளை ஆராய வேண்டும் என்றார்.

Posted in Uncategorized

ஜனாதிபதியின் வீட்டுக்கு அருகில் மக்கள் போராட்டத்தால் பதற்றம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வீட்டுக்கு அருகில் நேற்று இரவு மக்கள் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மீரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் வீட்டுக்கு அருகில் இன்று இரவு கூடிய மக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான நிலைமை உருவாகியுள்ளது.

எரிபொருள் நெருக்கடி மற்றும் மின்வெட்டு உள்ளிட்ட பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஜனாதிபதியின் வீட்டுக்கு செல்லும் வீதியை வீதித்தடைகளை போட்டு பொலிஸார் மூடினர்.

இதனை தொடர்ந்து பிரதேசவாசிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையே முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

பிரித்தானியா, தென் கொரியா, எகிப்து ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஒத்துழைப்பு

நாட்டின் எரிசக்தி, சுற்றுலா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட சில துறைகளை அபிவிருத்தி செய்வதற்கு பிரித்தானியா, தென் கொரியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளன.

குறித்த நாடுகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை இன்று முற்பகல் சந்தித்தனர்.

பிரித்தானிய பாராளுமன்றத்தின் பிரபுக்கள் சபையின் உறுப்பினர் லார்ட் மைக்கல் நெஸ்பி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்த போது, மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி உற்பத்தியை மேற்கொள்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து தமது மகிழ்ச்சியை வௌிப்படுத்தியுள்ளார்.

சூரியசக்தி உள்ளிட்ட ஏனைய மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களூடாக மின்னுற்பத்தியை மேற்கொள்வதற்கு பிரித்தானியா ஒத்திழைப்பு வழங்க தயார் என பிரித்தானிய பாராளுமன்றத்தின் பிரபுக்கள் சபையின் உறுப்பினர் லார்ட் மைக்கல் நெஸ்பி கூறியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பணியாளர்களுக்கு அதிகளவில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க தமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என தென் கொரியாவின் அரசாங்க கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் Koo Yun-cheol ஜனாதிபதியிடம் கூறியுள்ளார்.

சுற்றுலா வலயங்களை மேம்படுத்துவது குறித்து தமது அரசாங்கம் அதிகக் கவனம் செலுத்தியுள்ளதாக எகிப்து தூதுவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வே முக்கியமானது: இந்திய வௌிவிவகார அமைச்சர் தெரிவிப்பு

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முயற்சிக்கும் இலங்கைக்கு இந்தியாவிடம் இருந்து விரைவாக உதவிகள் கிடைப்பதை உறுதிப்படுத்த மேலதிக நேரம் பணியாற்றுவதாக இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி S.ஜெய்சங்கர் தெரிவித்தார்.

அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவிற்காக வழங்கும் ஒரு பில்லியன் டொலர் கடன் உதவி விரைவில் கிடைக்க செயற்படுவதாகவும் இந்திய வௌிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.

அவர் நாடு திரும்புவதற்கு முன்னர் இலங்கையில் உள்ள இந்திய ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே இதனை தெரிவித்தார்.

இதேவேளை, உரிய நடைமுறையை பின்பற்றாமல் அதானி குழுமம் இலங்கையின் எரிசக்தி துறையில் பிரவேசித்துள்ளதாக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் ஊடகவியலாளர்கள் இந்திய வௌிவிவகார அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த கலாநிதி S.ஜெய்சங்கர், இந்திய அரசாங்கம் தனியார் துறையின் முதலீடுகளுடன் தொடர்புபடவில்லை என குறப்பிட்டதாக ‘த ஹிந்து’ செய்தி வௌியிட்டுள்ளது.

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்ட அரசியல் கைதிகளின் விடுதலை, காணிப் பிரச்சினை, காணாமலாக்கப்பட்டவர்கள் விவகாரம் மற்றும் அபிவிருத்தி ஆகிய நான்கு விடயங்களும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நீண்டகால பிரச்சினைகள் என கலாநிதி S.ஜெய்சங்கர் கூறினார்.

இந்த விடயங்கள் தொடர்பாக முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் நல்லிணக்கம் மற்றம் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு வழிவகுக்கும் என இந்திய வௌிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.

ஆனால், அது இந்த விடயங்கள் தொடர்பிலான கலந்துரையாடல்களின் முடிவாக அமையாது எனவும் அரசியல் தீர்வே முக்கியமானது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ராஜபக்ச யாழிற்கு தப்பி வந்தாரா? சந்தேகிக்கும் சிங்கள மக்கள்

ராஜபக்ச யாழிற்கு தப்பி வந்திருக்கலாம்…யாழ் வான் பரப்பில் உலங்கு வானூர்திகள் பறப்பது தெரிந்ததா? என பல சிங்கள ஊடகவியலாளர்களும் சிங்கள முற்போக்காளர்களும் எம்மிடம் வினவுவதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் ராஜபக்ச சகோதரர்கள் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை இராணுவத்தினூடாக கையகப்படுத்தி வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் ஜனாதிபதி மாளிகை ஒன்றை அமைத்திருக்கும் நிலையில் பல சிங்கள சகோதரர்களுக்கு இவ்வாறான சந்தேகம் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized