சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவது அரசாங்கத்தின் விவேகமான முடிவு – ரணில் விக்ரமசிங்க

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவது அரசாங்கத்தின் விவேகமான முடிவு என ஐக்கிய தேசியக் கட்சி யின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.காலியில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பேசிய அவர், குறித்த தீர்மானத்தை எட்டுவதற்கு அரசாங்கம் ஒரு வருட காலத்தினை தாமதப்படுத்தியுள்ளது என சாடினார்.

இதன் காரணமாகவே தற்போதைய நிலைமை மேலும் மோசமாகியுள்ளது என வஜிர அபேவர்தன குற்றம் சாட்டினார்.

இதேவேளை காலதாமதமாக வந்தாலும், அதன் உதவியைப் பெறுவதற்கு ஜனாதிபதி எடுத்த முடிவு குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன கூறினார்.

இந்நிலையில் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை ஐக்கிய தேசியக் கட்சி வரவேற்றுள்ளது.

அமெரிக்க புலனாய்வு அறிக்கையும், இலங்கை விவகாரமும் – உண்மையும் கற்பனையும்

யதீந்திரா

உலகளாவிய புவிசார் அரசியல் போட்டியில் இலங்கை ஒரு முக்கிய விடயமாக நோக்கப்படுவதான, ஒரு கதை நம்மவர்கள் மத்தியிலுண்டு. ஒரு குறிப்பிட்ட தரப்பினர் இப்படியான பார்வைகளை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக சீனாவின் பிரசண்ணம் இலங்கைத் தீவில் அதிகரித்து வருவதாகவும் – இதனால் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு நெருக்கடியிருப்பதாகவும் இவர்கள் கூறுவதுண்டு. இன்னொரு தரப்பினரோ – சற்று ஒரு படிமேல் சென்று, இந்தச் சூழலை கையாளுவதற்கு வேறு வழியின்றி, இந்தியா ஈழத் தமிழர்களை நோக்கி வரவேண்டிவரும் என்றவாறு, கற்பனை செய்வதுமுண்டு. உண்மையில், இவ்வாறான பார்வைகளுக்கு அமைவாகத்தான் விடயங்கள் இடம்பெறுகின்றனவா?

அமெரிக்க தேசிய புலனாய்வு பணியகத்தின் இந்த ஆண்டுக்கான – உலகளவிலான அச்சுறுத்தல் தொடர்பான அறிக்கை வெளியாகியிருக்கின்றது. அமெரிக்க அவதானத்தில் உலகளவிலான அச்சுறுத்தல்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இதில் முதலாவது அச்சுறுத்தலாக, சீனா குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இரண்டாவதாக ரஸ்யாவும் மூன்றாவதாக ஈரானும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. தெற்காசியாவின் அச்சுறுத்தல்கள் தொடர்பிலும் குறித்த அறிக்கையில் ஆராயப்பட்டிருக்கின்றது. தெற்காசியாவின் அச்சுறுத்தல்களாக ஆப்கானிஸ்தான் விவகாரம் முதலாவதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இரண்டாவதாக பாக்கிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பிரச்சினை சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. மூன்றாவதாக, இந்திய-சீன எல்லைப்புற இராணுவ நெருக்கடிகள் தொடர்பில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இது தவிர தெற்காசியாவிலுள்ள வேறு எந்தவொரு நாடுகள் தொடர்பிலும் குறிப்பிடப்படவில்லை. ஏனெனில் தெற்காசியாவிலுள்ள இலங்கை உட்பட்ட, சிறிய நாடுகள் அமெரிக்க அவதானத்திலேயே இல்லை.

இதிலிருந்து ஒரு விடயம் வெள்ளிடைமலை. அதாவது, இந்தியா-பாக்கிஸ்தான் முரண்பாடுகளின் வழியாகவும், இந்திய-சீன பதட்டங்களின் வழியாகவும்தான் தெற்காசிய விவகாரங்களை, அமெரிக்கா உற்று நோக்குகின்றது. தெற்காசியா தொடர்பான அமெரிக்க புரிதலும், அணுகுமுறையும் இந்தியாவை அடிப்படையாகக் கொண்டதென்பது தெளிவாகின்றது. தெற்காசியாவிலுள்ள நாடுகள் இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொள்ளும் உறவு மற்றும் முரண்பாடுகளின் அடிப்படையில்தான், தெற்காசியாவின் உலக முக்கியத்துவம் தீர்மானிக்கப்படும். இந்த பின்புலத்தில் நோக்கினால், அமெரிக்காவின் தெற்காசிய கொள்கை முடிவுகள் அனைத்தும், புதுடில்லியின் முடிவுகளின் அடிப்படையில்தான் அமைந்திருக்கும். புதுடில்லியின் தீர்மானங்களுக்கு அப்பால் சென்று செயற்படுமளவிற்கு, அமெரிக்க மூலோபாய சமூகத்திற்கு எந்தவொரு அவசியமும் இல்லை.

தெற்காசியாவில் இந்தியாவின் முடிவுகளே பிரதானமானது. இந்த பின்புலத்தில் சிந்தித்தால், இலங்கை விடயத்தில் அமெரிக்க ஈடுபாட்டின் எல்லைக்கோடு என்பது எப்போதுமே, இந்தியாவின் ஆர்வங்களுக்கு அமைவாகவே அமைந்திருக்கும். இந்தியாவின் அனைத்து அகுமுறைகளும் அமெரிக்காவிற்கு உகந்தல்ல என்பது உண்மைதான். உதாரணமாக ரஸ்ய – உக்ரெயின் யுத்தத்தின் போது – முழு மேற்குலகும் ரஸ்யாவிற்கு எதிராகவே திரும்பியது. ஆனால் இந்தியா மேற்குலகத்தின் தீர்மானங்களுக்கு ஒத்துழைக்கவில்லை. ரஸ்யாவிற்கு எதிராக ஜ.நா பாதுகாப்புச் சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது, இந்தியா அதில் பங்குகொள்ளவில்லை. ஏனெனில் இந்தியாவிற்கும் ரஸ்யாவிற்கும் நெருங்கிய நட்புறவுண்டு. ரஸ்யாவுடன் நிற்க வேண்டிய தேவை இந்தியாவிற்குண்டு.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் முரண்பாடுகள் இருந்தாலும் கூட, ரஸ்ய விடயத்தில் இந்தியாவும் சீனாவும் அவரவர் நலன்களின் அடிப்படையில் ஒரு புள்ளியில்தான் நின்றனர். சர்வதேச அரசியலிலுள்ள சிக்கலான பக்கம் இதுதான். ஏனெனில் இங்கு அனைத்துமே நலன்களின் அடிப்படையில்தான் நிறுத்துப்பார்க்கப்படுகின்றன. நீதியின், நியாயத்தின், தர்மத்தின் அடிப்படையில் இங்கு எதுவும் நோக்கப்படுவதில்லை. நோக்கவும் முடியாது. எனவே சர்வதேச அரசியல் தொடர்பில் கற்பனை செய்வதைவிடுத்து, அதனை இரத்தமும் சதையுமாக புரிந்துகொள்வதே அவசியமானது.

இலங்கையின் ஆட்சியாளர்கள் தொடர்பில் இந்தியா அறியாத விடயங்கள் எதுவுல்லை. இந்தியாவை பொறுத்தவரையில், இலங்கை விடயத்தில், சிங்களவர், ஈழத் தமிழர் ஆகிய இரண்டு இனக் கூட்டத்திடமிருந்தும் அவமானகரமான அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. இலங்கை தொடர்பில் ஒவ்வொரு முடிவுகளை எடுக்கும் போதும், இந்திய இராஜதந்திர சமூகம் இதனை கருத்தில் கொள்ளும். எனவே இந்தியாவிற்கு புதிதாக கதைகள் சொல்லுவதாக எவரேனும் நினைத்துக் கொண்டால் – அது தவறானது.

உலகில் எந்தவொரு நாடும் அதன் நலன்களை நிறுத்துப் பார்த்துத்தான், வெளிநாட்டு உறவுகளை தீர்மானிக்கும். இந்தியாவின் தலையீடும் அதன் நலன்களிலிருந்துதான் தீர்மானிக்கப்பட்டது. அன்றிருந்த அரசியல் சூழல்நிலைகளினால் அவ்வாறான முடிவுகளை எடுக்க வேண்டிய நிர்பந்தம் இந்தியாவிற்கு ஏற்பட்டது. தனிநாட்டு கோரிக்கையை இந்தியா ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், இந்தியாவில் இருப்பது போன்றதொரு நியாயமான தீர்வை தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதில் இந்தியா அக்கறையுடன் இருந்தது. ஆனால் இந்தியாவுடன் இணைந்து பயணிக்க விடுதலைப் புலிகள் இயக்கம் உடன்படவில்லை. பிரபாகரன், இந்தியாவிற்கு எதிரான பாதையில் பயணித்தார். ஈழத் தமிழர்களுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பலமான நட்புறவு பாதிக்கப்பட்டது. இப்போது நட்பு அறுந்திருக்கும் சூழலில்தான், தமிழ் கட்சிகள் இந்தியாவின் தயவை, தலையீட்டை கோருகின்றன.

ஆனால் இது எழுதுவது போன்று – பேசுவது போன்று – இலகுவானதொரு விடயமல்ல. ஏனெனில் அரசியல் சூழ்நிலைகள் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இலங்கை தொடர்பான இந்தியாவின் பார்வைகள் கணிசமாக மாறிவிட்டது. இந்த நிலையில், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் எச்சமாக இருக்கின்ற 13வது திருத்தச்சட்டத்தை வலியுறுத்தக் கூடிய நிலையில்தான் இந்தியாவின் ஈடுபாடு மட்டுப்பட்டுள்ளது. ஏனெனில் இந்தியா ஒரு பிராந்திய சக்தி. இந்தியாவிற்கு உள்ளுக்குள்ளும், எல்லைகளிலும், அயல்நாடுகளிலும் ஏராளமான பிரச்சினைகள் உண்டு. இந்த ஏராளமான பிரச்சினைகளில் இலங்கையும் ஒன்று. ஆனால் தனது உடனடி அயல்நாடு என்னும் வகையில், இலங்கையின் உள்-விவகாரங்களில் தலையீடு;ம் ஆற்றலை இந்தியா கொண்டிருப்பது உண்மை. ஆனால் அதற்காக, எழுந்தமானமான முடிவுகளை, இந்தியா எடுக்கப் போவதில்லை. ஏற்கனவே விரல்களை சுட்டுக் கொண்ட அனுபத்திலிருக்கும் இந்தியா, ஒவ்வொரு விடயங்களையும் நிறுத்துப் பார்த்துத்தான் விடயங்களை முன்னெடுக்கும் வாய்ப்புள்ளது.

இந்த பின்புலத்தில் சிந்தித்தால் இலங்கையின் மீதான சர்வதேச அவதானம் என்பது இந்தியாவை தாண்டிச் செல்லக் கூடிய ஒன்றாக எப்போதுமே இருக்கப் போவதில்லை. நான், இங்கு சுட்டிக்காட்டும் அமெரிக்க புலனாய்வு அறிக்கை அதற்கொரு தெளிவான சான்று. அதாவது, மேற்குலகத்தின் தெற்காசியா தொடர்பான எந்தவொரு தீர்மானமும் இந்தியாவை அனுசரித்துச் செல்வதாகவே இருக்கும். அதே போன்று, இந்தியாவின் தீர்மானங்கள், கருத்துக்களே உலக அரங்கில் உற்று நோக்கப்படும். ஏனெனில் உலக அரசியல் போக்கில் இந்தியாவிற்கு ஒரு பிரதான இடமுண்டு. குறிப்பாக அமெரிக்காவை பொறுத்தவரையில், அதன் முதன்மையான அச்சுறுத்தலை எதிர்கொள்ளுவதற்கு இந்தியாவின் ஆதரவும் ஒத்துழைப்பும் கட்டாயமானது. அதே போன்று, இந்து சமூத்திர பிராந்தியத்தில் சீனாவின் எழுச்சியை ஒரு எல்லைக்குள் முடக்குவதற்கு அமெரிக்காவின் ஒத்தாசை இந்தியாவிற்கு தேவை. இந்தியா, அமெரிக்காவுடனான, சுதந்திர பாதுகாப்பு உடன்பாட்டை கொண்டிருக்கின்றன. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்தியாவின் கடல்வழியை, இந்தியாவின் படைத்தளங்களை அமெரிக்கா பயன்படுத்த முடியும். அதே போன்று, பிரித்தானியாவுடன் இந்தியா சுதந்திர பாதுகாப்பு உடன்பாட்டை கொண்டிருக்கின்றது. இவ்வாறான உடன்பாடுகளும் நட்புறவும் இருந்தாலும் கூட,

இந்தியா உலக விடயங்களில் முற்றிலுமாக அமெரிக்காவுடன் இல்லை. இந்தியா இப்போதும், நேருகால அணிசாரா கொள்கைப் பாரம்பரியத்தின் அடிப்படையிலேயே அதன் வெளியுறவுகளை தீர்மானிக்கின்றது. இந்தியாவில் எவர் ஆட்சியில் இருந்தாலும் இதுதான் இந்திய வெளிவிவகார கொள்கையின் அஸ்திபாரம். அணுகுமுறைகள் வேண்டுமனால் மாறலாம் ஆனால் அடிப்படை ஒன்றுதான். எனவே சீனாவின் பிரசண்ணத்தின் அடிப்படையில் இலங்கையின் மீது அமெரிக்காவும் இந்தியாவும் பெரியளவில் பதட்டமடைந்திருப்பதாக கற்பனை செய்வது அர்த்தமற்ற ஒன்று. அதே வேளை, இந’தியா வேறு வழியில்லாமல் ஈழத் தமிழர்களை நோக்கிவரும் என்றவாறு கற்பனை செய்தால், அது ஒருவரின் அரசியல் கற்றுக்குட்டித்தனமாகவே இருக்க முடியும். அவ்வாறானவர்கள் தங்களுக்குள் இப்படியொரு கேள்வியை கேட்டுக் கொள்வது நல்லது. அதாவது, சிங்களவர்கள் இந்தியாவிற்கு தேவையான அனைத்தையும் செய்துகொடுத்து. சரணாகதியடைந்தால், ஈழத் தமிழர்கள் விடயத்தை இந்தியா கைவிடலாம்தானே! ஒரு வேளை அப்படி நடந்தால், ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்விற்காக பேசுகின்ற ஒரேயொரு நாடான, இந்தியாவும் கூட, ஈழத் தமிழர்களுக்கு இல்லையென்றாகலாம். ஆனால் அவ்வாறு நடக்காதென்றே – நாம் நம்புகின்றோம். ஆனால் இந்த நம்பிக்கை எப்போதும் கைகொடுக்கும் என்றில்லை. எனவே தமிழ் அரசியல் சமூகம், வாய்ப்புக்கள் இருக்கின்ற போது, அதனை பயன்படுத்திக் கொள்ளும் அரசியலை பழக வேண்டும்.

Posted in Uncategorized

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் யாழ். விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் யாழ். விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக  சனிக்கிழமை காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சுகாஸ் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்

இதன் போது போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்,மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கு, அரசியல் கைதிகளை விடுதலை செய், காணாமலாக்கப்பட்டோரை கண்டறிய சர்வதேச விசாரணை வேண்டும், இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும், கந்தரோடையில் புத்தர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டாதே, நாவற்குழி சிங்கள குடியேற்றத்தை தடுத்து நிறுத்து போன்ற பல்வேறு கோஷங்கள் எழுப்பியவாறு எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

மேலும் காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டறிய சர்வதேச விசாரணை வேண்டும், இனப் படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும், கந்தரோடையில் புத்தர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டாதே, நாவற்குழி சிங்கள குடியேற்றத்தை தடுத்து நிறுத்து போன்ற பல்வேறு கோஷங்களும் எழுப்பப்பட்டது.இந்த எதிர்ப்பு போராட்டத்தை  யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக 9.30 மணியளவில் மேற்கொண்டனர்.

Posted in Uncategorized

அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் இலங்கை வருகிறார்

அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் இன்று முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் ஆசிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளார்.அதன்படி பங்களாதேஷ் மற்றும் இலங்கையிலும் புதுடில்லியில் வெளிவிவகார அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடல்களையும், ஆலோசனைகளையும் நடத்தவுள்ளார்.

இதேவேளை குறித்த தூதுக்குழுவில் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் டொனால்ட் லூ மற்றும் கொள்கை துணைப் பாதுகாப்புச் செயலாளர் அமண்டா டோரி ஆகியோரும் அடங்குவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விஜயங்களின்போது, சிவில் சமூகம் மற்றும் வர்த்தக தலைவர்களையும் சந்தித்து பொருளாதார கூட்டணியை வலுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர்.இந்திய பசுபிக் கூட்டமைப்பிற்கு, அமெரிக்காவின் அர்ப்பணிப்பு மற்றும் ஒத்துழைப்பை காட்டும் நோக்கில் இந்த விஜயம் அமையவுள்ளது.

Posted in Uncategorized

ரெலோவின் மட்டக்களப்பு மாவட்ட செயற்குழுக் கூட்டம்

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ)வின் மட்டக்களப்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் இன்றைய தினம் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மாவட்டப் பணிமனையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தலைமையில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், கட்சியின் உபதலைவரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதித் தவிசாளருமான இந்திரகுமார் பிரசன்னா, கட்சியின் ஊடகப் பேச்சாரளர் சுரேன் குருசுவாமி, மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உள்ளிட்ட ரெலோ கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநகரசபை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) தொடர்பில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வேண்டிய தீர்மானங்கள், எதிர்கால நடவடிக்கைகள், புனரமைப்பு விடயங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இந்தியாவை அடுத்து சீனாவிடம் கையேந்தியது இலங்கை அரசாங்கம்!

அந்நியச் செலாவணி நெருக்கடியை அடுத்து, கடன் கொடுப்பனவுகளை ஒத்திவைத்தல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கடன் உள்ளிட்ட மேலதிக நிதி உதவியை இலங்கை சீனாவிடம் கோரியுள்ளது.

இந்த ஆண்டு சீன வங்கிகளுக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேலதிகமான கடனை இலங்கை அரசாங்கம் செலுத்த வேண்டியுள்ளது.

இந்நிலையில் தற்போதைய நெருக்கடியிலிருந்து விடுபடும் வரை இந்த கொடுப்பனவுகளை தாமதமாக செலுத்த சீனாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, உள்ளூர் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை வாங்குவதற்கான கடனையும் இலங்கை அரசாங்கம் சீனாவிடம் கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை மேலதிக நிதியுதவி கேட்டுள்ளது என்றும் இரு தரப்பும் அதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் சீனத் தூதரகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக இந்தியாவிடமிருந்து 1 பில்லியன் டொலர் கடனை இலங்கை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நாளை (20) முதல் மூடப்படுகிறது

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நாளை (20) இரவு முதல் மீண்டும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

சுத்திகரிப்பு செயற்பாடுகளுக்கு போதுமான மசகு எண்ணெய் இல்லாததால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் ஒருவர் குறிபபிட்டார்.

பல நிறுவனங்களில் மசகு எண்ணெய்க்கு முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், அந்த மசகு எண்ணெய் கிடைக்கும் திகதி குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், முற்பதிவு செய்யப்பட்ட மசகு எண்ணைய் கிடைத்தவுடன், சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்தியாவிலிருந்து வருகை தரும் 20,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பல் நாளை நாட்டை வந்தடையவுள்ளது.

Posted in Uncategorized

“ஜனாதிபதியை விமர்சித்த தொகுப்பாளினி இடைநீக்கம் ” – சிவில் உரிமைகளைக் கட்டுப்படுத்தும் அரசின் முயற்சியா?

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் நாட்டு மக்கள் வெளிப்படையாக விமர்வித்து வருகின்றனர்.

அந்த வகையில் மக்களின் பரிதவிப்புகளை பிரதிபலித்து தனது தனிப்பட்ட முகநூல் பக்கத்தில் பதிவிட்ட காரணத்திற்காக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை சேர்ந்த பெண் அறிவிப்பாளர் ஒரு வர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளமை சிவில் உரிமைகளைக் கட்டுப்படுத்தும் அரசின் செயல் என கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
ரூபவாஹினியில் பல்வேறு சிங்கள நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய பிரபலமான அறிவிப்பாளினி பரமி நிலேப்தா ரணசிங்ஹவே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

தன்னைப் பணி நீக்கியமை தொடர்பாக பரமி நிலேப்தா ரணசிங்ஹ அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில், ‘ஒரு குடிமகன் என்ற ரீதியில் எனது பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் கேள்விக்குறியாகும் போது சமூகப் பொறுப்பாக எனது நலனையும் துயரத்தையும் பற்றி விசாரிப்பவர்களுக்காக நான் இந்தக் குறிப்பை இடுகிறேன்.

நான் பெரும்பான்மையான இலங்கையர்களின் வாழ்வு குறித்து உணர்திறன் கொண்டிருப்பதால் இன்று முதல் தொலைக்காட்சி வளாகம் எனக்கு தடை செய்யப்பட்ட இடமாக மாறியுள்ளது. இது ஒரு நிறுத்தம் இல்லை ஒரு திருப்பம் என தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தொலைக்காட்சி தொகுப்பாளரின் இடைநிறுத்தம் தொடர்பில் ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

இதேவேளை சுதந்திர ஊடகவியலாளர் ராகுல் சமந்தவை கடமையை செய்ய விடாது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா அழுத்தம் பிரயோகித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக சுதந்திர ஊடக இயக்கம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பரமி நிலேப்தி, தனது முகநூல் பதிவுகள் மூலம் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் விமர்சிப்பதால் தொலைக்காட்சி சேவையில் பணியை தொடர வேண்டாம் என ஜனாதிபதி அலுவலகம் தமக்கு அறிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பரமி நிலேப்னா ரணசிங்கவை பணி இடைநிறுத்தம் செய்ய இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் எடுத்த தீர்மானத்தை சுதந்திர ஊடக இயக்கம் கண்டித்துள்ளது.

ஊடகவியலாளர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள் என்ற வலுவான சமிக்ஞையை இந்த சம்பவங்கள் வெளிகொனர்வதாக ஊடக இயக்கம் குறிப்பிட்டுள்ளது.

கருத்து சுதந்திரம், தொலைக்காட்சி தொகுப்பாளரின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல். அத்தோடு, இலங்கையில் ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் அப்பட்டமான முயற்சியென சுதந்திர ஊடக இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஊடக சுதந்திரத்தை அடக்கியாள ஊடக உரிமையாளர்களுக்கோ அல்லது அரசியல் அதிகாரிகளுக்கோ இடமளிக்க முடியாது என சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

உக்ரைனிற்கு ஆதரவாக இலங்கை குரல்கொடுக்க வேண்டும்- உலக நாடுகளின் தூதுவர்கள் கூட்டாக வேண்டுகோள்

உக்ரைனிற்கு ஆதரவாக இலங்கை குரல் கொடுக்க வேண்டும் என மேற்குலக நாடுகளின் தூதுவர்களும் அமெரிக்கா ஜப்பான் ஆகிய நாடுகளின் தூதுவர்களும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அறிக்கையொன்றில் அவர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
இலங்கையில் உள்ள தூதரகங்களின் தலைவர்கள் என்ற அடிப்படையில் இலங்கை அரசாங்கம் எங்களுடன் இணைந்து உக்ரைனிற்கும் சர்வதேச சட்டத்திற்கும் ஐநா பிரகடனத்திற்கும் வாய்மொழி மூல ஆதரவை வழங்கவேண்டும் என தூதுவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் தங்கள் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது.
இறைமையுள்ள ஜனநாயக நாடான உக்ரைன் மீதான ரஸ்யாவின் தூண்டப்படாத நியாயமற்ற சட்டவிரோத படையெடுப்பை நாங்கள் மிகவும் கடுமையாக கண்டிக்கின்றோம்.

இந்த மூர்க்கத்தனமான தாக்குதல்ஐநாசாசனம் உட்பட சர்வதேச சட்டத்தை முற்றிலும் மீறும் செயலாகும். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் மனிதாபிமான பேரழிவை ஏற்படுத்தியுள்ளதை உலகம் அச்சத்துடன் பார்த்தவண்ணமுள்ளளது.
ரஸ்யா பொதுமக்கள் வாழும் பகுதிகள் கட்டமைப்புகள் மீதான தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதன் காரணமாக பொதுமக்களிற்கு பெரும் இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

பெண்கள்குழந்தைகள் முதியர்வர்கள் உட்பட மில்லியன் கணக்காண மக்கள் அயல்நாடுகளிற்கு அகதிகளாக தப்பிவெளியேவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பெண்கள்குழந்தைகள் முதியர்வர்கள் உட்பட மில்லியன் கணக்காண மக்கள் அயல்நாடுகளிற்கு அகதிகளாக தப்பிவெளியேவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இதன் காரணமாக கடந்த 70 வருடங்களில் மிகவேகமாக அகதிகள் நிலைமை ஏற்பட்டுள்ளது.

ரஸ்யாவின் படையெடுப்பு என்பது அமைதியான நாட்டின் மீதான தூண்டப்படாத நியாயமற்ற நடவடிக்கையாகும். உலகில் சமாதானம் அமைதி என்பவற்றிற்கான அடித்தளமாக உள்ள இறைமை மற்றும் ஆள்புல ஒருமைப்பாட்டிற்கு ரஷ்யா அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கியநாடுகள் சாசனம் கடந்த காலங்களில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் அது அமைதி பாதுகாப்பு அபிவிருத்தி நீதி சர்வதேச சட்டங்கள் மற்றும் மனித உரிமைகளின் பக்கம் உறுதியாக நி;ன்றுள்ளது. சர்வதேச சமூகம் உக்ரைனிலும் அனைத்து மனித குலத்திற்கும் இந்த விழுமியங்கள் உறுதிப்படுத்தப்படுவதை தனது அதிகாரத்தை பயன்படுத்தி உறுதி செய்யவேண்டும் என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கைக்கு நாங்கள் முழுமையான ஆதரவை வெளியிடுகின்றோம்.

உக்ரைனிற்கான மிகப்பெரும் ஆதரவு காரணமாக ரஸ்யா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. உக்ரைன்மீதான ரஸ்ய அரசாங்கத்தின் தாக்குதலை கண்டிப்பதில் நாங்கள் ஐக்கியப்பட்டுள்ளோம். மார்ச் இரண்டாம் திகதி ஐக்கியநாடுகள் பொதுச்சபையில் 141 நாடுகள் ரஸ்யாவை கண்டிக்கும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.

இது ரஸ்யா சர்வதேச சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதை வெளிப்படுத்தியுள்ளது. ரஸ்யாவிற்கு கடும் தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக உக்ரைனிற்குஆதரவளிக்கும் நாடுகள் முன்னர் ஒருபோதும் இடம்பெறாதவகையில் ரஸ்யாவிற்கு எதிராக இலக்குவைக்கப்பட்ட தடைகளை விதித்துள்ளன.

உக்ரைனிற்கு எதிரான தாக்குதல்களை தொடரும் ரஸ்யாவின் திறனை குறைப்பதும்,உக்ரைனிற்கு எதிரான விரோதப்போக்கிலிருந்து ரஸ்யாவை பின்வாங்க செய்வதற்கான அழுத்தத்தை கொடுப்பதுமே இதன் நோக்கம்.

வங்கிகள் முதல் எண்ணெய் நிறுவனங்கள் கால்பந்தாட்ட கழகங்கள் வரை புட்டினின் நடவடிக்கைகளிற்கு விளைவுகள் இருக்கும் என்பதையும் அவரது அரசாங்கம் இனிமேல் சர்வதேச சமூகத்தின் ஒரு பகுதியாக விளங்க முடியாது என்பதையும் தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

உக்ரைனின் சகாக்களும் நண்பர்களும் குறிப்பிடத்தக்க அளவு மனிதாபிமான மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கியுள்ளன.பல நாடுகள் உக்ரைனிலிருந்து தப்பிவருபவர்களிற்கு தங்கள் எல்லைகளைதிறந்துள்ளன. தனது படையெடுப்பை நியாயப்படுத்தும்விதத்தில் ரஸ்யா பொய்யான கதைகளை வெளியிடுகின்றது.

ரஷ்யா அதன் படையெடுப்பை நியாயப்படுத்தும் ஒரு போலியான முயற்சியில் உக்ரைன் அரசாங்கத்திற்கு எதிரான போலியான பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது.
அதன் ஜனநாயக அயல்நாடுகளை அழிக்க நினைக்கும் ரஸ்யாவின் பிரச்சாரம் எந்த நியாயமும் இல்லாதது.

நேட்டோ ஆத்திமூட்டுகின்றது என ரஸ்யா பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றது.நேட்டோ எப்போதும் ஒரு தற்பாதுகாப்பு கூட்டணியாகவே இருந்துவந்துள்ளது,அதனால் ரஸ்யாவிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை.
நாங்கள் இலங்கை உக்ரைனிற்கும் சர்வதேச அமைதிமற்றும் பாதுகாப்பிற்கும் ஆதரவளிக்கவேண்டும் என வேண்டுகோள்விடுக்கின்றோம்.

இலங்கையில்உள்ள தூதரகங்களின் தலைவர்கள் என்ற அடிப்படையில் இலங்கைஅரசாங்கம்உக்ரைனிற்கும் ஐநா சாசனம் சர்வதேச சட்டத்திற்குமான குரல்களுடன் இலங்கை இணைந்துகொள்ளவேண்டும் என நாங்கள் வலியுறுத்திக்கேட்டுக்கொள்கின்றோம்.

ரஸ்யா தனது மோதல்களை உடனடியாக நிறுத்தவேண்டும் என வேண்டுகோள்விடுப்பதில்இலங்கை எங்களுடன் இணைந்துகொள்ளவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.உக்ரைனின் இறைமை மீண்டும் நிலைநாட்டப்படுவதை உறுதிசெய்வதற்காக நாங்கள் உலகெங்கிலும் உள்ள எங்கள் சகாக்கள் நண்பர்களுடன் இணைந்து பாடுபடுவோம்.

எதிர்ப்பு போராட்டத்தையடுத்து கந்தரோடை விகாரை வழிபாட்டை இரத்துச் செய்தார் மகிந்த

பிரதமர் மஹிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் – கந்தரோடை விகாரைக்கு வழிபடுவதற்காக வரவிருந்த தனது திட்டத்தை கைவிட்டு உள்ளாரென தகவல் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்றைய தினம் மத ஸ்தலங்களுக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்நிலையில் அதன் ஒரு அங்கமாக கந்தரோடை விகாரைக்கும் சென்று வழிபட தீர்மானித்திருந்தார்.

கந்தரோடை விகாரையில் பிரதமர் அடிக்கல் நாட்டுவதாக செய்தி வெளியான நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்களும் தமிழ் தேசிய மக்கள் முன்ணணியும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீடிரென கந்தரோடை விகாரைக்கான தனது விஜயத்தை ரத்து செய்தார்.

இதனையடுத்து அப்பகுதியில் பிரதமரது பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த பொலிஸாரும் இராணுவத்தினரும் அங்கிருந்து விலகிச்சென்றமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized