இலங்கையில் பிரமிட் திட்டத்தில் பணத்தை சுருட்டிய சீனக்கும்பல்

பொரளை லேக் டிரைவ் வீதியில் அமைந்துள்ள தனது வீட்டிற்குள் சிலர் புகுந்து, தம்மை கட்டி வைத்து கொள்ளையடித்ததாக சீன பிரஜை ஒருவரின் முறைப்பாடு போலியானது என கொழும்பு தெற்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுக நகரத்தில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கூறிய 38 வயதான சீன வர்த்தகர், பிரமிட் மோசடிகள் மூலம் 40 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் மற்றும் சொத்துக்களை கொள்ளையிட்டுள்ளார்.

முறைப்பாட்டாளர், அவரது நண்பர் என சீன இரண்டு சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சீன பிரஜை, ஏனைய சீன பிரஜைகள் குழுவுடன் இணைந்து இந்த நாட்டில் பிரமிட் திட்டத்தை மேற்கொண்டு வருவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கசினோ சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்ததை மறைப்பதற்காக இந்த சீன நபரே திட்டமிட்டு கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

20ஆம் திகதி அவர் பொலிசில் முறையிட்டிருந்தார். தனது 40 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை கொள்ளையடித்துள்ளனர் என அதில் குறிப்பிட்டனர்.

கடந்த 19ஆம் திகதி வியாபார நிமித்தம் சென்று விட்டு நள்ளிரவில் வீடு திரும்பியதாக இந்த சீன பிரஜை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். புகாரின்படி, அவர் தனது மொழிபெயர்ப்பாளருடன் ஊதா நிற கேடிஹெச் வாகனத்தில் வீட்டிற்கு வந்துள்ளார். வாகனத்தின் உரிமையாளரே தனது மொழிபெயர்ப்பாளர் மற்றும் சாரதி என சீன நபர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

மொழிபெயர்ப்பாளருடன் வீட்டிற்குள் நுழைந்த போது, வீட்டிற்குள் இருந்த முகமூடி அணிந்த மூன்று நபர்கள் தம்மைத் தாக்கி, கழுத்தில் வாளை வைத்து, கைகளைக் கட்டியதாக சீன வர்த்தகர் பொலிஸாரிடம் தெரிவித்தார். தான் துப்பாக்கி முனையில் கட்டப்பட்டதாக மொழி பெயர்ப்பாளர் போலீசாரிடம் தெரிவித்தார்.

அப்போது ஒருவர் தனது மொபைல் போனை எடுத்து சோதனை செய்ததாக சீன தொழிலதிபர், பொலிசாரிடம் கூறினார். தொலைபேசி பூட்டப்பட்டிருந்ததால் கொள்ளையர்கள் தம்மை அச்சுறுத்தியதாகவும், அதனைத் திறக்கும் போது, தனது நண்பர் ஒருவருக்கு குறுஞ்செய்தி அனுப்பி, தான் சிக்கலில் இருப்பதாகவும் தெரிவித்ததாக சீன பிரஜை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

செய்தி அனுப்பிய சிறிது நேரத்திலேயே வீட்டின் மணி அடித்ததையடுத்து வீட்டில் தங்கியிருந்த கொள்ளையர்கள் பீதியடைந்து வீட்டை விட்டு ஓடிவிட்டதாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார். மூன்று கொள்ளையர்களும் வீட்டின் முன்பக்கக் கதவைத் திறந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அதே நேரத்தில் சீனப் பிரஜையின் நண்பர்களும் வீட்டிற்குள் நுழைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இது வழக்கத்திற்கு மாறான சம்பவம் என்பதால் இது குறித்து முதல் சந்தேகம் எழுந்ததாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இரண்டு நண்பர்கள் வீட்டிற்கு வந்ததாகவும், அவர்கள் தனது மற்றும் மொழிபெயர்ப்பாளரின் கைகளை அவிழ்த்ததாகவும் சீன நாட்டவர் பொலிஸாரிடம் கூறினார். வீட்டைச் சோதனையிட்டபோது, கொள்ளையர்கள் தமது வாகனத்தில் தப்பிச் சென்றதையும், சமையல்காரர் கை, வாய் கட்டப்பட்டு வீட்டின் உள்பக்கமாக அடைக்கப்பட்டிருந்ததையும் கண்டதாக கூறியுள்ளார்.

23.8 மில்லியனுக்கும் அதிகமான பெறுமதியான அமெரிக்க டொலர்கள், யுவான், தாய்லாந்து நாணயம், ஹொங்கொங் டொலர்கள், திர்ஹாம்கள் மற்றும் இலங்கை ரூபா என்பவற்றையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளதாக சீன பிரஜை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அதுமட்டுமின்றி 11 கையடக்கத் தொலைபேசிகள், 7 மடிக்கணினிகள், ஐந்து வெளிநாட்டு மதுபான போத்தல்கள், அர்மானி கைக்கடிகாரம், பெறுமதியான இடுப்புப் பட்டை மற்றும் வாகனங்கள் என்பன கொள்ளையிடப்பட்ட ஏனைய பொருட்களில் அடங்கும். அந்த சொத்துக்களின் மதிப்பு 17.7 மில்லியன் ரூபாய்.

கமரா அமைப்பு இருந்தாலும், பாதுகாப்பு கமரா காட்சிகளை சேமித்து வைத்திருக்கும் டி.வி.ஆரும் கொள்ளையர்களால் திருடப்பட்டுள்ளதாக சீன நாட்டவர் புகார் அளித்துள்ளார்.

இந்த சீன பிரஜைகள் தங்கியிருந்த வீடு 70 மில்லியன் ரூபாய்க்கு வாடகைக்கு விடப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. இந்த வீட்டில் இருந்தே இந்த மோசடி நடந்துள்ளது. பொலிசார் அந்த வீட்டை சோதனையிட்ட போது, பிரமிட் திட்டத்தில் ஈடுபட்ட சீன பிரஜைகள் கும்பல் தப்பிச் சென்றதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்த சீன பிரஜைகள் ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த நாட்டில் தங்கியிருந்து இந்த சர்வதேச பிரமிட் திட்டத்தை ஒன்லைனில் நடத்தி வருவதாகவும் தெரியவந்துள்ளது. இதற்காக பயன்படுத்தப்பட்ட பல மடிக்கணினிகளையும் பொலிசார் கண்டுபிடித்தனர். சோதனையின் போது, அங்கு தங்கியிருந்த சுமார் 15 சீன பிரஜைகள் தப்பிச் சென்றுள்ளனர். இந்த மோசடியில் பயன்படுத்தப்பட்ட சுமார் 40 மடிக்கணினிகளை அவர்கள் எடுத்துச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

விசாரணையில், வாகன சாரதியகவும் மொழிபெயர்ப்பாளராகவும் செயற்பட்ட நபருக்கு திட்டத்தை செயல்படுத்த ரூ.1.5 மில்லியன் வழங்கப்பட்டது தெரிய வந்தது..

இந்த நபர் கொழும்பு துறைமுக நகரத்தில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சீன பிரஜையுடன் பிரமிட் திட்டத்தில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சீனப் பிரஜைகள் இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் சிகரெட் கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து முப்பதாயிரம் சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

கொழும்பில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏழு வீடுகளையும் இந்த கொள்ளையர்கள் வாங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சீன குற்றக்குழுக்களின் கேந்திர நிலையமாக இலங்கை மாறும் அபாயம்

அண்மையில் இலங்கையில் இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட 39 சீன பிரஜைகளை அளுத்கம பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பொலிஸ் அறிக்கைகளின்படி, சந்தேக நபர்கள் பல மாதங்களாக இணையம் ஊடாக பல்வேறு நாடுகளில் உள்ள தனிநபர்களிடமிருந்து மில்லியன் கணக்கான டொலர்களை சட்டவிரோதமாக பெற்றுள்ளனர்.

அளுத்கம, களுஅமோதர பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றில் குறித்த குழுவினர் தங்கியிருந்ததாகவும், பல்வேறு தூதரகங்கள் ஊடாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்டபோது, சீனப் பிரஜைகள் பல ஸ்மார்ட்போன்கள் மற்றும் பணத்தை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, அவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

இணையவழி மோசடிக்காக சீன நாட்டவர்கள் வேறொரு நாட்டில் தடுத்து வைக்கப்படுவது இந்த மாதத்தில் இது இரண்டாவது முறையாகும். அதிகரித்து வரும் இந்த பிரச்சினையை சமாளிக்கவும், மேலும் பரவாமல் தடுக்கவும் அதிகாரிகள் முனைப்புடன் செயற்பட வேண்டும். இதுபோன்ற மோசடி நடவடிக்கைகள் ஒழிக்கப்படுவதை உறுதி செய்வது அவசியம், இது அனைவருக்கும் பாதுகாப்பான இணையச் சூழலுக்கு வழிவகுக்கும்.

முன்னதாக, காத்மாண்டுவின் வௌ;வேறு பகுதிகளில் இதேபோன்ற நடவடிக்கைகளுக்காக 122 சீன பிரஜைகளை கைது செய்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இணையவழி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஒன்பது சீன நபர்களை நேபாள பொலிஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் இலங்கையில் கைது செய்யப்பட்டவர்களிடத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிராகரம், இந்த முறை, சந்தேக நபர்களுக்கு எதிராக இணையவழி மோசடி வழக்கைத் தொடர வலுவான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.

சந்தேக நபர்கள் வாட்ஸ்அப் மூலம் மக்களை கவர்ந்திழுக்கும் சலுகைகளை வழங்குவார்கள், பின்னர் டெலிகிராம் மூலம் இணையவழி வகுப்புகளில் சேருவதற்கு அழைத்து அவர்களை நம்ப வைப்பார்கள் என்று பொலிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளர்.

இந்த மோசடித் திட்டத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் சுமார் 4.7 மில்லியன் ரூபாவை இழந்துள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளதோடு குறித்த பாதிக்கப்பட்ட நபரை 30சதவீதத்திற்கு மேல் நிகர லாபம் தரும் இணையவழி வணிகத்தில் முதலீடு செய்வதாகக் கூறியே ஏமாற்றியதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதுபோன்ற இணையவழி மோசடி சம்பவங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதிச் சுமை மட்டுமல்ல, உலகளாவிய இணையப் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது.

எனவே, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், இதுபோன்ற மோசடி நடவடிக்கைகளைத் தடுக்கும் நடவடிக்கைகளை செயற்படுத்துவதும் அவசியம். குற்றவாளிகளுக்கு எதிராக அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுப்பது மற்றும் அவர்களின் குற்றங்களுக்கு அவர்கள் பொறுப்பேற்கப்படுவதை உறுதி செய்வதும் முக்கியமாகின்றது.

சந்தேகநபர்களான சீனப்பிரஜைகள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக மோசடி செய்து, மில்லியன் கணக்கான மக்களை ஏமாற்றி, இலங்கைக்கு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் கடத்தல், மனிதக் கடத்தல் மற்றும் சட்டவிரோத சூதாட்டம் போன்ற சீனப் பிரஜைகளை உள்ளடக்கிய குற்றச் செயல்கள் உள்நாட்டில் அதிகரித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் சீன முதலீடுகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளின் அதிகரிப்பு மற்றும் சுற்றுலாப் பயணிகளாக உள்வரும் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக அதிகளவான சீன பிரஜைகள் காணப்படுகின்றார்கள். அவர்களில் பெரும்பாலோர் சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் என்றாலும், சிறுபான்மையினர் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இப்பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது, அண்மைய ஆண்டுகளில் பலரை கைது செய்து வருகிறது.

எவ்வாறாயினும், சீன நிதியுதவி திட்டங்களில் பணியாற்றுவதற்காக சீன குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்து வரப்படுவது தவறான முன்னுதாரணமாகின்றது. மேலும் இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு குறித்து கேள்விகளை எழுப்புகிறது. வெளிநாட்டுப் பிரஜைகளின் குற்றச் செயல்களை ஒடுக்குவதற்கு அரசாங்கம் முயற்சித்த போதிலும், அது தொடர்ந்து கரிசனை செலுத்த வேண்டியதாக உள்ளது.

சீன நிறுவனங்கள் தங்கள் திட்டங்களுக்கு உதவ மலிவான தொழிலாளர்களை தேடுவது இந்த போக்குக்கு ஒரு காரணமாக இருக்கலாம். குறைந்த கூலிக்கு வேலை செய்ய தயாராக இருக்கும் சீன குற்றவாளிகளை கொண்டு வருவதன் மூலம், இந்த நிறுவனங்கள் தொழிலாளர் செலவில் பணத்தை சேமிக்க முடியும்.

எவ்வாறாயினும், இந்த நடைமுறை நெறிமுறையற்றது மட்டுமல்ல, இது இலங்கை பிரஜைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தலாம். சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நெருங்கிய உறவே இலங்கையில் சீனக் குற்றவாளிகளின் ஊடுருவலுக்கு மற்றொரு காரணமாக இருக்கலாம்.

இந்தப் போக்கின் பின்னணியில் உள்ள காரணங்கள் எதுவாக இருந்தாலும், சீனக் குற்றவாளிகள் இலங்கையில் இருப்பது கவலைக்குரியது என்பது தெளிவாகிறது. இந்த நபர்கள் இலங்கை பிரஜைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம், மேலும் அவர்கள் நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்கும் பங்களிக்கலாம். அதுமட்டுமன்றி இலங்கையை குற்றச்செயல்களின் கேந்திரமாகக் கூட மாற்றலாம்.

இலங்கை மனித உரிமைகள் குறித்து 4 ஆவது முறை ஆராயவுள்ளது ஐ.நா

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின், உலகளாவிய கால ஆய்வு செயற்குழு, நான்காவது முறையாக இலங் கையின் மனித உரிமைப் பதிவுகள் தொடர்பான விடயங்களை ஆராயவுள்ளது.

கடந்த 23 ஆம் திகதி ஆரம்பமான இந்த அமர்வு, பெப்ரவரி 3 வரை இடம்பெறுகின்றது. இதில் இலங்கை மனித உரிமை நிலை தொடர்பாக ஆராயும் கூட்டம் பெப்ரவரி முதலாம் திகதி முதல் 3ஆம் திகதி வரை நடைபெறுகின் றது. ஏற்கனவே இந்த செயற்குழுவில் இலங்கையின் மனித உரிமை மதிப்பாய் வுகள், முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது முறையின் கீழ் 2008 மே, 2012 ஒக்ரோபர், மற்றும் 2017 நவம் பர் ஆகிய வருடங்களில் இடம்பெற்றன.

இந்தநிலையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினால் பரிந் துரைக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர் பில் இலங்கை அரசாங்கத்தினால் வழங் கப்பட்ட முன்னேற்ற அறிக்கை, சிறப்பு நடைமுறைகள், மனித உரிமைகள் உடன் படிக்கை அமைப்புகள் மற்றும் பிற ஐக்கிய நாடுகளின் நிறுவனங்கள் என அறியப்படும் சுயாதீன மனித உரிமை நிபுணர்கள் மற்றும் குழுக்களின் அறிக் கைகளில் உள்ள தகவல்கள்,தேசிய மனித உரிமைகள் நிறுவனங்கள், பிராந்திய அமைப்புகள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் உட்பட பிற பங்குதாரர்களால் வழங்கப்படும் தகவல்கள் என்பன இந்த கலந்துரையாடலின்போது மதிப்பாய்வு செய்யப்படவுள்ளன.

பெப்ரவரி முதலாம் திகதி ஜெனிவா வில் முற்பகல் 9மணிக்கு நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் இலங்கையின் பிரதிநிதி கள் குழுவுக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமை தாங்கவுள்ளார்.

அல்ஜீரியா, பெரிய பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்து மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கையின் மீளாய்வுக்கான அறிக்கை யாளர்களாக பணியாற்றவுள்ளனர்.

இந்தநிலையில் மதிப்பாய்வுக்கான இறுதி நாளான பெப்ரவரி 3ஆம் திகதி இலங்கைக்கு அளிக்கப்பட்ட பரிந்துரை களை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின், உலகளாவிய கால ஆய்வு செயற்குழு இறுதிப்படுத்தவுள்ளது. அத் துடன் தமது கருத்துக்களையும் அது வெளியிடவுள்ளது.

நாய் மீதான துஷ்பிரயோகம் – விசாரணையை கோரும் பீட்டா (PETA) அமைப்பு

ஜனாதிபதியின் ஆலோசகர் ஒருவர் நாயை பாலியல் ரீதியில் துஸ்பிரயோகம் செய்தமை குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என சர்வதேச விலங்குகள் உரிமை அமைப்பான பீட்டாPeople for the Ethical Treatment of Animals (PETA) வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜனாதிபதியின் ஆலோசகருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை அரசாங்கம் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம், அவ்வாறான விடயம் இடம்பெற்றது உண்மை என்றால் இலங்கையின் சட்டங்களின் கீழ் தண்டனை வழங்கவேண்டு;ம் என பீட்டாவின் ஈவிரக்கமற்ற செயல் குறித்த விசாரணை பிரிவின் சிரேஸ்ட துணை தலைவர் டப்னா நச்சிவினோமிச்  தெரிவித்துள்ளார்.

விலங்குகளை பாலியல் ரீதியில் துன்புறுத்துபவர்கள் பின்னர் மனிதர்களிற்கு எதிராக அவ்வாறான செயல்களில் ஈடுபடுவது அனேகமாக இடம்பெற்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் ஆலோசகர் நாயை துன்புறுத்தும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகியது.

இந்த வீடியோ வெளியான சில மணிநேரத்தில்  ஜனாதிபதியின் ஆலோசகர் அசு மாரசிங்க தனிப்பட்ட காரணங்களிற்காக தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இந்த விடயங்களை செய்தியாளர் மாநாட்டில் அம்பலப்படுத்திய ஹிருணிகா பிரேமசந்திர ஆதர்ச கரந்தனா என்ற பெண்ணிண் செல்லப்பிராணிக்கே இந்த நிலை ஏற்பட்டது என தெரிவித்தார்.

செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த அந்த பெண் முகநூல் ஊடாக சந்தித்த பின்னர் மாரசிங்கவின் காதலியாக மாறி அவருடன் இரண்டு வருடம் ஒரே வீட்டில் வாழ்ந்ததாக தெரிவித்தார்.

நாயின் செயற்பாடுகளில் மாற்றத்தை அவதானித்த பின்னர் இரகசியமாக இந்த விடயத்தை பதிவு செய்ததாக அவர் தெரிவித்தார்.