பன்டோரா விவகாரம்; சிறப்பு விசாரணை ஆரம்பம்

சர்வதேச ரீதியில் சர்ச்சையை ஏற்படுத்திய, பன்டோரா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் மீது உள்நாட்டு இறைவரித் திணைக்களம் சிறப்பு விசாரணையை ஆரம்பித்துள்ளதாக அறியமுடிகிறது.

பன்டோரா  ஆவணங்களில் உள்ள இலங்கையர்களின் வரி செலுத்துதல் தொடர்பான வரி கோப்புகள் பரிசோதிக்கப்பட்டு ஏதேனும் வரி ஏய்ப்பு உள்ளதா என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.