இந்தியாவுக்கு இ.தொ.கா தலைவர் திடீர் விஜயம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் இந்தியாவுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்தியாவின் கூடலூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெயசீலனின் அழைப்பின் பேரிலே அவர் இந்தியா சென்றுள்ளார். கூடலூர் TENTEA தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் சிவில் அமைப்பினர் தாங்கள் எதிர்நோக்கும்  பிரச்சினைக்கு  உடனடி தீர்வு பெற்றுத்தருமாறு  உதவி கோரியுள்ளனர்.

அதற்கமையவே அவர் இந்தியா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இ.தொ.காவிற்கும் இடையில் கலந்துரையாடல்

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்து, TANTEA தோட்டங்களில் குடியேறியுள்ள பெருந்தோட்ட சமூகம் எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினை தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும்  இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்து சென்றவர்களின்  வாழ்வாதாரத்தை உறுதிசெய்யும் கூட்டுப் பொறுப்பு இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு அரசாங்கங்களுக்கும் உண்டு.

மேலும் மலையகத்தில் நிர்மாணிக்கப்பட வேண்டிய 10,000 வீடுகள் குறித்தும், பெருந்தோட்ட இளைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் முகமாக தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில்  இந்திய ஆசிரியர்களை நியமித்து,புதிய பாடநெறிகள் ஆரம்பிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை தொழிலாளர் காங்ரஸால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என இதன் போது இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் அரசியல் பிரிவுக்கான முதன்மைச் செயலாளர் திருமதி பானு ஆகியோர் தெரிவித்தனர்.