மேலும் 300 பொருட்களின் இறக்குமதிக் கட்டுப்பாட்டில் தளர்வு

செப்டம்பர் முதல் வாரத்தில் மேலும் 300 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வருடத்தில் நாட்டிற்கு 45.4 மில்லியன் டொலர் வெளிநாட்டு பணம் கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அண்மைய பொருளாதார நெருக்கடியுடன் சில பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.

இதற்கிடையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் திகதி, 1,465 பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்திருந்தது. அதன் பிறகு டிசம்பர், பெப்ரவரி மற்றும் ஜூன் மாதங்களில் பொருட்களின் ஒரு பகுதி மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.

 

 

வாகனங்கள் தவிர்ந்த ஏனைய பொருட்களுக்கான இறக்குமதித் தடை விரைவில் நீக்கம்

வாகனங்கள் தவிர மற்ற அனைத்து இறக்குமதி கட்டுப்பாடுகளையும் செப்டம்பர் முதல் வாரத்தில் அரசாங்கம் நீக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிதியமைச்சு அதிகாரிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சின் போதே ஜனாதிபதியின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க இதனை கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை 286 பொருட்களுக்கான இறக்குமதித் தடை நீக்கப்பட்டுள்ளதுடன் வாகனங்கள் உட்பட மேலும் 930 பொருட்களின் இறக்குமதித் தடை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

இதேநேரம் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட 500 பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அவற்றில் 250 பொருட்களுக்கான இறக்குமதி தடையை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

ஏற்கனவே தடை செய்யப்பட்ட பொருட்களை இரண்டு கட்டங்களாக செப்டம்பர் முதல் வாரத்திற்குள் அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

300 பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்வு

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஆணையாளர் நாயகம் 300 பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி வர்த்தமானி வௌியிட்டுள்ளார்.

இலத்திரனியல் உபகரணங்கள், உடற்சுகாதார பொருட்கள், உணவுப்பொருட்கள், நிர்மாண பணிகளுக்கு தேவையான பொருட்கள் உள்ளிட்ட 300 பொருட்களுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகளே இவ்வாறு தளர்த்தப்பட்டுள்ளன.

நேற்று (09) முதல் அமுலாகும் வகையில், இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டொலர் பெறுமதி அதிகரிப்பு காரணமாக கடந்த காலங்களில் இறக்குமதிகள் தொடர்பான தடைகள் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

843 பொருட்களுக்கான இறக்குமதித் தடையில் தளர்வு

இலங்கை மத்திய வங்கியால் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரம்பை தளர்த்தியதுடன், 843 வகையான பொருட்களுக்கு அந்தப் பொருட்களை இறக்குமதி செய்யும்போது பொருட்களின் மொத்த மதிப்புக்கு சமமான ‘பண வரம்பு தேவை’ (பண வரம்பு) வரம்பை நீக்கியுள்ளது.

இந்த 843 பொருட்களில் கையடக்கத் தொலைபேசிகள், குளிர்சாதனப் பெட்டிகள், மின் விசிறிகள், பழங்கள் உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்கள் உள்ளடங்குவதாகவும், இந்த தீர்மானத்தினால் எதிர்காலத்தில் பல அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைவடையும் எனவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

நிலக்கரி இறக்குமதிக்கு நிதியில்லை – மின்சார சபை தலைவர்

24 மணித்தியாலமும் தடையின்றி மின்சாரத்தை வழங்க வேண்டுமாயின் அதற்கான வளத்தை உரிய தரப்பினர் மின்சார சபைக்கு வழங்க வேண்டும்.

நிதி திரட்டலில் பாரிய நெருக்கடி காணப்படுகிறது. நிலக்கரி இறக்குமதிக்கு நிதியில்லை என இலங்கை மின்சார சபையின் தலைவர் நளிந்த இலங்ககோன் தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபையின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

மின்கட்டமைப்பு சேவையை வினைத்திநனாக பேணுவதற்கும், 24 மணித்தியாலங்களும் தடையின்றி மின்சாரத்தை வழங்கும் வகையில் 20 கொள்கை திட்டங்களை மின்சாரத்துறை அமைச்சிடம் முன்வைத்தோம்.

அதிக மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறும் காலத்திலும்,வறட்சியான காலத்திலும் மின்னுற்பத்தியை தடையின்றி முன்னெடுத்தல், குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திட்டங்கள் என 20 திட்டங்களை உருவாக்கியுள்ளோம்.

இந்த 20 திட்டங்களை செயற்படுத்த வேண்டுமாயின் அதற்கான வளத்தை உரிய தரப்பினர் பெற்றுக்கொள்ள வேண்டும்.

நிலக்கரி கொள்வனவிற்கான நிதியை திரட்டிக் கொள்வது பாரிய நெருக்கடியாக உள்ளது.பணம் செலுத்தி 21 கப்பல்களில் இருந்து நிலக்கரியையும், கடன் பற்று பத்திரரம் ஊடாக 12 கப்பல்களில் இருந்து நிலக்கரியையும் பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நுரைச்சோலை அனல் மின்நிலையத்திற்காக கொள்வனவு செய்யப்பட்ட நிலக்கரி கப்பல் நேற்று முன்தினம் நாட்டை வந்தடைந்துள்ள நிலையில் அந்த கப்பலுக்கு பணம் செலுத்த முடியாத காரணத்தினால் நிலக்கரியை தரையிறக்க முடியாத நிலை காணப்படுகிறது.

மின்னுற்பத்திக்கான எரிபொருள் மற்றும் நிலக்கரி ஆகியவற்றை கொள்வனவு செய்ய ஒரு சதம் கூட இனி வழங்க முடியாது என அரசாங்கம் கடந்த முதலாம் திகதி தெரிவித்துள்ளது. மின்னுற்பத்திக்கு தேவையான மூல பொருட்களை இறக்குமதி செய்ய நிதியை திரட்டிக் கொள்வது சிரமமாக உள்ளது.

24 மணித்தியாலமும் தடையின்றி மின்சாரத்தை வழங்க வேண்டுமாயின் உரிய தரப்பினர் அதற்கான வளத்தை வழங்க வேண்டும்.இல்லாவிடின் எதிர்வரும் நாட்களில் பாரிய நெருக்கடி ஏற்படும் என்றார்.

முட்டை இறக்குமதியில் வைரஸ் அபாயம் உள்ளது – கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம்

விருப்பத்திற்கு முட்டைகளை இறக்குமதி செய்தால், “Avian Influenza” எனும் வைரஸ் நோய் இலங்கைக்கு வரும் அபாயம் அதிகம் என அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே, முட்டை இறக்குமதி செய்ய எடுக்கப்பட்டுள்ள முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் சங்கம் கேட்டுக்கொள்கிறது.

சந்தையில் முட்டை விலை அதிகரிப்பு காரணமாக முட்டையை இறக்குமதி செய்ய அரசாங்கம் நேற்று (02) தீர்மானித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் கால்நடை வைத்தியர் சிசிர பியசிறி இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

பறவைக் காய்ச்சல் இலங்கைக்குள் வருவதைத் தடுப்பதில் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் பெரும் பங்காற்றியுள்ளது. கால்நடை மருத்துவர்கள், கால்நடை புலனாய்வு அதிகாரிகள், மற்றும் ஆய்வுக்குப் பிந்தைய நிறுவனங்கள், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்துடன் இணைந்து பறவைக் காய்ச்சலைத் தடுக்கின்றன. இலங்கைக்குள் நுழைவதிலிருந்து, அதுபோன்ற நோய் இந்த நாட்டிற்கு வந்தால், அது மிகவும் சிக்கலாகிவிடும்.” எனத் தெரிவித்திருந்தார்.

Posted in Uncategorized

சில துறைகளுக்கான பொருட்களின் இறக்குமதி தடையை நீக்க நடவடிக்கை

நாட்டில் காணப்பட்ட கடும் டொலர் நெருக்கடி காரணமாக ஆயிரத்துக்கும் அதிகமான பொருட்களுக்கு இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஏற்றுமதி தொழிற்துறை, விவசாயத்துறை, மின்பிடித்துறை உள்ளிட்டவற்றுடன் தொடர்புடைய பொருட்களுக்கான இறக்குமதி தடையை நீக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதுவரை 670 பொருட்களுக்கான இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும், இவற்றில் பெரும்பாலானவை எமது நாட்டில் தயாரிக்கப்படக்கூடியவை ஆகும்.

வெசாக் கூடுகள், பட்டங்கள் மற்றும் யோகட் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இவற்றில் உள்ளடங்குகின்றன.

எனவே, அடுத்த வருடத்திலிருந்து இவ்வாறான பொருட்களை மீண்டும் இறக்குமதி செய்வதா அல்லது நாமே தயாரிப்பதா என்பது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.

கடந்த சில மாதங்களில் 1465 பொருட்களுக்கு இறக்குமதி தடை விதிக்கப்பட்டது. நாட்டில் நிலவிய கடும் டொலர் தட்டுப்பாடு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

எவ்வாறிருப்பினும், அண்மையில் 795 பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கப்பட்டது. 470 பொருட்களுக்கான இறக்குமதி தடை தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளது. அவை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஏற்றுமதி தொழிற்துறை, விவசாயத்துறை, மின்பிடித்துறை உள்ளிட்டவற்றுடன் தொடர்புடைய பொருட்களுக்கான இறக்குமதி தடையை நீக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.