விடுவிக்கப்பட்டதும் சாந்தன் இலங்கை திரும்ப விருப்பம்

வேலூர் ஜெயிலில் சாந்தனை வக்கீல் ராஜகுரு சந்தித்து பேசினார். அப்போது சாந்தன் வெளியே வந்த பிறகு தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களுக்கு சென்று வழிபட உள்ளார். அதைத் தொடர்ந்து தனது சொந்த நாடான இலங்கைக்கு செல்ல உள்ளார் எனத் தெரிவித்துள்ளார். ஆனால் அவரது பாஸ்போர்ட் காலாவதியாகிவிட்டது. எனவே பாஸ்போர்ட்டை புதுப்பிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் உள்ள சாந்தனின் தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரி (வயது 75) கூறியதாவது:- 30 ஆண்டுகளாக பிரிந்து இருந்த எனது மகனை தற்போது மத்திய அரசு விடுதலை செய்து அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காகப் பாடுபட்டு அத்தனை காலம் உழைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வளவு பேரும் சேர்ந்துதான் எனது பிள்ளையின் விடுதலைக்கு வழி செய்திருக்கிறீர்கள். தமிழக அரசுக்கும் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். நாங்கள் எப்போதும் இந்த நன்றியை மறக்க மாட்டோம். எனக்குத் தான் இந்த அதிர்ச்சியை தாங்க முடியவில்லை. இருந்தாலும் நலமாக உள்ளேன். எனது பிள்ளை என்னோடு வந்து சேர்ந்துவிடுவான் என உறுதியாக உ ள்ளேன் . இவ்வவாறு அவர் கூறினார்.

எனது பிள்ளையுடன் வாழ்வதற்கே உயிருடன் உள்ளேன் – சாந்தனின் தாயார் உருக்கம்

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதிககளாக இருந்து வரும் நளினி, முருகன், ரவிச்சந்திரன், றொபேர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து இந்திய உச்ச நீதிமன்றம் நேற்றுத் தீர்ப்பளித்துள்ளது.

இது தொடர்பில் சாந்தனின் தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரி (வயது 75) கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
யாழ்ப்பாணம் , வடமராட் சி – உடுப்பிட்டியில் வசித்து வரும் சாந்தனின் தாயார் மேலும் தெரிவிக்கையில், 30 வருடங்களாக கோயில் கோயிலாகத் திரிந்து முன்வைத்த வேண்டுதல்களுக்கு இன்று பலன் கிடைத்துள்ளது.

எனது மகன் விடுதலையாவதற்குக் காரணமான அனைவருக்கும் நன்றி.பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதில் இருந்து எனக்குப் பெரும் மன வருத்தமாக இருந்தது. எனது பிள்ளையை எப்போது விடுதலை செய்வார்கள் என்று ஏக்கமாக இருந்தது. அது இப்போதுதான் நிறைவேறியது.

எனது பிள்ளைக்கு இப்போது 53 வயது. 30 வருடங்களைச் சிறையிலேயே தொலைத்துவிட்டார். எனது உடல்நிலை சரியில்லை. இல்லையென்றால் நான் சென்று எனது பிள்ளையை அழைத்து வருவேன்.

எனது ஆசை எல்லாம் எனது பிள்ளை நல்லபடியாக என்னிடம் வந்து சேரவேண்டும் என்பதுதான். அவருடன் நான் சிறிது காலம் வாழவேண்டும். அதற்காகத்தான் நான் உயிருடன் இருக்கின்றேன் என்றார்.

தமிழகம் போன்று அரசியல் கைதிகளை விரைந்து விடுவிக்க வேண்டும் – அருட்தந்தை சக்திவேல்

தமிழக அரசைப் போன்று தமிழ் மக்களின் நீண்ட காலக் கோரிக்கையான அரசியல் கைதி¸ விடுவிக்க வேண்டும் எனும் குரலுக்குச் செவிமடுத்தும், அரசியல் கைதிகளின் நன்னடத்தையை அடிப்படையாகக் கொண்டும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய துரித நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப் பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் வலியுறுத்தியுள்ளார். அவர் இன்று (12) வெளியிட்டுள்ள ஊடக அ றி க்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:-
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்குடன் தொடர்புபட்ட வர்கள் எனக் குற்றம் சுமத்தப்பட்டு கடந்த 30 வருட காலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களை இந்திய உச்ச நீதிமன்றம் அவர்களின் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்திருப்பதை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு மகிழ்ச்சியோடு வரவேற்றுப் பாராட்டுகின்றது. இவர்களுடைய விடுதலைக்காகப் பாடுபட்ட தமிழக அரசு உட்பட அனைத்துத் தரப்பினருக்கும் நன்றியையும் தெரிவிக்கின்றது.

இந்த வழக்கின் தீர்ப்பை முன் மாதிரியாகக் கொண்டேனும் இலங்கை சிறைகளில் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய அரசு துரித நடவடிக்கை மேற் கொள்ளல் வேண்டும்.

மஹிந்த ராஜபக்௸ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் 12 ஆயிரம் முன் னாள் போராளிகள் சமூக மயமாக்கப்பட்டனர் என்று கூறப்படுகின்றது. கைது செய்யப்பட்டு குறுகிய காலத்திலேயே நன்னடத்தையாளர்களாக அடை யாளம் காணப்பட்டு இவர்கள் சமூக மயமாக்கப்பட்டனர். தொடர்ந்து அரசியல் கைதிகளின் நன்னடத்தை அடிப்படையில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த போது அவரைக் கொலை செய்வதற்காக முயற்சித்தவர் எனப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட் டிருந்த ஒருவர் விடுதலை செய்யப்பட்டார்.

அதேபோன்று கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி காலத்திலும் தண் டனை தீர்ப்பளிக்கப்பட்ட 16 பேர் விடு விக்கப்பட்டதையும் நாம் அறிவோம்.தற்போதைய ஜனாதிபதியும் அண்மையில் சிலருக்கு விடுதலைக்கு அனுமதி அளித்திருந்தார். இதற்கு இவர்களின் நன்னடத்தையும் ஒரு காரணமாகும். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது நீண்ட காலம் சிறைகளில் வாடும் அரசியல் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டிருக் கும் எந்தவொரு காலகட்டத்திலும் சிறைச்சாலை நிர்வாகத்துக்கு எதி ராகவோ, அரசுக்கு எதிராகவோ எதனை யும் செய்யவில்லை. நன்னடத்தை மிக்க வர்களாகவே காணப்பட்டுள்ளனர். அரசியல் கைதிகள் தங்களின் விடுதலையை வலியுறுத்தி நிர்வாகத்துக்கு முன் அறிவிப்பு செய்தே பல்வேறு கால கட்டங்களில் சிறைச்சாலைப் பொருட் களுக்கோ அல்லது வேறு எதற்குமோ எ ந் த வி த மான சேதங்களையும் ஏற்படுத்தாது அமைதிப் போராட்டங்களையே நடத்தியுள்ளனர்.

இந்தப் போராட்டக் காலத்தில் சிறந்த ஒழுக்க நெறியை இவர்கள் கடைப்பிடித் துள்ளனர். தொடர்ந்து சிறைச்சாலை நிர்வாகத்தின் ந ன் ம தி ப் பைப்ப் பெற்றவர்களாகவே உள்ளனர்.பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் கைதிகளில் பலர் ஒப்புதல் வாக்கு மூலமே குற்றவாளிகள் ஆக்கப்பட்டு தண்டனை அனுப விப்பவர்களாக உ ள் ள ன ர் . இதனைக் க ரு த் தி ல் கொண்டும், தமிழக அரசைப் போன்று தமிழ் மக்களின் நீண்ட காலக் கோரிக்கையான அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் எனும் குரலுக்குச் செவிமடுத்தும், அரசியல் கைதிகளின் நன்னடத்தையை அடிப்படையாகக் கொண்டும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அரசு அவசர நடவடிக் கையை மேற்கொள்ள வேண்டும்.

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முயலும் அரசு அந்த மக்களின் நீண்ட காலப் பிரச்சினைகளில் ஒன்றானதும் அரசியல் பிரச்சினையோடு நேரடி தொடர்புபட் ட துமான அ ர சி ய ல் கைதிகளின் விடுதலை பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருதல் வேண்டும். அதுவே அரசு மீதான நம்பிக்கைக்கு வழி வகுக்கும்.

அரசியல் கைதிகளை விரைந்து விடுதலை செய்ய வேண்டும். – செல்வம் எம்.பி

அண்மையில்விடுதலை செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட எட்டுப்பேரில் நான்கு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். ஏனைய நான்கு பேரினதும் விடுதலையில் உள்ள தடங்கல்களை நீக்கி விரைந்து விடுதலை செய்யுமாறு நீதியமைச்சரிடம் கோரிக்கையினை முன் வைத்தார் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமானசெல்வம் அடைக்கலநாதன்

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் இன்று (10) வியாழக்கிழமை இடம்பெற்ற பல சட்டமூலங்கள் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நீதியமைச்சர் அவர்களுக்கு இனப்பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பது வரவேற்கத்தக்கது. இனப்பிரச்சினையைத் தீர்ப்தற்காக அனைத்து கட்சிகளையும் அழைத்து அதற்குரிய பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என அமைச்சரிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

தந்தை செல்வாவினுடைய காலம் முதல் வடகிழக்கிலுள்ள அனைத்து கட்சிகளும் சமஷ்டி அடிப்படையிலானதீர்வினையே வலியுறுத்தி வந்ததை இங்கே குறிப்பிட்டுக் கொள்கின்றேன்.அண்மையிலே வடகிழக்கு ஒருங்கிணைப்புக் குழு 100 நாள் போராட்டத்தை நடாத்தி முடித்துள்ளார்கள். அவர்களுடைய கோரிக்கைகளில் ஒன்றாக சமஷ்டி அடிப்படையிலான தீர்வினை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கையினை முன் வைத்துள்ளார்கள். 13 ஆவது திருத்தச்சட்டத்திலே உள்ள அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு முழுமையாக வழங்கி மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடாத்துமாறு நீதி அமைச்சரிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

நல்லிணக்க அடிப்படையில் அரசியல் கைதிகள் எட்டு பேரை விடுதலை செய்துள்ளீர்கள். அவர்களில் நான்கு பேரே விடுதலை செய்யப்பட்டு வெளியில் வந்துள்ளார்கள்.அவர்கள் விடுதலை செய்யப்பட்டு பத்து நாட்கள் கடந்துள்ளன. ஏனைய நான்கு பேரில் இருவரை புனர்வாழ்வுக்குட்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அந்த இருவருக்குமான புனர்வாழ்வினை நீதியமைச்சர் என்ற வகையில் அதனை ரத்து செய்து அவ்விருவரையும் விரைந்து விடுதலை செய்யுமாறு அமைச்சரிடம் கேட்டுக் கொள்கின்றேன். ஏனைய இருவரையும் நீதிமன்றில் உள்ள வழக்குகள் மீள்ப்பெறப்பட்ட பின் விடுதலை செய்வதாக கூறப்பட்டுள்ளது. எனவே எட்டுப்பேரில் நான்கு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். ஏனைய நான்கு பேரினதும் விடுதலையில் உள்ள தடங்கல்களை நீக்கி விரைந்து விடுதலை செய்யுமாறு நீதியமைச்சரிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

கிறிஸ்மஸ் பண்டிகை வரவுள்ளது. அதற்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்து நல்லிணக்கத்தை வெளிப்படுத்த வேண்டும். அதன்மூலம் அரசாங்கம் நல்லிணத்திற்காக வெளிபடுத்தும் நல்லெண்ண சமிக்ஞையாக பார்க்கக் கூடியதாக இருக்கும்.
அரசியல்கைதிகள் விடயத்தில் நீங்கள் நல்ல முடிவினை எட்டியுள்ளீர்கள். அதனை தொடர்ந்து செய்ய வேண்டும் என தெரிவித்துக்குக் கொண்டு நன்றிகளையும் கூறிக் கொண்டு ஏனையவர்களையும் வெகுவிரைவிலே விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அண்மையிலே ஜனாதிபதி, சிறு தானிய பயிர்ச் செய்கைகள் மற்றும் ஏனைய விவசாய நடவடிக்கைகளுக்காக வன இலாகா வசம் உள்ள விவசாய நிலங்களை விடுவிக்க வேண்டும் என கூறியிருந்தார். ஆனால் வன்னி மாவட்டத்திலே குறிப்பாக வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களிலே மக்கள் உழுது பண்படுத்திய நிலங்களை விதைப்பதற்கு முன்னராக வன இலாகாவினர் அங்கு சென்று அந்த நிலங்களிலே பெரு மரங்களினை நடுவதற்கு முயற்சிக்கின்றார்கள். அமைச்சர் மகிந்தானந்த அளுத்த்கமமே அண்மையில் வவுனியா சென்ற போது வன இலாக வசம் இருக்கும் விவசாய நிலங்களை விடுவித்து பயிர்ச் செய்கை செய்வதன் ஊடாக பெருளாதார ரீதியில் நலிவுற்றிருக்கும் குடும்பங்களை மேலும் முன்னேற்ற முடியும் என வாக்குறுதியும் வழங்கியிருந்தார் எனவே அமைச்சர்யும், ஜனாதிபதியும்அவர்கள் இதனை கருத்தில் எடுத்து விரைந்து ஒரு தீர்வினை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன். விவசாயிகள் விவசாயம் செய்ய மிக ஆர்வத்துடன் இருக்கிறார்கள். ஆனால் வன இலாகா போன்ற திணைக்களங்கள் அவர்களுக்கு தொடர்ச்சியாக தடைகளையும் இடையூறுகளையும் ஏற்படுத்தி வருகின்றார்கள். அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றினாலே விவசாய உற்பத்தித்துறையினூடாக பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும்.

குடிவரவு,குடியகல்வு திணைக்களங்கள் வடக்கிலே கிளைகளைத் திறந்து கடவுச் சீட்டு வழங்கும் செயற்பாடுகளை மேற்கொள்கின்றார்கள். இணைய வழி ஊடாக விண்ணப்பிப்பவர்களுக்கு மூன்று நான்கு மாதங்கள் கழித்து அவர்களுக்கு திகதிகள் வழங்கப்படுகின்றன. ஆனால் சில இடைத்தரகர்கள் மக்களிடம் ஒரு கடவுச்சீட்டுக்கு இருபத்தைந்தாயிரம், முப்பதாயிரம் வாங்கிக் கொண்டு கடவுச்சீட்டினை உடனடியாக பெற்றுக் கொடுக்கிறார்கள். பணம் இருப்பவர்கள் இலஞ்சம் வழங்கி அதனை இடைத்தரகர்கள் மூலமாக பெற்றுக் கொள்கின்றார்கள். வெளிநாட்டிலுள்ள மக்கள் கடவுச்சீட்டை புதுப்பிப்பதற்காக தூதரங்களூடாக கடவுச்சீட்டை அனுப்பி வைக்கும் போது தூதரகங்கள் ஆவணங்களை சரி பார்த்தே விண்ணப்பங்களை பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் இங்கே குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் இருப்பவர்கள் விண்ணப்பத்தில், ஆவணங்களில் பிரச்சினை இருப்பதாக புலம்பெயர் மக்களிடம் கூறி ஐம்பதாயிரம் தொடக்கம் ஒரு இலட்சம் வரை இலஞ்சமாகப் பெற்று குறித்த கடவுச் சீட்டினை விடுவிக்கிறார்கள். ஒரு சில அதிகாரிகள் இவ்வாறு செயற்படுவதால் மக்கள் பல பிரச்சினைகளை எதிர் நோக்குகிறார்கள் என்பதை அமைச்சருக்கு தெரிவித்துக் கொள்கின்றேன் . என்றார்